search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water level"

    நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.10 அடியாக உள்ளது. அணைக்கு 94 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2237 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 46.74 அடியாக உள்ளது.

    நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1614 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 302.98 மி.கன அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 67.24 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 27.84 மி.கன அடியாக உள்ளது. பெரியாறு 17.6, தேக்கடி 0.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • அணைகள் மற்றும் ஆறு, குளம், கண்மாய் ஆகிய நீர் நிலைகள் தண்ணீரின்றி வறண்டு வருகிறது.
    • மேற்கு தொடர்ச்சி மலை, கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்டத்தில் மழை இல்லாததால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கூடலூர்:

    தமிழகத்தில் கோடை காலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. கோடை காலத்தை மிஞ்சும் அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் மதிய நேரத்தில் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.

    மேலும் அணைகள் மற்றும் ஆறு, குளம், கண்மாய் ஆகிய நீர் நிலைகள் தண்ணீரின்றி வறண்டு வருகிறது. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை, கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்டத்தில் மழை தொடர்ந்து ஏமாற்றி வருவதால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.25 அடியாக உள்ளது. 93 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 400 கன அடி நீர் தமிழக பகுதிக்கு திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர் மட்டம் 47.01 அடியாக சரிந்துள்ளது. வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, கடமலைக்குண்டு, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூல வைகை ஆறு வறண்டு காணப்படுகிறது. இதனால் வைகை அணைக்கு நீர் வரத்து அடியோடு நின்று விட்டது.

    எனவே மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 67.05 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    • 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.
    • தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யததால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டு ள்ளது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை ப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி யில் 14707 ஏக்கர் நிலத்தில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டு ள்ளது. அவ்வ ப்போது கண்ணாமூச்சி காட்டும் மழை ஏமாற்றி வருவதால் அணையின் நீர்மட்டம் 119.35 அடியாக குறைந்து ள்ளது. 95 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.56 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 69.70 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறப்பது வழக்கம்.
    • பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது வைகை அணை. இது தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5மாவட்ட மக்களின் விவ சாயத்திற்கும், குடிநீருக்கும் பிரதானமாக விளங்கி வருகிறது. அணைக்கு நீர்பிடிப்பு பகுதியான வருசநாடு, வெள்ளிமலை, மூலவைகை ஆறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை காரணமாகவும், பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் காரணமாகவும் நீர்வரத்து இருக்கும்.

    கடந்த சில மாதமாக வைகை அணை, பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தினால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. வைகை அணையில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து இல்லை. கடந்த கோடை காலத்தில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பெரியாறு, வைகை அணையில் இருந்து நீர் ஆவியாகி குறைய தொடங்கியது. இதனால் அணைகளுக்கு நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.

    ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறப்பது வழக்கம். இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

    தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.05 அடியாக உள்ளது. அணைக்கு 61 கன அடிநீர் வருகிறது. 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2836 மி.கன அடியாக உள்ளது. வைகை அணியின் நீர்மட்டம் 48.31 அடியாக உள்ளது. அணைக்கு வரத்து இல்லை. இருப்பு 1786 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. அணைக்கு வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 302.98 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 72.32 அடியாக உள்ளது. அணைக்கு வரத்து இல்லை. திறப்பு 3 கனஅடியாக உள்ளது. இருப்பு 32 மி.கன அடியாக உள்ளது. மழை எங்கும் இல்லை.

    • பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
    • குண்டேரிப்பள்ளம் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 41.75 அடியாகும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை தமிழகத்தில் 2-வது பெரிய மண் அணையாகும். பவானி ஆற்றின் நடுவில் கட்டப்பட்டுள்ள இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர அணையில் ஏராளமான குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பவானி சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்ட மலை பகுதி உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பொழிவு இல்லாததாலும், அணையில் இருந்து அதிகளவில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 77.73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 322 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1305 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 41.75 அடியாகும். தற்போது 32.44 அடியாக நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இதே போல் 30.84 அடியாக உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.72 அடியாகவும், 33.46 அடியாக உள்ள வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் தற்போது 22.11 அடியாகவும் குறைந்து காணப்பட்டது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். 

