என் மலர்

    செய்திகள்

    பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் மறியல்
    X

    பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் மறியல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் பொதட்டூர்பேட்டை - நகர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பள்ளிப்பட்டு:

    பள்ளிப்பட்டு அருகே உள்ள பாண்டரவேடு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் பொதட்டூர்பேட்டை - நகர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதட்டூர் பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×