search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weekly market"

    • தேவகோட்டை வாரச்சந்தை கடைகளில் எடை மோசடி செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
    • வியாபாரிகள் சந்தைக்கு வருகின்றனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகரில் கண்டதேவி சாலையில் வாரச்சந்தை ஞாயிற்றுக் கிழமை செயல்பட்டு வரு கிறது. சிவகங்கை, ராமநாத புரம், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங் களில் இருந்து வியாபாரிகள் பல வகை காய்கறிகளை விற்பனை செய்ய சந்தைக்கு வருகின்றனர்.

    சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகளை கொண்ட இந்த வார சந்தை யில் தேவகோட்டை சுற்றி யுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் காய்கறி பழம் மீன் மற்றும் அத்தியாவசிய பொருட் களை வாங்கி செல்கின்றனர்.

    இந்த வார சந்தையில் வாங்கும் பொருட்கள் எடை மிகுந்த குறைந்த அளவில் உள்ளது. அதனை அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்ல வேண்டிய அவல ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ வாங்கும் பொருட்கள் 800 கிராம் முதல் 900 கிராம் வரை மட்டுமே உள்ளது என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

    கடைக்காரர்கள் முத்திரையிடாத எடைக் கற்களை பயன்படுத்துவதால் எடை குறைப்பு அதிகமாக நடந்து வருகிறது. இதனால் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் மறைமுகமாக ஏமாற்றப்படுகின்றனர். எனவே தொழிலாளர் துறை அதிகாரிகள் உடனடியாக இப்பகுதி கடைகளில் உள்ள எடைக் கற்களை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாரந்தோறும் திங்கள்கிழமை கூடும் சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
    • தக்காளி கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரந்தோறும் திங்கள்கிழமை கூடும் சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள் என அனைத்து வகையான பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்நிலையில் திங்கள்கிழமை கூடிய வாரச் சந்தையில் முதல் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டது. தக்காளி கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது. 

    • முதல்தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டது.

    காங்கயம் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமைதோறும் கூடும் வாரச் சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள், கீரைகள் உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோகப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன.இந்நிலையில், திங்கள்கிழமை கூடிய வாரச் சந்தையில் முதல்தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கும், இரண்டாம் தர சின்ன வெங்காயம் கிலோ ரூ.25க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது. தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது.

    • பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது. காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரம்தோறும் திங்கள்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வாரச் சந்தையில் முதல் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கும், இரண்டாம் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.30க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயத்தின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் கிலோ ரூ.15 அதிகரித்துக் காணப்பட்டது. மேலும் வரும் நாள்களில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனா். 

    • வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.
    • கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள். இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.25, கத்தரிக்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.25 சின்ன வெங்காயம் ரூ. 40. உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.60, புடலை காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.25, பீன்ஸ் ரூ.100, கேரட் ரூ.60, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.160, அவரைக்காய் ரூ.120, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது. இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    • ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
    • பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது, வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.15, கத்தரிக்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.20 சின்ன வெங்காயம் ரூ. 40. உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலை காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.20, பீன்ஸ் ரூ.120, கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.120, அவரைக்காய் ரூ.100, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    • வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது.
    • கோவக்காய் ரூ.40-க்கும், முள்ளங்கி ரூ.40-க்கும், பச்சை மிளகாய் ரூ.50-க்கும்,சுரைக்காய் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    அதன்படி நேற்று வெள்ளகோவில் வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.10-க்கும், கத்தரிக்காய் ரூ.40-க்கும், பீர்க்கங்காய் ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் ரூ.25-க்கும், சின்ன வெங்காயம் ரூ.35-க்கும், உருளைக்கிழங்கு ரூ.30-க்கும், பீட்ரூட் ரூ.40-க்கும், புடலங்காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.20-க்கும் விற்கப்பட்–டது