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 375 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் உயரம் 60 அடி ஆகும். பிஏபி பாசன தொகுப்பு அணைகளின் இது கடைசி அணையாகும் .இதன் மூலம் கோவை ,திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 375 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது .உடுமலை நகரம் மற்றும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன .இந்த அணைக்கு பரம்பிக்குளம் அணையிலிருந்து சர்க்கார் பதி மின் நிலையம் வழியாக காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. பாலாற்றின் மூலம் தண்ணீர் வருகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் வறண்டு கிடக்கின்றன .தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்யும் மழை காரணமாக தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் .அப்போது திருமூர்த்தி அணைக்கும் தண்ணீர் திறக்கப்படும்.

    தற்போது நீர் வரத்து இல்லாததால் தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் குறைவாக உள்ளது. பிஏபி அணைகளின் தாய் அணையாக கருதப்படும் வால்பாறை சோலையார் அணையில் மொத்தமுள்ள 165 அடியில் வெறும் 22. 49 அடிக்கு மட்டுமே நீர்மட்டம் உள்ளது. இதே போல் 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையில் 13 .16 அடிக்கும் 170 அடி உயரம் கொண்ட ஆழியார் அணையில் 67. 75 அடிக்கும் திருமூர்த்தி அணையில் 29. 19 அடிக்கும் மட்டுமே நீர்மட்டம் உள்ளது.

    திருமூர்த்தி அணையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 30 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. தற்போது அதைவிட 5 அடி குறைவாக உள்ளது. நீர்வரத்து ஒரு கண அடியாக உள்ளது .27 கன அடி நீர் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் துவங்கும். எனவே விரைவில் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    • ஜல்லி க்குட்டை நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்
    • நீர் நிலையை சுற்றி சுற்றுச்சூழல் மாசுபடுகிறது

    பு.புளியம்பட்டி,

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து மாதம்பாளையம் பகுதியில் உள்ள ஜல்லி க்குட்டை நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என ஜல்லிக்குட்டையில் கள ஆய்வு நடத்திய சப்-கலெக்டரிடம் பாரதிய ஜனதா விவசாய அணியினர் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஒருங்கிணைப்பு குழு ஆகிய அமைப்பினர் மனு அளித்தனர்.

    மேற்படி 70 ஆண்டு களுக்கு மேல் பழமையான ஜல்லிக்குட்டு நீர் நிலைக்கு அதன் அருகில் உள்ள தேவகிரி மலையில் இருந்து வரும் அதிகப்ப டியான மழை நீரானது கால்வாய் வழியாக நெடுஞ்சாலை துறையால் கட்டப்பட்டிருக்கும் நீர்வழிப் பாலத்தின் வழியே சென்று ஜல்லி குட்டை நீர் நிலையை வந்தடைகிறது. மேலும் இதன் மதகு வழியே வெளியேறும் நீரானது பல சிறு குளங்களை கடந்து நல்லூர் மற்றும் புங்கம்பள்ளி குளத்தை அடைகிறது.

    இந்த ஜல்லிக் குட்டையில் தேங்கும் நீரானது அப்பகுதி சுற்றியுள்ள சுமார் 850 ஏக்கர் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயத்திற்கு உதவும் என கூறுகின்றனர்.

