search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare Assistance"

    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 85 மனுக்கள் ஏற்கப்பட்டது.
    • கோரிக்கை மற்றும் புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பாலையூரில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாமில் 96 பயனாளிகளுக்கு ரூ.12.89 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

    பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற முகாமில், பாலையூர், காஞ்சிவாய், நல்லாவூர், ஸ்ரீகண்டபுரம் ஆகிய கிராம ங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முகாமை யொட்டி செப்டம்பர் 5-ஆம் தேதியில் இருந்து அலுவலர்கள் பாலையூர் கிராமத்தில் முகாமிட்டு பொதுமக்களிடம் இருந்து பெற்ற 101 கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்ததில் 85 மனுக்கள் ஏற்கப்பட்டது. 16 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

    அதன்படி, வருவாய் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா தலா ரூ.20,000 மதிப்பிலும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் மற்றும் இதர உதவித்தொகை 34 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலும், திருமண உதவித்தொகை (மகன் திருமணம்) 11 பயனாளிகளுக்கு தலா ரூ.8,000 மதிப்பிலும், திருமண உதவித்தொகை (மகள் திருமணம்) 5 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்பிலும், இயற்கை மரண உதவி த்தொகை 21 பயனாளிகளுக்கு தலா ரூ.21,500 உள்பட மொத்தம் 96 நபர்களுக்கு ரூ.12,89,700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் ஆகியோர் வழங்கினர்.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் புகார்களை 7092255255 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் தெரிவிக்கலாம். அந்த கோரிக்கை மற்றும் புகார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்தித் தரப்படும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, சமூக பாதுகாப்பு த் திட்ட தனித்துணை ஆட்சியர் கண்மணி, கோட்டாட்சியர் யுரேகா, ஒன்றியக்குழுத் தலைவர் மகேந்திரன், வட்டாட்சியர் சித்ரா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • அனைவருக்குமான அரசாக திகழ்ந்து வருகிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிக்கோட்டையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு 1112 பயனாளிக ளுக்கு ரூ.3.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் பயனுள்ள பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகி றார். அரசின் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் மாதந்தோறும் கடைகோடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. முகாமில் 159 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 125 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது.

    முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசில் எல்லோருக்கும் எல்லாமும் என்ற தத்துவத் தின் அடிப்படையில் அனை வருக்குமான அரசாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக மக்களை தேடி அரசு என்ற உன்னத நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் அனைத்து துறை அரசு முதல் நிலை அலுவலர்க ளையும் ஒருங்கி ணைத்து நடைபெற்று கொண்டி ருக்கும் இம்மக்கள் தொடர்பு முகாமின் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் விரிவாக மக்களுக்கு எடுத்துரைத்து உள்ளனர்.

    இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு அத்து றையைச் சார்ந்த அலுவலர் களை முறையாக அணுகி அதன் மூலம் பயன்பெற்று தங்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசுந்தரம், ஒன்றிய செயலாளர் பாலசுப்பிர மணியன், ஊராட்சி தலை வர் புவனேஸ்வரி காளி தாஸ், திருப்பத்தூர் யூனியன் சேர்மன் சண்முகவடிவேல், பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராய ணன், மாவட்ட மாணவர் அணி தி.மு.க. அமைப்பாளர் ராஜ்குமார், திருப்பத்தூர் ஒன்றிய துணை அமைப்பா ளர் கண்ணன் மற்றும் ஒன்றிய, பேரூர், நகர் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 749பயனாளிகளுக்கு ரூ.2.55 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
    • உறுப்பினர் சிவக்குமார் மற்றும் நகர தி.மு.க. செயலாளர் வசந்தம் சேமலையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    காங்கேயம் வட்டம் சிவன்மலை ஊராட்சி ஸ்ரீ அண்ணாமலை செட்டியார் திருமண மண்டபம் மற்றும் வெங்கடேஸ்வரா திருமண மண்டபங்களில் கலைஞரின் நூற்றாண்டை விழாவை முன்னிட்டு கலைஞர் மக்கள் சேவை முகாம் நடைபெற்றது. முகாமை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்து 749 பயனாளிகளுக்கு ரூ.2.55 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    இந்த முகாமில் பொது மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று முடிந்த வரை இங்கேயே அதற்கான தீர்வுகள் காணப்படும். குறிப்பாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டைகள், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்டு போன நபர்கள் அளிக்கும் விண்ணப்பங்கள், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகைக்கான விண்ணப்பம் என பல்வேறு விதமான விண்ணப்பங்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் சிவன்மலையில் முகாமிட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்த முகாமில் ஏற்படக்கூடிய அனுபவங்களை வைத்து இதே போன்று மற்றபகுதியில் நடைமுறை ப்படுத்துவதற்கு இது ஒரு சோதனை ஓட்ட நிகழ்வாக ஏற்பாடு செய்யப்ப ட்டிருக்கிறது. மக்களுடைய ஆர்வத்திற்கு தடை ஏற்படாமல் அவர்களது எண்ணங்கள் மற்றும் விருப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முகாம் நடைபெறும். அதே நேரத்தில் முடிந்த அளவு விண்ணப்பங்களை கொண்டு வந்திருக்கிற பொதுமக்களுக்கு அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் உரிய முறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    தொடர்ந்து வருவாய் துறையின் சார்பில் 244 பயனாளிகளுக்கு ரூ.4.46 லட்சம் மதிப்பீட்டிலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 17 பயனாளிகளுக்குரூ.15.03 லட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறையின் சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.1.44 லட்சம் மதிப்பீட்டி லும் என மொத்தம் 749பயனாளிகளுக்கு ரூ.2.55 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், இணைஇயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) சீனிவாசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மதுமிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் புஷ்பாதேவி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரஞ்சித்குமார், திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) வரலட்சுமி, முன்னோடி வங்கி மேலாளர் ரவி, காங்கேயம் வருவாய் வட்டாட்சியர் மயில்சாமி, காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரிகரன், விமலாதேவி, சிவன்மலை ஊராட்சி மன்றத்தலைவர் துரைசாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அலுவலர்கள், காங்கயம் ஒன்றிய தெற்கு பகுதி செயலாளர் சிவானந்தன், துைணத்தலைவர் சண்முகம், உறுப்பினர் சிவக்குமார் மற்றும் நகர தி.மு.க. செயலாளர் வசந்தம் சேமலையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாளை டி.ஒச்சாத்தேவர் நினைவு நாள் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.

    மதுரை

    மூவேந்தர் முன்னேற்ற கழக இணை தலைவர் டி.ஒச்சாத்தேவர் 10-ம் ஆண்டு நினைவு நாள் நாளை 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டி.ஒச்சாத்தேவரின் நினைவு நாளன்று ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவரது மனைவியும், மூவேந்தவர் முன்னேற்ற கழக மாநில மகளிரணி செயலாளருமான சுந்தரசெல்விஒச்சாத்தேவர் வழங்கி வருகிறார்.

    இந்த ஆண்டு டி.ஒச்சாத்தேவர் நினைவு நாளை முன்னிட்டு திருமங்க லத்தில் உள்ள மூவேந்தர் முன்னேற்றக்கழக அலுவ லகத்தில் ஒ.எஸ்.எம்.ஆர். டிரஸ்ட் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு தையல் எந்திரம், டிரை சைக்கிள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல், உணவு பொருட்கள், வேஷ்டி,சேலை உள்ளிட்டவைகளை சுந்தரசெல்விஒச்சாத்தேவர் வழங்குகிறார். தொடர்ந்து அன்னதானம் நடைபெறு கிறது.

    இந்த நிகழ்ச்சியில் ராகேஷ், மோனிகா, செல்வகுமார், தாரணி, ஹனிகா, கரிகால் சோழன், வேதாந்த், ஒ.எஸ்.எம்.ஆர். டிரஸ்ட் நிர்வாகிகள், குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    • நலத்திட்ட உதவிகள் விழா கொண்டரசம்பாளையம் காடேஸ்வரர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • அடிப்படை வசதிகள் விரைவாக ஏற்படுத்தித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

     தாராபுரம் : 

    தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டி நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விழா கொண்டரசம்பாளையம் காடேஸ்வரர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை தாங்கினார். விழாவில் நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ.64 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கடனுதவி, வீட்டுமனைப்பட்டா மற்றும் சாதிச்சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் வழங்கினர். விழாவில் அமைச்சர் மு.ெப.சாமிநாதன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதி எல்லாம் நிறைவேற்றி வருகிறார்கள். மகளிருக்கு கட்டணமில்லா பஸ் வசதி தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்து கழகக்கட்டுப்பட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பஸ்களில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவிகள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லாமலும், பஸ் பயண அட்டை வழங்கல் புதுமைப்பெண் என்கிற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் கயல்விழி பேசும்போது " இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து வீட்டுமனைப் பட்டா வழங்குதல் போன்ற பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் பட்டாவை பெற்ற நபர்கள் அங்கே வீடு கட்டி குடியேறிய பட்சத்தில் அடிப்படை வசதிகள் விரைவாக ஏற்படுத்தித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    விழாவில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரஞ்சித்குமார், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் புஷ்பா தேவி. தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் எஸ்.வி. செந்தில்குமார், தாராபுரம் நகர்மன்ற தலைவர் கு.பாப்பு கண்ணன், தாசில்தார் கோவிந்தசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு 170 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், கொழுமங்குளி கிராம சேவை மைய வளாகத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு 170 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு ஊராட்சியை தேர்ந்தெடுத்து அரசுத்துறை அலுவலர்கள் அங்குள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வும் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் தாராபுரம் வட்டம், கொழுமங்குளி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் முக்கிய நோக்கம் மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பது ஆகும். இந்த பகுதியில் உள்ள கிராமங்களான கொழுமங்குளி, அண்ணா நகர், ராசிபாளையம், கள்ளிப்பாளையம், தம்புரெட்டிபாளையம், ஆண்டிபாளையம், பேராங்காட்டுப்பதி, கள்ளிமேட்டுபாளையம், ஓரம்பபுதூர், கம்மாளபாளையம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் கவனத்தில் எடுத்து க்கொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து பணியாற்றிட வேண்டும்.

    மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றி தொடர்புடைய அலுவலர்கள் இங்கு பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்கள். அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். மேலும் கடைகோடி கிராமம் வரை அரசின் திட்டங்கள் சென்று சேர்வதை தொடர்புடைய அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் தாட்கோ சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.93.36 லட்சம் மதிப்பில் லோடு வாகனம், ஆட்டோ, டூரிஸ்ட் வாகன கடனுதவி, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 71 பயனாளிகளுக்கு ரூ.46.39 லட்சம் மதிப்பீட்டில் இணையவழி பட்டா , 15 பயனாளிகளுக்கு ரூ.18,900 மதிப்பில் முதியோர் உதவித்தொகை என மொத்தம் 170 பயனாளிகளுக்கு ரூ.1,58,30,247 மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். தொடர்ந்து மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு மருந்து பெட்டகத்தினையும், கலைஞரின் கண்ணொலி காப்போம் திட்டத்தின் கீழ் 3 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளையும் கலெக்டர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) திருக்குமரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரஞ்சித்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குமாரராஜா, தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் கோவிந்தசாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மயிலாடும்பாறை அருகே நரியூத்து கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
    • 155 பயனாளிகளுக்கு ரூ.13.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    வருசநாடு:

    மயிலாடும்பாறை அருகே நரியூத்து கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். இந்த முகாமுக்காக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு 54 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித்தொகைக்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் வேளாண்மை துறை, மாநில வாழ்வாதார இயக்கம், சுகாதார துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.1.38 லட்சம் மதிப்பீட்டில் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம், மக்களை தேடி மருத்துவம் திட்டம் மருத்துவ பெட்டகங்கள் என மொத்தம் 155 பயனாளிகளுக்கு ரூ.13.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    முகாமில் 100க்கும் அதிகமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர். மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், வாழ்வா தாரத்தை மேம்படுத்திடும் வகையில் ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
    • இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கி வைக்கப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பொருளூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்துகொண்டு 1189 பயனாளிகளுக்கு ரூ.980.44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை வழங்கினார். வேலுச்சாமி எம்.பி. முன்னிலை வகித்தார்.

    விழாவில் பயிர்கடன், கால்நடை பராமரிப்பு மூலதான கடனுதவிகள், வேளாண் மத்திய கால கடனுதவிகள், தானிய ஈட்டுக்கடனுதவிகள், பொது நகைக்கடனுதவிகள், மகளிர் சுய உதவிக்குழு கடனுதவிகளை வழங்கினார்.