    இதேபோல் பீன்ஸ் ரூ.100, கேரட் ரூ.40-க்கும், பாகற்காய் ரூ.40-க்கும், வெண்டைக்காய் ரூ.60-க்கும், இஞ்சி ரூ.100-க்கும், அவரைக்காய் ரூ.60-க்கும், மேரக்காய் ரூ.40-க்கும், கோவக்காய் ரூ.40-க்கும், முள்ளங்கி ரூ.40-க்கும், பச்சை மிளகாய் ரூ.50-க்கும்,சுரைக்காய் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • அபிராமம் வாரச்சந்தையில் எலக்ட்ரானிக் தராசுகளிலும் எடை மோசடி நடந்துள்ளது.
    • இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சி பகுதி மற்றும் வாரச் சந்தையில் எடை கற்கள் மற்றும் எலக்ட்ரானிக் தராசு களில் முறைகேடு செய்து எடை குறைவாக பொருட்கள் விற்பனை நடைபெறு வதாக புகார் எழுந்துள்ளது.

    மளிகை, காய்கறி, பழக் கடை உள்பட அனைத்து கடைகளிலும் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொருட்கள் எடைபோட எடைக்கற்கள் பயன்படுத்தப் பட்டது. எடைகற்கள் சரியான எடையில் இருக்கி றதா? என ஆய்வு செய்து முத்திரை யிடப்பட்டு வந்தது.

    நாளடைவில் பெரும்பா லான கடைகளில் எடைகற்க ளில் முத்திரை இல்லாமல் பயன்படுத்த தொடங்கினர். மேலும் எடைக்கற்கள் தேய்ந்து விடுவதால் கிலோவிற்கு 150 கிராம் முதல் 200 கிராம் எடை வரை குறைவாகி விடுவதும் உண்டு. இதைத் தொடர்ந்து எலக்ட்ரானிக் தராசு மூலம் எடை போடும் முறை பயன்பாட்டுக்கு வந்தது.

    எலக்ட்ரானிக் தராசில் பொருட்களை வைத்ததும் அதன் எடை குறியீடு டிஜிட்டல் முறையில் தெரியும். இதனால் பொருட்களை வாங்குபவர்கள் சரியான எடை இருப்பதாக நம்பி வாங்கி செல்லும் நிலை உள்ளது. சமீப காலமாக வியாபாரிகள் எலக்ட்ரானிக் தராசுகளிலும் எடையை குறைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

    அபிராமம் பேருராட்சியில் சுற்றியுள்ள 90-க்கும் அதிகமான கிராமங்களுக்கு மேல் இருப்பதால் இங்கு வாரத்தில் முதல் நாளான திங்கட்கிழமை வாரச்சந்தை நடபெறுகிறது. இதேபோல வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு தினங்களில் சந்தை நடைபெறும். இந்த சந்தைகளில் காய்கறி, பழங்கள், மீன், தானிய வகைகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    வாரச்சந்தைகளில் வாங்கும் பொருட்களுக்கு தராசில் உள்ள டிஜிட்டல் அளவு சரியாக காட்டி னாலும், 200 கிராம் எடை குறைவாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    எடை குறைவாக இருக்கும் வகையில் எலக்ட் ரானினிக் தராசுகளில் வியாபாரிகள் மோசடி செய்துள்ளனர். எடை கற்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டிற்கான முத்திரை யிடப்படுவதில்லை.

    இதுபோன்ற தவறுகள் வாரச்சந்தைகளில் தான் அதிகமாக நடந்துவருகிறது. இதனால் பொருட்கள் வாங்கும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    இதுகுறித்து அபிரா மத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கூறுகையில், வாரச்சந்தை கடைகளில் 1 கிலோ பொருட்கள் வாங்கிய தில் மிகவும் குறைவாக இருப்பதாக சந்தேகம் அடைந்தேன். அதை வேறு இடத்தில் எடை போடும்போது ஒரு கிலோவிற்கு 150 கிராம் குறைவாக இருந்தது.

