துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

கமுதியில் கருணாநிதி நினைவு நாளையொட்டி துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இதே போல் பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கமுதியில் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கமுதியில் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Published on

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், முன்னாள் முதல் வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்று பேரூ–ராட்சி துப்புரவு பணியாளர் கள், அரசு மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்கள் 200 பேருக்கு பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

5 கிலோ அரிசி மற்றும் 12 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட் டன. மேலும் அரசு மருத்து–வமனையில் நோயாளிக–ளுக்கு பழம் மற்றும் பிரட் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச் சியில், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசு–தேவன், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன்,

ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், நகரச் செயலாளர் பாலமுரு–கன், பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப் சகாராணி, பொதுக்குழு உறுப்பினர் பசும்பொன் தனிக்கோடி, காங்கிரஸ் கட்சியின் வடக்கு வட்டார தலைவர் பழக்கடை ஆதி, ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துக்கிளி, மாரிமுத்து,

உதயகுமார், முதுகுளத் தூர் சட்டமன்ற அலுவலக பணியாளர்கள் சத்திேயந் திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன், திம்மநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com