    இதில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், வாழ்வா தாரத்தை மேம்படுத்திடும் வகையில் ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் அன்றாட பயணச் செலவு களை தவிர்த்திடும் வகையில் நகர பஸ்களில் கட்டணமில்லா பயணத் திட்டத்தினை ஏற்படுத்தி யுள்ளார். பெண்கள் உயர்கல்வி கற்று, தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் ரூபாய் 1,000 வழங்கப்படுகிறது. மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கி வைக்கப்பட்டது.

    தற்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தகுதியான இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம். இத்திட்டத்தில் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 1,06,50,000 மகளிர் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை த்தொகை கிடைக்க ப்பெறாதவர்கள் இ-சேவை மையத்தில் பதிவு செய்ய வேண்டும். தகுதி உடைய அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். எந்த மாநி லத்திலும் செயல்ப டுத்தப்படாத அற்புதமான திட்டத்தை முதல்-அமைச்சர் செயல்ப டுத்தியுள்ளார்.

    பொருளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 296 விவசாயிகளுக்கு ரூ.556.10 லட்சம் மதிப்பிலான பயிர்கடன், 21 விவசாயிகளுக்கு ரூ.12.74 லட்சம் மதிப்பிலான கால்நடை பராமரிப்பு மூலதன கடன், 1 விவசாயிக்கு ரூ.5.94 லட்சம் மதிப்பிலான வேளாண் மத்திய காலக்கடன், 2 விவசாயிகளுக்கு ரூ.20.00 லட்சம் மதிப்பிலான தானிய ஈட்டுக்கடன், 604 விவசாயிகளுக்கு ரூ.274.49 லட்சம் மதிப்பிலான பொது நகைக்கடன், 264 நபர்களுக்கு ரூ.110.67 லட்சம் மதிப்பிலான மகளிர் சுய உதவிக்குழு கடன், 1 மாற்றுதிறனாளிக்கு ரூ.0.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் என மொத்தம் 1189 நபர்களுக்கு ரூ.980.44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்க ப்பட்டுள்ளது. என பேசினார்.

    இதில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்ராஜ், பழனி வருவாய் கோட்டாட்சியர் சரவணன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அன்பரசு, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சத்தியபுனா ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் முருகாத்தாள், ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராணி மோகனபிரபு, ஒட்டன்சத்திரம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் ராஜாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் தஷீரா உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் ஹோம் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து நடத்திய முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் ஆலமரம் வட்டார தலைவர் கே.ஆர்.பி இளங்கோ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் ஹோம் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து நடத்திய முதியோ ர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    இவ்விழாவிற்கு பாவூர்ச த்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் செய லாளர் சசி ஞானசேகரன் தலைமை தாங்கி னார். சிறப்பு விருந்தி னராக கண்தான விழிப்பு ணர்வு குழு நிறுவனர், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் ஆலமரம் வட்டார தலைவர் கே.ஆர்.பி இளங்கோ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கண்தான விழிப்புணர்வு உரை யாற்றி னார். ஹோம்சா ரிடபிள் டிர ஸ்ட் நிறுவ னரும், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க த்தின் பெரு ளாளரு மான டாக்டர் சினே கா பா ரதி வர வேற்று பேசி னார். ஹோம் சாரிடபிள் டிர ஸ்ட் மனே ஜிங் டிரஸ்ட்டி சாமி நன்றி கூறினார்.

    • இளையான்குடியில் 129 பயனாளிகளுக்கு ரூ.75.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அழியா செல்வமான கல்வியினை வழங்கிட வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டத்தில் உள்ள உதயனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவி களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழக முதல் அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். மேலும் பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு நேரடி யாக வழங்கிடும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந் தேடுத்து அதில் உள்ள கிரா மங்களுக்கு சென்று பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் நடத்தப் பட்டு வருகிறது.

    இந்த முகாமினை முன்னிட்டு பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத் திட்டங்கள் தொடர்பாக 233 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதில் தகுதி யுடைய 130 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் பொது மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்திடும் பொருட்டு கூட்டு குடிநீர் திட்டம் ஜல் ஜீவன் திட்டம் போன்ற திட் டங்களின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம் பாட் டிற்கு மகளிர் திட்டம் கூட்டு றவு சங்கங்களின் மூலம் கிஷான் அட்டை, கால்நடை பராமரிப்பு, கடன் பயிர் கடன் மற்றும் கருவேலை மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்து பயன் பெறுவதற்கென ஒரு ஹெட் டருக்கு ரூ. 7,500 தொகை என அரசின் பல்வேறு திட் டங்களின் கீழ் பொதுமக்க ளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அரசால் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங் கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களை அணு பயன்பெற வேண்டும்.

    மேலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தகுதியான நபர்களை தவிர நிரா கரிக்கப்பட்ட மனுக்களுக்கு அதற்கான காரணங்களை இணையதளத்தின் வாயி லாக தெரிந்து கொள்ளலாம். அதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதனை மேல் முறையீடு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அழியா செல்வமான கல்வியினை வழங்கிட வேண்டும். குறிப் பாக அவர்கள் உயர் கல்வி கற்பதற்கும் உறுதுணையாக இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோக னச்சந்திரன், மாவட்ட ஊரக முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், சிவகங்கை வரு வாய் கோட்டாட்சியர்சுகிதா, இளையான்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முனியாண்டி, உதயனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரிட்டோ, இளையான்குடி வட்டாட்சியர் கோபிநாத் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
    • கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய கடனுதவி திட்டங்களை சரியான நேரத்தில் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள புல்லக்கடம்பன் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் வருவாய்த்துறையின் மூலம் 41 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி ஓய்வூ தியம், முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், இயற்கை மரண உதவித்தொகை என ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டிலும், 80 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாறுதல் உட்பிரிவு, பட்டா மாறுதல் முழுப்புலம் ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம் ரூ.53 ஆயிரத்து170 மதிப்பீட்டிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம் ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக் கலைத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு பழமரத் தொகுப்பு ரூ.22 ஆயிரத்து 700 மதிப்பீட்டிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு தார்பாய், தெளிப்பான் ரூ.9 ஆயிரத்து 640 மதிப்பீட்டி லும், தமிழ்நாடு ஆதிதிரா விடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் 2 பயனாளிகளுக்கு பயணியர் ஆட்டோ, துணிக்கடை ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 326 மதிப்பீட்டிலும் என மொத்தம் 146 பயனாளி களுக்கு ரூ.18 லட்சத்து 62 ஆயிரத்து 836 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கி னார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    மக்களைத் தேடி வந்து மனுக்களை மட்டும் பெறாமல் மனுக்கள் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தீர்வு காணப்பட்ட மனுக் களுக்கு அரசின் நலத் திட்டங்கள் இன்று வழங்கப் படுகின்றன. மக்கள் தொடர்பு முகாமில் அனைத்துத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அரங்கு கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பயன் பெறலாம்.

    இப்பகுதியை பொருத்த வரை விவசாயம் நிறைந்த பகுதி என்பதால் விவசாயம் பணிகளுக்கு தேவையான திட்டங்கள் வேளாண்மைத் துறையின் மூலம் செயல் படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதேபோல் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய கடனுதவி திட்டங்களை சரியான நேரத்தில் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ராமநாத புரம் வருவாய் கோட்டாட் சியர் கோபு, திருவாடனை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் முகம்மது முக்தார், திருவாடனை வட்டாட்சியர் கார்த்திகேயன் , புல்லக் கடம்பன் ஊராட்சி மன்றத் தலைவர் மாதவி கண்ணன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
    • 46 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்தி தலைமை தாங்கினார்.

    வட்டாச்சியர் ரமேஷ், தனி வட்டாச்சியர் (சமூக பாதுகாப்பு) கவிதாஸ்,வட்ட வழங்கல் அலுவலர் நீலாயதாட்சி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வருவாய் ஆய்வாளர் புனிதா வரவேற்றார்.

    முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவிதொகை, விதவை உதவிதொகை,இலவச வீட்டுமனை பட்டா,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை என மொத்தம் 46 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்து 776 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்தி வழங்கினார்.

    இதில் மண்டல துணை வட்டாட்சியர் ஜெயசெல்வம், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் செல்லபாண்டியன்,சரவண அய்யப்பன்,வேளாண்மை உதவி அலுவலர் பழனிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் கிராம நிர்வாக அலுவலர் முத்துகுமார் நன்றி கூறினார்.

    ×