    வாரச்சந்தை கடைகளில் உள்ள கடைகளில் வாங்கும் பொருட்கள் எடை குறைவாக உள்ளன. காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் விலை குறைவாக விற்பதாக கூறி எடையை குறைத்து விடு கின்றனர். எலக்ட்ரானிக் தராசுகளில் இதுபோல் முறைகேடு செய்வது அதிர்ச்சியாக உள்ளது. அபிராமம் பகுதியில் வாரச்சந்தை உள்ளிட்ட அனைத்து கடைகளிலும், தராசுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • மேலசெவலை சுற்றி 18-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
    • போலீசார் வாரச்சந்தை அமைப்பதற்கு அனுமதி மறுத்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேலசெவல் சனிக்கிழமை வாரச்சந்தை வியாபாரிகள் கூட்டமைப்பு பொறுப்பாளர் கமலக்கண்ணன் தலைமையில் வியாபாரிகள், பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    வாரச்சந்தை

    மேலசெவலை சுற்றி 18-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள வர்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்க நெல்லை டவுன், பாளை பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.

    எனவே மேலசெவலில் சனிக்கிழமை வாரச்சந்தை அமைக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் சந்தை அமைப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் வாய்மொழி யாக உத்தரவை பெற்று சந்தை அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்தோம்.

    இதற்காக கடைகளுக்கு முன் தொகை, மாத வாடகை பேசி சந்தையில் பொது மக்கள் மற்றும் வியாபாரிகளின் அவசர தேவைகளுக்காக கழிவறை, குடிநீர் வசதிகள், மின் விளக்குகள் பொருத்தி உள்ளோம். 50 கடைகள் அமைப்பதற்காக அனைத்து பணிகளும் நடை பெற்று உள்ளது.

    மேலும் அந்த கடைகளில் விற்பனை செய்வதற்காக பழங்கள், மீன், கருவாடு, மளிகை சாமான்கள் உள் ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் பெற்று செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்து விட்டோம்.

    இந்நிலையில் முன்னீர் பள்ளம் போலீசார் மேல செவலில் வாரச்சந்தை அமைப்பதற்கு அனுமதி மறுத்து வருகின்றனர். சந்தை அமைப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டதால் மேலசெவலில் சனிக்கிழமை தோறும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடை கள் செயல்பட அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உடன்குடி மெயின் பஜார் 4 சந்திப்பையொட்டி சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் திங்கள் கிழமை தோறும் செயல்படும் வார சந்தை வளாகம் உள்ளது.
    • வார சந்தையை புதியதாக அமைக்க அனைத்து கொட்டகைகள், கட்டிடங்கள், கடைகளைஎல்லாம் முழுமையாக இடிக்கப்பட்டது

    உடன்குடி:

    உடன்குடி மெயின் பஜார் 4 சந்திப்பை யொட்டி சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் திங்கள் கிழமை தோறும் செயல்படும் வார சந்தை வளாகம் உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய வாரச்சந்தை யான இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரும் வியாபாரிகள் வியாபாரம் செய்வார்கள்.

    சுற்றுப்புறப் பகுதியில் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இங்கு வாங்கி செல்வார்கள்.

    தென்னை, வாழை, தேங்காய் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்கள் பொருட்களை நேரடியாக கொண்டு வந்து வியாபாரம் செய்வார்கள்.

