search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare Assistance"

    • காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடை பெற்றது. கூட்டத்தில் கலெ க்டர் ஷஜீவனா தலைமை வகித்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • முகாமில் பல்வேறு திட்டங்கள் சார்பில் 1061 பயனாளி களுக்கு ரூ.6.94 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    தேனி:

    தேனி அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடை பெற்றது. கூட்டத்தில் கலெ க்டர் ஷஜீவனா தலைமை வகித்து நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது,

    பருவகாலங்களில் விவசாயிகள் இடுபொரு ட்கள் பெறுவதற்கு தேவை யான செலவினங்களை மேற்கொள்ள தங்களது வீடுகளில் உள்ள நகைகளை அடகு வைத்து கடனாக பெற்று விவசாயம் செய்து வருவதாக தெரிவித்தார்கள். இதை தவிர்ப்பதற்காக அனைத்து தேசியமயமாக்க ப்பட்ட வங்கிகளிலும் கூட்டுறவு வங்கிகளிலும், விவசாய பணிகளுக்கென விவசாய கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    விவசாய கடன் அட்டை பெறுவதன் மூலம் ரூ.1.60 லட்சம் வரையில் நில உடைமை அடிப்படையில் பிணையமில்லா கடனாக பெறலாம். மேலும், அசலுடன் வட்டியை குறித்த காலத்தில், சரியாக செலுத்தும் விவசாயிகளுக்கு, 3 சதவீத வட்டி தொகை, ஊக்கத்தொகையாக விவசாயிகள் வங்கி கண க்கில் வரவு வைக்கப்படும்.

    விவசாயிகள் உழவன் செயலி மற்றும் இ-நாம் செயலியை பயன்படுத்தி தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை ஆன்லைன் மூலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து அதிக லாபம் பெறமுடியும். மேலும், இணையவழி மூலம் விவசாய பொருட்களை விற்பனை செய்வது தொட ர்பான சந்தேகங்க ளுக்கு வேளாண்துறை அதிகாரி களை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் என்றார். இந்த முகாமில் பல்வேறு திட்டங்கள் சார்பில் 1061 பயனாளி களுக்கு ரூ.6.94 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இம்முகாமில் தேனி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் கவிதா நந்த கோபால், ஊராட்சிமன்ற தலைவர்ரமேஷ்பாபு, வட்டாட்சியர் சரவணபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாளை யூனியன் கொங்கந்தன்பாறை சமுதாய நல கூடத்தில் கொங்கந்தான்பாறை ஊராட்சி மற்றும் புதுக்குளம் ஊராட்சிகளுக்கு இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 76 பயனாளிகளுக்கு ரூ.18.87 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் மொத்தம் 159 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது.

    நெல்லை:

    பாளை யூனியன் கொங்கந்தன்பாறை சமுதாய நல கூடத்தில் கொங்கந்தான்பாறை ஊராட்சி மற்றும் புதுக்குளம் ஊராட்சிகளுக்கு இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் கலெக்டர் கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 76 பயனாளிகளுக்கு ரூ.18.87 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் மொத்தம் 159 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது.

    இதில் 98 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 61 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.

    இம்முகாமில் சுகாதாரத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் செயல்முறை பணிகள் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சியினை, கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.

    தொடர்ந்து அவர் மக்களிடையே பேசுகையில், முதல்-அமைச்சர் ஏழை- எளிய மக்களுக்காக தொ டர்ந்து பல்வேறு திட்ட ங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மக்களை தேடி அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று அவர்களது குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கு மற்றும் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

    இம்முகாமில் வருவாய்துறையின் சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா, தனிப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட 65 பயனாளிகளுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பிலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 3 பயனாளிக்கு ரூ.15,584 மதிப்பில் தேய்ப்பு பெட்டி மற்றும் விலையில்லா தையல் எந்திரமும், ரூ.14.85 லட்சம் மதிப்பில் ஒரு பயனாளிக்கு டிராக்டர் என மொத்தம் 77 பயனாளிகளுக்கு ரூ.18.87 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்க ப்பட்டுள்ளது என்றார்.

    முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவகாமசுந்தரி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அனிதா, உதவி ஆணையர் (கலால்) ராமநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் தனலெட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கலைச்செல்வி எபலேசன் (கொங்கந்தான்பாறை), முத்துக்குட்டி பாண்டியன் (புதுக்குளம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • ரூ.18 ஆயிரத்து 700-ஐ ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கினர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பாக வெம்பக்கோட்டையில் உள்ள சிபியோ ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட், செஸ் போன்ற விளையாட்டு உபகரணங்களும், இல்லத்திற்கு தேவையான உபயோக பொருட்களும் வழங்கப்பட்டது.

    இதில் துறை தலைவர் பெமினா, உதவி பேராசிரியர்கள் வைரமுத்து, மதுமதி மற்றும் 48 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து குழந்தைகளுக்கு மத்திய உணவு வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஆங்கித்துறை மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் ரூ.18 ஆயிரத்து 700-ஐ ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கினர்.

    • அமைச்சர்கள் கே.என். நேரு, முத்துசாமி தொடங்கிவைத்தனர்
    • அக்டோபரில் இருந்து கோவைக்கு 2 நாளுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்படும் என அறிவிப்பு

    கோவை,

    கோவை வ.உ.சி. மைதானத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநகராட்சி , பேரூராட்சிகளில் முடிவற்ற பணிகளை இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கேஎன்.நேரு, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    விழாவில் ரூ.11.8 கோடி மதிப்பீட்டில் 27 முடிவற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். ரூ.67.48 கோடி மதிப்பீட்டில் 558 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.32.12 கோடி மதிப்பீட்டில் 703 பயனாளிகள் அரசு நலத்திட்ட உதவிகளும் இந்த விழாவில் வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ110.68 கோடி ஆகும்.

    பின்னர் அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை மாநகராட்சி முதலிடம் பெற்றுள்ளது. குடிநீர் வழங்கலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.கேரள அரசுடன் பேசி சிறுவாணி அணையில் இருந்து முறையாக தண்ணீர் பெற்று தரப்பட்டுள்ளது. பில்லூர் 3- வது கூட்டு குடிநீர் திட்டம் வருகின்ற அக்டோபர் மாதத்தில் முடிவடையும்.அக்டோபரில் இருந்து கோவைக்கு 2 நாளுக்கு ஒருமுறை பாதுகாக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படும் .

    கடந்த 10 ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி தான் குடிநீருக்கு நிதி ஒதுக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் 2 ஆண்டுகளில் ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செய்ய வேண்டிய கடமையை நாங்கள் செய்கிறோம். அதற்கான நன்றியை நீங்கள் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாநகருக்கு நாள் ஒன்றுக்கு 298 எம்.எல்.டி. குடிநீர் தேவை. ஆனால் 214 எம்.எல்.டி. தண்ணீர் தான் கிடைத்து வருகிறது. பில்லூர் 3-வது கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேறப்போகிறது. அந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற இன்னும் ஒன்றரை கி.மீ. தான் பாக்கி உள்ளது. அப்பணிகள் விரைவில் முடியும்.

    188 எம்.எல்.டி தண்ணீர் கூடுதலாக வந்ததும் கோவை மாநகருக்கு தினமும் தண்ணீர் வழங்கப்படும். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து தினமும் தண்ணீர் வழங்கப்படும் .

    சிறுவாணி, ஆழியார் அணை தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் முதல்-அமைச்சர் கேரள அரசுடன் கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் பேசியுள்ளனர்.

    சாலைகள் சீரமைக்க பணம் ஒதுக்கி சீரமைக்க உத்தரவிட்டுள்ளோம். 680 கி.மீ. தூரம் சாலை சீரமைக்க நிதி ஒதுக்கி உள்ளோம்.

    அமைச்சர் உதயநிதியை மிரட்டிய அயோத்தி சாமியார் வாய்க்கு வந்ததை பேசுகிறார். அவர்களால் செய்ய முடியுமா? தலையை சீவ 10 கோடி தேவையில்லை, 10 ரூபாய் சீப்பு போதும் என அமைச்சர் உதயநிதி பதில் சொல்லிவிட்டார்.

