search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமூர்த்தி"

    • பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக்கொண்டு திருமூர்த்தி அணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    அதே போன்று அமராவதி அணை மூலமாக பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீராதாரங்கள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு விட்டது. அணைகளுக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரும் முற்றிலுமாக நின்று விட்டது. இதனால் நீர்வரத்து இல்லாமல் அணைகள் வறண்டு வருகிறது. ஆங்காங்கே மண் திட்டுக்களாக தோற்றம் அளித்து வருகிறது.

    கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வதற்கு உண்டான சூழல் நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து உள்ளனர்.

    • பி.ஏ.பி பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • நல்லாற்றில் இருந்து 45 கனஅடி தண்ணீரும் வெளியேற்ற ப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலையை அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்பட்டு வருகிறது. வனப்பகுதியில் பெய்யும் மழை மற்றும் அதன் வழி உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு திருமூர்த்தி அணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பி.ஏ.பி பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் செய்யப் பெற்று வருகிறது. இதற்கு பி.ஏ.பி., தொகுப்பு அணைகளும் நீர்வரத்தை அளித்து உதவி புரிந்து வருகிறது. அதுமட்டுமின்றி உடுமலை, பூலாங்கிணர், கணக்கம்பா ளையம், குடிமங்கலம், மடத்து க்குளம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    அதே போன்று அமராவதி அணை மூலமாக பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்கள் செயல்படு த்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வனப் பகுதியில் உள்ள நீராதாரங்கள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு விட்டது. அணைகளுக்கு வரும் வரும் சுனைகளின் தண்ணீரும் முற்றிலுமாக நின்று விட்டது. இதனால் நீர்வரத்து இல்லாமல் அணைகள் வறண்டு காணப்படுகின்றன. நீர் நிரம்பி நின்ற இடங்கள் மணல் திட்டுகளாக காட்சியளிக்கின்றன.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில்:- வெப்பம் அதிகரித்து இருக்கும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வதற்கு உண்டான சூழல் நிலவி வருகிறது. அங்கேங்கே அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யவில்லை. இதனால் கவலையாக உள்ளது. மேலும் கோடை காலத்தை பயன்படுத்தி அணைகளில் தூர்வாரும் பணியை தொடங்கி நீர் நிற்கும் தேங்கி பரப்பை அதிகப்படுத்த வேண்டும். நவீன இயந்திரங்கள் மூலம் ஆழப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்றனர்.

    நேற்று காலை நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் 30.71 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 129 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 116 கனஅடி தண்ணீரும் நல்லாற்றில் இருந்து 45 கனஅடி தண்ணீரும் வெளியேற்ற ப்படுகிறது. அணைப்பகுதியில் ஒரு மில்லி மீட்டர் மழையும், நல்லாறு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. நேற்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் 55.06 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடி க்கு 223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. இந்த தகவலை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விக்ரம் படத்தில் கமல் எழுதி, பாடிய பத்தல பத்தல பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது.
    • திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக கமல் அறிவித்துள்ளார்.

    மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து 'விக்ரம்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். கமலின் தீவிர ரசிகரான இவர் இந்தப்படத்தை இயக்கியது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பிருந்தது. அதே போல் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை 'விக்ரம்' படம் முழுவதுமாக பூர்த்தி செய்துள்ளது.

    இந்த படத்தில் கமலே எழுதி, பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அனிருத் இசையில் வெளியான இந்தப்பாடலை அண்மையில் பார்வைத்திறன் இல்லாத மாற்றுத் திறனாளியான திருமூர்த்தி பாடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    திருமூர்த்தி - கமல்

    திருமூர்த்தி - கமல்


    இந்நிலையில் திருமூர்த்தியை நேரில் அழைத்து கமல் பாராட்டியுள்ளார். மேலும் அவரை தனது இசைப்பள்ளியில் சேர்த்துகொள்வதாக ரகுமான் உறுதியளித்துள்ளார். திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக கமல் அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×