search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water problem"

    • குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தண்டையார்பேட்டையில் நடைபெற்றது.
    • காந்தி, ரேணுகா குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஸ்ரீதேவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் கோடைகால குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தண்டையார்பேட்டையில் நடைபெற்றது.

    மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமை தாங்கினார். இதில் கவுன்சிலர்கள் ஜெபதாஸ், ஜே. டில்லி பாபு, சர்மிளா, காந்தி, ரேணுகா குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஸ்ரீதேவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாள் ஒன்றுக்கு 9 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்குவதற்கான தொகை வழங்கப்படுவதாகும்.
    • மீட்டரின் அளவு படியே எதிர்காலத்தில் பேரூராட்சி கட்டணம் செலுத்தப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் தலைமையில் குடிநீர் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

    இதில் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. , தாசில்தார் ரவிச்சந்திரன், தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், ராஜு, பேரூராட்சி அலுவலர் குமார், பேருராட்சிமன்ற தலைவர் செந்தமிழ்செல்வி, பிச்சையன், துணைத் தலைவர் கதிரவன், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் அவ்வை பாலசுப்ரமணியன், சௌரிராஜன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    கூட்டத்தில் தலைஞாயிறு பேரூராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். திருத்துறைப்பூண்டி நகராட்சி தொகுதிக்கு மக்கள் தொகை கணக்கின்படி குடிநீர் வழங்குவதில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலையில் பற்றாக்குறை அளவை சுமூக கணக்கிட்டு குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.

    நாள் ஒன்றுக்கு 9 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்குவதற்கான தொகை வழங்கப்படுவதாகும். ஆனால் 4 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுவதால் உடனடியாக தண்ணீர் ஏற்றும் இடத்தில் அளவீடு கருவி பொருத்துவது எனவும் மீட்டரின் அளவு படியே எதிர்காலத்தில் பேரூராட்சி கட்டணம் செலுத்தப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி குடிநீர்வடிகால் வாரிய நீர் ஏற்று மையத்தில் திருத்துறைப்பூண்டி மற்றும் தலைஞாயிறு தண்ணீர் ஏற்றும் நேரத்தை தனித்தனியாக குறிப்பிட்டு போர்டுவைக்க வேண்டும்.

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கஜா புயல் காலம் வரை நீர் ஏற்றும் மின் நிலையத்திற்கு 24 மணி நேரமும்மின்சாரம் வழங்கப்பட்டது போல் தற்போது வழங்க வேண்டும் .ஒரு நாள் விட்டு ஒரு நாள் 12 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கவேண்டுமென கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

    ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக குடிநீர் சரிவர வழங்கவில்லை.

    இதனால் பல முறை பஞ்சாயத்து நிர்வாகத்திடமும் ஊராட்சி அலுவலக அதிகாரிகளிடமும் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்குவது முற்றிலுமாக நிறுத்தி விட்டனர். குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை காலி குடங்களுடன் திருப்பத்தூர் புதுப்பேட்டை மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவர்த்ததை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    சேலம் அருகே இன்று காலை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் 2 இடங்களில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ளது பருத்திக்காடு கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த கிராமத்திற்கு கடந்த சில மாதங்களாக 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்பட பலரிடம் புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் சேலம்-அரூர் சாலையில் பருத்திக்காடு பிரிவு ரோடு மற்றும் வைதாதனூர் பிரிவு ரோடு ஆகிய 2 இடங்களில் 50 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் சேலம்-அரூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் நீண்ட தூரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது ஆவேசம் அடைந்த மக்கள் குடிநீர் இல்லாமல் கடும் அவதிப்படுவதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை என்றும் புகார் கூறினர். மேலும் வட்டார வளர்ச்சி அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் முறையாக வழங்கப்படும் என்று உறுதி அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றும் ஆவேசமாக கூறினர்.

    அப்போது போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து 7 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டடம் 7.40 மணிக்கு கைவிடப்பட்டது. ஆனாலும் கலைந்து செல்லாத மக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரி வருகைக்காக சாலையோரம் காத்து நின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

    குடிநீர் வழங்க கோரி கிராம பொது மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் எதிரே தர்ணா போராட்த்தில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட எடம்பேடு கிராமத்தில் சுமார் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு பேரிட்டி வாக்கத்தில் அமைத்துள்ள ராட்சத ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து எடம்பேடுவில் உள்ள உள்ள மேல்நிலை தொட்டிக்கு அனுப்பப்படுகிறது.

    அங்கிருந்து குழாய் மூலம் எடம்பேடு கிராமத்துக்கு வினியோகிக்கப்பட்டது. தற்போது பேரிட்டிவாக்கத்தில் உள்ள ஆழ்துளை கிணறு வற்றிவிட்டதால் எடம்பேடு கிராமத்தில் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் நடைபெற வில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் கிராம பொது மக்கள் தூரத்தில் உள்ள வயல்களில் உள்ள பம்பு செட்களுக்கு சென்று குடங்களில் குடிநீரை எடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் செய்தும் தண்ணீர் வரவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக குடிநீர் வழங்க கோரி கிராம பொது மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் எதிரே தர்ணா போராட்த்தில் ஈடுபட்டனர்.

    பென்னாலூர்பேட்டை போலீசார் மற்றும் ஊராட்சி செயலாளர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடம் சென்று தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்தை நடத்தினார்கள்.

    புதிய ஆழ்துளை கிணறு அமைக்க தமிழக அரசு நிதி வழங்கி உள்ளது. ஓரிரு நாட்களில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.

    வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் பயணிகள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    கொடைக்கானல், மூணாறு, தேக்கடி, குமுளி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சபரிமலை உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு செல்வதற்கு வத்தலக்குண்டு பஸ் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது.

    தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் கொடைக்கானலுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்கள் வசதிக்காக பஸ்நிலையத்தில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது அந்த சின்டெக்ஸ்தொட்டி தண்ணீர் இன்றி காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    குறிப்பாக குழந்தைகளுடன் வரும் பயணிகள் தண்ணீர் கிடைக்காமல் பஸ்நிலையத்தில் தவித்து வருகின்றனர். அம்மா குடிநீர் பாட்டிலும் குறைந்த அளவே வருவதால் வேகமாக விற்று தீர்ந்து விடுகிறது. இதனை பயன்படுத்தி கடைக்காரர்கள் குடிநீர் பாட்டிலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் தடையின்றி மதுபானங்கள் கொண்டு வரப்படுகிறது. ஆனால் குடிநீருக்காக அலைந்து திரிவது தொடர் கதையாகி வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பஸ்சில் பயணம் செய்யும் முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. சில நேரங்களில் அவர்கள் மயக்கமடையும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வத்தலக்குண்டு பஸ் நிலையத்தில் குடிநீர் இல்லாதது சுற்றுலா பயணிகளை தவிப்புக்குள்ளாகி வருகிறது.

    மேலும் இலவச கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் அதிக அளவில் சிரமப்படுகின்றனர். எனவே பஸ்நிலையத்தில் குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஸ்ரீகாளிகாபுரம் கிராமம் உள்ளது.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இங்கு உள்ளன. இவர்களுக்கு ஊராட்சி சார்பில் ஆழ் துளை கிணற்றில் இருந்து மேல்நிலை குடிநீர் தொட்டியில் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

    கடந்த 4 மாதமாக ஆழ் துளை கிணற்றில் தண்ணீர் இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீ காளிகாபுரம் பெண்கள் சோளிங்கர்-வீரமங்கலம் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலுக்கான காரணம் குறித்து பெண்கள் கூறியதாவது:-

    கடந்த 4 மாதங்களாக இங்கு குடிநீர் கிடைக்க வில்லை. பஞ்சாயத்து, தாசில்தார் அலுவலகங்களில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மறியலில் ஈடுபட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள காட்டரம்பாக்கம் ஊராட்சியில் கடந்த 3 நாட்களாக குடி தண்ணீர் சப்ளை செய்யப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இருங்காட்டுகோட்டை - காட்டரம்பாக்கம் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரசன்ன லட்சுமி பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தார். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    காடையாம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பொட்டியபுரம் கிராமத்தில் ஆசாரிபட்டறை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக சரியாக குடிநீர் தண்ணீர் விநியோகம் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் புகார் கூறினர்.

    அதற்கு அதிகாரிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தான் குடிநீர் வழங்க முடியவில்லை. பணிகள் சரி செய்து முடித்ததும் உடனடியாக குடி தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    ஆனால், அதிகாரிகள் கூறியபடி குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து காலி குடங்களை எடுத்துக் கொண்டு வந்து இன்று காலை ஓமலூர்- தின்னப்பட்டி சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். மறியலால் சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, நீங்கள் மறியல் செய்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. பயணிகள் சிரமம் அடைகின்றனர். எனவே நீங்கள் மறியலை கைவிடுங்கள். உங்களது கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும். ஒரு வாரத்திற்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து பொதுமக்கள், போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்று சாலை மறியலை கைவிட்டனர்.

    திருவாடானை அருகே ஆறுமாதமாக குடி தண்ணீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கல்லூர்பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமமான திருமடிமிதியூர் தொத்தார் கோட்டை காலனி குடியிருப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்பு பகுதிக்கென்று ஒருவருடத்திற்கு முன்பு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் குடி தண்ணீர் வரவே இல்லை.

    குடிநீர் தொட்டியை திறப்பதற்காக வந்த அதிகாரிகள் முன்பு 5, 6 குடங்கள் தண்ணீர் ஊற்றி குழாயை திறந்து வைப்பது போல் போட்டோ எடுத்து சென்றவர்கள் அதன் பிறகு தண்ணீர் வரவே இல்லை.

    அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இது குறித்து கிராம மக்கள் கூறும் போது, இந்த கிராமத்திற்கு ஆறுமாதமாக தண்ணீர் கிடைக்கவில்லை. குடிநீர் குழாய் உடைந்துள்ளது.

    பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் இந்தப்பகுதி மக்களை புறக்கணிப்பதாகவே கருதுகிறோம். எனவே உடனடியாக குடி நீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு அருகே உள்ள ஆரணி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பின்னர் குழாய்கள் வழியாக குடிநீர் வினியோகிக்கப்படுறது.

    சுமார் 25 வருடங்குளுக்கு முன் கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டு புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதன் காரணமாக ஆழ்துளை கிணற்றிலிருந்து பெறப்படும் தண்ணீர் மேல் நிலை நீர் தேக்க தொட்டிக்கு செல்லாமல் நேரடியாக குழாய்கள் மூலம் வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பேரிட்டி வாக்கம் பகுதியில் கடந்த 4 நாட்களாக மின் சப்ளை சரியாக இல்லாதால் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் குடிநீர் வழங்க கோரி இன்று காலை பேரிட்டிவாக்கம்- ஊத்துக்கோட்டை ரோட்டில் காலி குடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சீரான மின் சப்ளைக்கு நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் பேரிட்டிவாக்கம்- ஊத்துக்கோட்டை இடையே சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கீழ்பென்னாத்தூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் இன்று சாலை மறியல் செய்தனர்.

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கொளத்தூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 150-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் கீழ்பென்னாத்தூர் சானிப்பூண்டி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். அப்போது சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×