search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிப்பட்டு"

    பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஸ்ரீகாளிகாபுரம் கிராமம் உள்ளது.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இங்கு உள்ளன. இவர்களுக்கு ஊராட்சி சார்பில் ஆழ் துளை கிணற்றில் இருந்து மேல்நிலை குடிநீர் தொட்டியில் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

    கடந்த 4 மாதமாக ஆழ் துளை கிணற்றில் தண்ணீர் இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீ காளிகாபுரம் பெண்கள் சோளிங்கர்-வீரமங்கலம் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலுக்கான காரணம் குறித்து பெண்கள் கூறியதாவது:-

    கடந்த 4 மாதங்களாக இங்கு குடிநீர் கிடைக்க வில்லை. பஞ்சாயத்து, தாசில்தார் அலுவலகங்களில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மறியலில் ஈடுபட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் பொதட்டூர்பேட்டை - நகர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டு அருகே உள்ள பாண்டரவேடு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் பொதட்டூர்பேட்டை - நகர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதட்டூர் பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    பள்ளிப்பட்டு அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்களது சொந்த செலவில் இலவச சைக்கிள்களை வாங்கி தெலுங்கு ஆசிரியர்கள் வழங்கினர்.
    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டை அடுத்த அத்திமாஞ்சேரிப் பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 850 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    தனியார் பள்ளிகள் ஆதிக்கத்தால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அத்திமாஞ்சேரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தெலுங்கு பாடப்பிரிவில் மாணவர்கள் சேருவது குறைவாக இருந்தது. இதனால் 6-ம் வகுப்பில் தெலுங்கு பாட பிரிவில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தெலுங்கு இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

    மேலும் அத்திமாஞ்சேரி பேட்டை சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வர போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் படிப்பை தொடர முடியாத நிலை இருந்தது.

    இதையடுத்து அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்களது சொந்த செலவில் இலவச சைக்கிள்களை வாங்கி தெலுங்கு ஆசிரியர்கள் வழங்கினர்.

    6-ம் வகுப்பு தெலுங்கு பாடபிரிவில் சேர்ந்த 2 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் தேவ சகாயம் முன்னிலையில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    இது குறித்து தெலுங்கு ஆசிரியர்கள் கூறுகையில், “தற்போது தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்பும் சூழல் இருப்பதால், கிராம பகுதிகளில் இருந்து மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கினால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்ற நோக்கத்தோடு இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது” என்றனர். #Tamilnews
    ×