    இந்த ஜல்லி குட்டையில் உள்ளூர் மற்றும் வெளியூர்ல் இருந்து இறந்தவர்களின் உடலை புதைத்து வருவதால் இந்த நீர் நிலையை சுற்றி சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

    ஜல்லி குட்டையில் நீர் நிலையை நம்பி அப்பகுதி விவசாயிகள் உள்ளதால் குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி தருமாறும் மற்றும் ஜல்லிக்குட்டையில் இறந்த வர்களின் உடலை புதைக்க கூடாது என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    • பி.ஏ.பி பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • நல்லாற்றில் இருந்து 45 கனஅடி தண்ணீரும் வெளியேற்ற ப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலையை அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்பட்டு வருகிறது. வனப்பகுதியில் பெய்யும் மழை மற்றும் அதன் வழி உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு திருமூர்த்தி அணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பி.ஏ.பி பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் செய்யப் பெற்று வருகிறது. இதற்கு பி.ஏ.பி., தொகுப்பு அணைகளும் நீர்வரத்தை அளித்து உதவி புரிந்து வருகிறது. அதுமட்டுமின்றி உடுமலை, பூலாங்கிணர், கணக்கம்பா ளையம், குடிமங்கலம், மடத்து க்குளம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    அதே போன்று அமராவதி அணை மூலமாக பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்கள் செயல்படு த்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வனப் பகுதியில் உள்ள நீராதாரங்கள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு விட்டது. அணைகளுக்கு வரும் வரும் சுனைகளின் தண்ணீரும் முற்றிலுமாக நின்று விட்டது. இதனால் நீர்வரத்து இல்லாமல் அணைகள் வறண்டு காணப்படுகின்றன. நீர் நிரம்பி நின்ற இடங்கள் மணல் திட்டுகளாக காட்சியளிக்கின்றன.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில்:- வெப்பம் அதிகரித்து இருக்கும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வதற்கு உண்டான சூழல் நிலவி வருகிறது. அங்கேங்கே அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யவில்லை. இதனால் கவலையாக உள்ளது. மேலும் கோடை காலத்தை பயன்படுத்தி அணைகளில் தூர்வாரும் பணியை தொடங்கி நீர் நிற்கும் தேங்கி பரப்பை அதிகப்படுத்த வேண்டும். நவீன இயந்திரங்கள் மூலம் ஆழப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்றனர்.

    நேற்று காலை நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் 30.71 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 129 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 116 கனஅடி தண்ணீரும் நல்லாற்றில் இருந்து 45 கனஅடி தண்ணீரும் வெளியேற்ற ப்படுகிறது. அணைப்பகுதியில் ஒரு மில்லி மீட்டர் மழையும், நல்லாறு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. நேற்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் 55.06 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடி க்கு 223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. இந்த தகவலை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.
    • பாப்பநாயக்கன்பட்டி, பீமன்பாளையம், ஏழுபுளி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.

    வாழப்பாடி:

    கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.

    இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, பீமன்பாளையம், ஏழுபுளி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.

    கரியக்கோயில் ஆற்றில் பனைமடல், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி கிராமங்களிலுள்ள தடுப்பணைகள் மற்றும் கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர். அபிநவம், புத்திரகவுண்டன்பாளையம் ஏரிகளில் இருந்து ஏறக்குறைய 3000 ஏக்கர் பழைய ஆயக்கட்டு பாசனம் பெறுகின்றன.

    கடந்தாண்டு இறுாதியில் பெய்த பருவமழையால் அணையில், 49.98 அடி உயரத்தில் 171 மில்லியன கன அடி தண்ணீர் தேங்கியது. நிலத்தடி நீர்மட்டம் உயரவும், குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென, அணைப்பாசன புதிய ஆயக்கட்டு மற்றும் ஆறு மற்றும் ஏரிப் பாசன பழைய ஆயக்கட்டு விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து, கரியக்கோயில் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு அணை வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து மார்ச் மாதத்தில் 24 நாட்களுக்கு தலைமை மதகுகள் வழியாக வினாடிக்கு 40 கனஅடி வீதம் கரியக்கோயில் ஆற்றிலும், புதிய ஆயக்கட்டான அணை வாய்க்கால் பாசனத்திற்காக அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் வினாடிக்கு 15 கனஅடி வீதம் 21 நாட்களுக்கு சுழற்சி முறையிலும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் அணையின் நீர்மட்டம் செவ்வாயக்கிழமை நிலவரப்படி 27.52 அடியாக சரிந்து போனது. தற்போது அணையில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே எஞ்சியுள்ளது. கோடை தொடங்கிய நிலையிலேயே அணையின் நீர்மட்டம் சரிந்து போனதால், எதிர்வரும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் கடும் வறட்சி நிலவும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வறட்சியை சமாளிக்க கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    • மணல் குவாரி அமைக்கப்பட்டு மணல் அள்ளப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும்.
    • கிராம சபை கூட்டத்தில் மணல் குவாரி அமைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே பவனமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க உத்தேசிக்க பட்டு இருந்தது.

