search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arima sangam"

    • பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் ஹோம் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து நடத்திய முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் ஆலமரம் வட்டார தலைவர் கே.ஆர்.பி இளங்கோ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் ஹோம் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து நடத்திய முதியோ ர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    இவ்விழாவிற்கு பாவூர்ச த்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் செய லாளர் சசி ஞானசேகரன் தலைமை தாங்கி னார். சிறப்பு விருந்தி னராக கண்தான விழிப்பு ணர்வு குழு நிறுவனர், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் ஆலமரம் வட்டார தலைவர் கே.ஆர்.பி இளங்கோ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கண்தான விழிப்புணர்வு உரை யாற்றி னார். ஹோம்சா ரிடபிள் டிர ஸ்ட் நிறுவ னரும், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க த்தின் பெரு ளாளரு மான டாக்டர் சினே கா பா ரதி வர வேற்று பேசி னார். ஹோம் சாரிடபிள் டிர ஸ்ட் மனே ஜிங் டிரஸ்ட்டி சாமி நன்றி கூறினார்.

    • விழாவில் லயன்ஸ் மாவட்ட முதலாம் துணை ஆளுநர் அய்யாதுரை புதிய லயன்ஸ் உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார்.
    • சங்கரன்கோவில் லயன்ஸ் கிளப் சார்பாக சங்கரன்கோவில் ஏழை,எளிய மாணவர்களுக்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்திற்கான கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரிமா சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஸ்ரீ கிருஷ்ணா மகாலில் நடைபெற்றது. தலைவராக முருகன், செயலாளராக ஹரிராம சந்திர வேலாயுதம், பொருளாளராக சேதுராஜ் ஆகியோருக்கு லயன்ஸ் கூட்டு மாவட்ட தலைவர் முத்தையா பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் லயன்ஸ் மாவட்ட முதலாம் துணை ஆளுநர் அய்யாதுரை புதிய லயன்ஸ் உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார். விழாவில் சங்கரன்கோவில் லயன்ஸ் கிளப் சார்பாக சங்கரன்கோவில் ஏழை,எளிய மாணவர்களுக்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்திற்கான கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் கே.ஜி.பிரகாஷ், முன்னாள் மாவட்ட ஆளுநர் சந்தானராஜா, சங்கரன்கோவில் லயன்ஸ் கிளப் அட்மின் எஸ்.ஆர்.எல். வேணுகோபால் என்ற கண்ணன் மற்றும் சங்கரன்கோவில் கிளப் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • புன்னக்காயலில் மீனவர்களின் வலைகளை பாதுகாப்பதற்கான கூடம் ரூ.16 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
    • ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் ரூ.5 லட்சம் செலவில் நீர் நிலைகளில் தூர்வாரும் திட்டப்பணி நிறைவேற்றப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    சாகுபுரம் அரிமா சங்கத்தின் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டன.

    இதன்படி புன்னக்காயலில் மீனவர்களின் வலைகளை பாதுகாப்பதற்கான கூடம் ரூ.16 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காயல்பட்டினம் சிங்கித்துறையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான அரங்கம் திறக்கப்பட்டது. ஆறுமுகநேரியை சேர்ந்த ஏழை குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் ரூ.5 லட்சம் செலவில் நீர் நிலைகளில் தூர்வாரும் திட்டப்பணி நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து சாகுபுரம் விருந்தினர் மாளிகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. டி.சி.டபிள்யூ நிறுவன உதவி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட அரிமா ஆளுநர் விஸ்வநாதன், அவரது துணைவியார் கலையரசி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். சாகுபுரம் அரிமா சங்கத் தலைவர் தாமஸ் மாசிலாமணி வரவேற்று பேசினார். செயலாளர் சுப்பிரமணியன் அறிக்கை வாசித்தார்.

    நிகழ்ச்சியில் 4 தையல் எந்திரங்கள், 7 சைக்கிள்கள் மேலும் பலருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மருத்துவ உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டன. அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    டி.சி.டபிள்யூ நிறுவன துணை உதவி தலைவர் மீனாட்சி சுந்தரம், மக்கள் தொடர்பு துறை அதிகாரி பிரகாஷ், ஒயிட்பீல்ட் ஆர்தர், அரிமா சங்க பொருளாளர் பொன் சரவணன், முத்துப்பாண்டியன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

    ×