    நாங்கள் திராவிட இயக்க கொள்கையை 100 வருடங்களாக பேசி வருகிறோம்.இவர்கள் புதிதாக ஆரம்பித்துள்ளா ர்கள்.பாரத் என வந்தாலும், இந்தியா என இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சொல்லியுள்ளார். பெயரை எப்படி மாற்றினாலும் நாங்கள் எப்போதும் போல மத்திய பா.ஜ.க. அரசை ஒன்றிய அரசு என்று தான் அழைப்போம்.ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடக்காத காரியம். அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதாப் மேயர் கல்பனா, எம்பிக்கள் நடராஜன் சண்முகசுந்தரம், துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், திமுக மாவட்ட செயலாளர்கள் கார்த்திக் , தொண்டாமுத்தூர் ரவி , தளபதி முருகேசன், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • பழைய பேட்டை மாநகராட்சி பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
    • தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பழைய பேட்டை மாநகராட்சி பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி யின் நூற்றாண்டு விழா வினை முன்னிட்டு மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அவர்களுக்கு சர்க்கரை அளவு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர் மாற்றுத்திறனா ளிகள் பயன்படுத்தும் விதமாக மூன்று சக்கர ஸ்கூட்டர்கள், நிதியுதவி உள்ளிட்ட ரூ.30 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி கமிஷனர் வெங்கட் ராமன், மண்டல தலைவர் மகேஸ்வரி, கவுன்சிலர் உலகநாதன், சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்ற ஜோனல் போட்டியில் பங்கேற்ற மாணவி கபிலாவிற்கு ராஜா எம்.எல்.ஏ. பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    சங்கரன்கோவில்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சங்கரன் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளிக்கு மேஜைகள் மற்றும் இருக்கைகள் வழங்கினார்.

    தொடர்ந்து ஓட்டபயிற்சி மேற்கொள்ளும் மாணவி களுக்கு ஷூக்கள் வழங்க ப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு இந்த பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் நுழைந்துள்ள ஊத்துமலையை சேர்ந்த மாணவி கலைச்செல்விக்கு ஸ்டெதஸ்கோப் மறற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். தொடர்ந்து மாவட்ட அளவில் செஸ் போட்டியில் வெற்றி பெற்று சென்னையில் நடைபெற்ற ஜோனல் போட்டியில் பங்கேற்ற மாணவி கபிலாவிற்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    இதில் மாவட்ட துணைச்செயலாளர் புனிதா, மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் மாரியப்பன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அணி கார்த்தி, மாணவரணி துணை அமைப்பாளர் வீரமணி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினர் சங்கர், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பிரகாஷ், நகர துணைச் செயலாளர்கள் சுப்புத்தாய், முத்துக்குமார் வார்டு செயலாளர் பழனிச்சாமி, காவல் கிளி, ஜான், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூரில் நடந்த அரசு விழாவில் 987 பயனாளிகளுக்கு ரூ.20 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு அமைச்சர் சிவசங்கர், சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அரசு செயலாளர் தரேஸ் அஹமது, கலெக்டர் கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சிறப்பு திட்டம் செயல்பாடுகள், நலதிட்ட உதவிகள், கடனுதவிகள் போன்றவை குறித்து ஆய்வு நடத்தினார்.

    வருவாய்த்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முதல்வரின் முகவரி திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடனுதவிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

    இதை தொடர்ந்து பல்வேறு துறைகளின் மூலம் 987 பயனாளிகளுக்கு ரூ.20.85 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

    கூட்டத்தில் எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர் முத்தமிழ்செல்வி, எஸ்பி ஷ்யாம்ளாதேவி, டிஆர்ஓ வடிவேல்பிரபு, ஆர்டிஓ நிறைமதி, நகராட்சி தலைவர் அம்பிகா, யூனியன் சேர்மன்கள் மீனாம்பாள், பிரபா, ராமலிங்கம், கிருஷ்ணமூர்த்தி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ராஜ்குமார், சூர்யா, உதயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார்.

    கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர தி.மு.க செயலாளர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 100 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் கவிதா, தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சேவல் ஜெயக்குமார், செங்கதிர், ஆறுமுகம், ஹானஸ்ட், ராஜ்குமார், சூர்யா, உதயா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 60 காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    நாடு முழுவதும் இன்று சுதந்திர தினவிழா கோலா கலமாக கொண்டாடப்பட்டது.

    கலெக்டர் தேசிய கொடியேற்றினார்

    தூத்துக்குடி மாவட்டம் சார்பில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் 71 பயனாளி களுக்கு ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கி சிறப்புரையாற்றி பேசினார்.

    மேலும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த அதிகாரிகளுக்கு நற்சான்றி தழ்களை கலெக்டர் செந்தில் ராஜ் வழங்கினார். மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 60 காவல்துறை யினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    போலீசாருக்கு சான்றிதழ்

    அந்த வகையில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம், தூத்துக்குடி டி.எஸ்.பி. சுரேஷ், திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டி.எஸ்.பி. சம்பத், கோவில்பட்டி மேற்கு குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுகாதேவி, எட்டையாபுரம் இன்ஸ் பெக்டர் ஜின்னா பீர்முகமது உட்பட 60 காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட னர்.

    • கலெக்டர் முருகேஷ் வழங்கினார்
    • திருவண்ணாமலையில் சுதந்திர தின விழா கோலாகலம்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை காவல் துறை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் பா.முருகேஷ் தேசிய கொடியை ஏற்றிவைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    வீட்டுமனை பட்டா, நரிக்குறவர் சான்றிதழ், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, திருமணம் மற்றும் முதியோர் உதவித்தொகை, மகளிர் கடன், விவசாயிகளுக்கு இடுபொருட்கள், தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, சிறு தொழில் கடன் என 191 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 80 லட்சத்து 32 ஆயிரத்து 846 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கூடுதல் ஆட்சியர் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் மந்தாகினி, வட்டாட்சியர் சரளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அண்ணாமலையார் கோவில் மாடவீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த கலெக்டர் அண்ணாமலையார் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து தலையாம்பள்ளம் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கட்டிடம் மற்றும் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர் ஊற்று ஆகியவை மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

    • திருக்கண்ணபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
    • நலத்திட்ட உதவிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமால் தலைமை தாங்கினார்.

    வட்டாச்சியர் ரமேஷ்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வருவாய் ஆய்வாளர் ரம்யா வரவேற்றார்.

    இம்முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை,கணவரால் கைவிடப்பட்டோர் உதவிதொகை, விதவை உதவிதொகை என வருவாய் துறை சார்பில் 28 பயனாளி களுக்கும், இலவச வீட்டுமனை பட்டா 3 பயனாளிகளுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கும் என மொத்தம் 41 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 285 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ வழங்கினார்.

    இதில் தோட்டக்கலை உதவி அலுவலர் செல்லபாண்டியன் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    முன்னதாக பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது.இதில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை வழங்கினர்.

    • கமுதியில் கருணாநிதி நினைவு நாளையொட்டி துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • இதே போல் பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், முன்னாள் முதல் வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்று பேரூ–ராட்சி துப்புரவு பணியாளர் கள், அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்கள் 200 பேருக்கு பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    5 கிலோ அரிசி மற்றும் 12 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட் டன. மேலும் அரசு மருத்து–வமனையில் நோயாளிக–ளுக்கு பழம் மற்றும் பிரட் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச் சியில், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசு–தேவன், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன்,

    ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், நகரச் செயலாளர் பாலமுரு–கன், பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப் சகாராணி, பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கோடி, காங்கிரஸ் கட்சியின் வடக்கு வட்டார தலைவர் பழக்கடை ஆதி, ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துக்கிளி, மாரிமுத்து,

    உதயகுமார், முதுகுளத் தூர் சட்டமன்ற அலுவலக பணியாளர்கள் சத்திேயந் திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன், திம்மநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன.

    ×