    இதற்கு எதிராக விவசாயிகள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் பவனமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றில் மணல் குவாரி அனுமதிக்கப்படவில்லை.

    தற்போது இதுகுறித்து மணல் குவாரியில் ஆய்வு நடத்தி ஆய்வு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாக பவனமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றில் உத்தேசிபட்டிருக்கும் மணல் குவாரி அமைவிடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது நீர்வள ஆதாரத்துறை, கனிமவளத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    பவனமங்கலம் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைவிடம் உள்ள இடத்தை காவிரி ஆற்றில் இறங்கி நடந்து சென்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார்.

    அப்போது பவனமங்கலம் கிராம மக்கள் சார்பில் வழக்கறிஞர் ஜீவகுமார், பாலகணேசன், பொன்னு ராமன் ஆகியோர் கலெக்டரிடம் பவனமங்கலம் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது என்று மனு ஒன்றை அளித்தனர்.

    இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பவனமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு பாசன வசதி அளிக்கும் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டு இங்குள்ள மணல் அள்ளப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, ஊரின் குடிநீர்.

    மற்றும் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். கடந்த 2018 ஆம் ஆண்டு மணல் குவாரி அமைக்க முயற்சி செய்தபோது பவனமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மணல் குவாரி அமைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    எனவே எங்கள் கிராம மக்களின் நலனுக்காகவும் கிராம சபைமுடிவுகளுக்கும் எதிராக பவனமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைப்பதை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    விவசாயிகளிடமிருந்து மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரி வித்தார்.

    கடந்த 2018ம் ஆண்டு பவனமங்கலம் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைப்பு குறித்த அறிவிப்பு பலகையும், மணல் குவாரிக்காக அடையாளம் இடப்பட்டு நடப்பட்ட சிமெண்ட் கம்பங்களும் காவிரி ஆற்றில் அப்படியே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 116.90 அடியாக உள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 53.94 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.90 அடியாக உள்ளது. 50கன அடிநீர் வருகிறது. 256 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 53.94 அடியாக உள்ளது.

    163 கன அடிநீர் வருகிறது. 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.05 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது.

    10 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை 9.8, போடி 1.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • பாலாற்றின் குறுக்கே ரூ. 7 கோடி மதிப்பில் அணைக்கட்டு அமைக்கும் திட்டத்தை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    • நீர் மட்டம் உயர்ந்து விவசாயப்பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மாதவராயன்பட்டி கிராமம் அருகே ரூ. 7 கோடி மதிப்பில் அணைக்கட்டு அமைத்து கோட்டையிருப்பு மற்றும் நாட்டார்மங்கலம் கண்மாய்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் நடைபெறும் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) கார்த்திகேயன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சண்முக வடிவேல், உதவி செயற்பொறியாளர்கள் பஞ்சவர்ணம், சங்கர், ஊராட்சி மன்றத்தலைவர்கள் திலகவதி பாண்டியன், சத்தியகலா, சுசிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் பெரியகருப்பன் கூறும்போது, இந்த திட்டத்தின் மூலம் நாட்டார்மங்கலம், கோட்டையிருப்பு, மாதவராயன்பட்டி, கீழ்நிலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இந்தப்பகுதியில் நீர் மட்டம் உயர்ந்து விவசாயப்பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றார்.

    ×