    ஆடு, கோழி போன்றவற்றை வளர்த்து இங்கு கொண்டு வந்துவிற்பனை செய்வார்கள். இந்த வார சந்தையை புதியதாக அமைக்க அனைத்து கொட்டகைகள், கட்டிடங்கள், கடைகளைஎல்லாம் முழுமையாக இடிக்கப்பட்டது. ஆனால் 6 மாதமாக எந்த பணியும் தொடங்காமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். இங்கே கடை நடத்தும் வியாபாரிகள் பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் என அனைத்து மக்களும் வெயிலிலும். மழையிலும் கடும் அவதிப்படுகின்றனர். உடனடியாக நிரந்தர கடைகளை கட்டி இந்த வாரச் சந்தையை அழகு படுத்த வேண்டும் என்று. வியாபாரிகளும், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறுவசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்புமக்கள்ளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • வெள்ளிக்கிழமை வார சந்தைக்கு இன்று காலையில் இருந்து குவிந்தனர்.
    • ஒரு ஆட்டின் விலை சுமார் 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 8 ஆயிரம், 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகின.

    விழுப்புரம்: 

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெறும் பழமைவாய்ந்த வெள்ளிக்கிழமை வார சந்தைக்கு இன்று காலையில் இருந்து குவிந்தனர். அதிகாலை 3 மணி முதல் வேலூர், கடலூர், விழுப்புரம் காஞ்சிபுரம் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஆடு வளர்ப்பவர்கள் செம்மறி ஆடுகளையும் வெள்ளாடுகளையும் வாகனத்தில் செஞ்சி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதே போல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகளும் தமிழகத்திலிருந்து ஏராளமான வியாபாரிகளும் செஞ்சி சந்தைக்கு வருகை தந்து ஆடுகளை வாங்கினர். ஒரு ஆட்டின் விலை சுமார் 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 8 ஆயிரம், 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகின. சுமார் 10 ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ரூ 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

    மேலும், செஞ்சி சுற்றியுள்ள பகுதிகளில் மேய்ச்ச லுக்காக மலையும் காடுகளும் சார்ந்த பகுதி என்பதால் இங்கு வள ர்க்கப்படும்ஆ டுகளின் கறி சுவையாக இருக்கும் என்பதால் வியாபாரிகள் அதிக அளவில் வருகை தந்து ஆடுகைளை வாங்கி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்தையில் மாடுகள், கோழிகள்ஆகியவைகள் விற்பனையாகின. மாட்டுப் பொங்கலுக்கு கால் நடைகளுக்கு தேவையான கழுத்தில் கட்டும் கயிறுகள், கால்நடைகளுக்கு கட்டப்படும் சலங்கைகளை கால்நடை வளர்ப்பவர்கள் காலையிலேயே வாங்கி சென்றனர்.

    • வெப்பச்சலனம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
    • மின்னல் தாக்கி சரவணசெல்வி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    செய்துங்கநல்லூர்:

    வெப்பச்சலனம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சங்கம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சரவணசெல்வி (வயது 40). அந்தப்பகுதியில் இவர்ளுக்கு சொந்தமான நிலத்தில் பருத்தி பயிரிட்டுள்ளனர்.

    கடந்த சில நாட்களாக பருத்தி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை சரவணசெல்வி பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதில் மின்னல் தாக்கி சரவணசெல்வி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர், கருங்குளம், ராமானுஜர் புதூர், சேரகுளம், காரசேரி, நாட்டார்குளம் உள்பட பல்வேறு பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் ஓடியது.

    செய்துங்கநல்லூரில் புதன்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் சிறப்பு பெற்றது. இந்த சந்தையில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களது பொருட்களை வியாபாரம் செய்ய கொண்டு வருவார்கள். அதே போல் செய்துங்கநல்லூரைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் இந்த சந்தையில் பொருட்கள் வாங்கிச் செல்வார்கள்.

    திடீரென பெய்த மழையால் இந்த வார சந்தை வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தெருச்சாக்கடைகள் அனைத்தும் வாரச்சந்தையில் புகுந்ததால் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சந்தைக்கு வந்த பொதுமக்கள் மழையால் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர்.

    சாயர்புரத்தை சுற்றியுள்ள முள்ளன்விளை , புளியநகர், செபத்தையாபுரம், நடுவைகுறிச்சி, சுப்பிரமணியபுரம், நந்தகோபாலபுரம் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×