search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அரசு மருத்துவமனையில் 100 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்:மேயர், துணை மேயர் வழங்கினர்
    X

    கடலூர் அரசு மருத்துவமனையில் மாமாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர தி.மு.க செயலாளர் ராஜா ஆகியோர் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். 

    கடலூர் அரசு மருத்துவமனையில் 100 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்:மேயர், துணை மேயர் வழங்கினர்

    • கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ராஜ்குமார், சூர்யா, உதயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார்.

    கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர தி.மு.க செயலாளர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 100 குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் கவிதா, தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சேவல் ஜெயக்குமார், செங்கதிர், ஆறுமுகம், ஹானஸ்ட், ராஜ்குமார், சூர்யா, உதயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×