search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகற்ற வேண்டும்"

    • ஜல்லி க்குட்டை நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்
    • நீர் நிலையை சுற்றி சுற்றுச்சூழல் மாசுபடுகிறது

    பு.புளியம்பட்டி,

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து மாதம்பாளையம் பகுதியில் உள்ள ஜல்லி க்குட்டை நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என ஜல்லிக்குட்டையில் கள ஆய்வு நடத்திய சப்-கலெக்டரிடம் பாரதிய ஜனதா விவசாய அணியினர் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஒருங்கிணைப்பு குழு ஆகிய அமைப்பினர் மனு அளித்தனர்.

    மேற்படி 70 ஆண்டு களுக்கு மேல் பழமையான ஜல்லிக்குட்டு நீர் நிலைக்கு அதன் அருகில் உள்ள தேவகிரி மலையில் இருந்து வரும் அதிகப்ப டியான மழை நீரானது கால்வாய் வழியாக நெடுஞ்சாலை துறையால் கட்டப்பட்டிருக்கும் நீர்வழிப் பாலத்தின் வழியே சென்று ஜல்லி குட்டை நீர் நிலையை வந்தடைகிறது. மேலும் இதன் மதகு வழியே வெளியேறும் நீரானது பல சிறு குளங்களை கடந்து நல்லூர் மற்றும் புங்கம்பள்ளி குளத்தை அடைகிறது.

    இந்த ஜல்லிக் குட்டையில் தேங்கும் நீரானது அப்பகுதி சுற்றியுள்ள சுமார் 850 ஏக்கர் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயத்திற்கு உதவும் என கூறுகின்றனர்.

    இந்த ஜல்லி குட்டையில் உள்ளூர் மற்றும் வெளியூர்ல் இருந்து இறந்தவர்களின் உடலை புதைத்து வருவதால் இந்த நீர் நிலையை சுற்றி சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

    ஜல்லி குட்டையில் நீர் நிலையை நம்பி அப்பகுதி விவசாயிகள் உள்ளதால் குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி தருமாறும் மற்றும் ஜல்லிக்குட்டையில் இறந்த வர்களின் உடலை புதைக்க கூடாது என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    • ஆக்கிரமிப்புகள் குறித்து முடிவெடுக்க அதிகாரிகள் குழு அமைக்கப்படடது.
    • இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

    சென்னிமலை:

    சென்னிமலையில் காங்கேயம் ரோடு, அரச்சலூர்ரோடு, நான்கு ராஜா வீதிகள், பெருந்துறை ரோடு, ஊத்துக்குளி ரோடு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து முடிவெடுக்க அதிகாரிகள் குழு அமைக்கப்படடது.

    இக்குழு வும் அறிக்கை தாக்கல் செய்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும், இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வில்லை.

    இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.

    எனவே மாவட்ட கலெக்டர் நேரடி யாக தலையிட்டு ஆக்கிரமிப்பு க்களை அகற்றி, சாலை விரிவாக்க த்துக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவை மாநகராட்சியின் மூலம் ஆக்கிரமிப்பை அகற்ற சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    • போக்குவரத்தை எளிமைப்படுத்துவது குறித்து கோவை மாநகர காவல் துறை சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    கோவை

    கோவை மாநகரில் சாலையோரங்களில் கடைகளுக்காக ஆக்கிரமித்துள்ளவர்கள் அடுத்த 3 நாள்களுக்குள் அவற்றை அகற்றிவிட வேண்டும் என மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக கோவை மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாநகரில் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சாலை உபயோகிப்பாளர்கள் செல்ல வேண்டிய இடங்க–ளுக்கு கால விரயமி–ன்றியும், சிரமமின்றியும், பாதுகாப்பாகவும் செல்லும் வகையில் போக்குவரத்தை எளிமைப்படுத்துவது குறித்து கோவை மாநகர காவல் துறை பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக சாலையோர மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக கோவை மாநக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் தலைமையிலான போக்குவரத்து பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவு அதிகாரிகள் இணைந்த குழு கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கான காரணங்களையும், அதை சரி செய்வது குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தது.

    இதில், மாநகரில் சில இடங்களில் தேநீர் விடுதிகள் மற்றும் சாலையோர கடைகள் நடத்துவோர் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் அனுமதிக்கப்பட்டதற்கு மாறாக பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கும், சாலை போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

    எனவே, அடுத்த 3 நாள்களுக்குள் சாலையோர கடைகள் மற்றும் தேநீர் விடுதிகள் நடத்துவோர் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமம் மற்றும் அனுமதிக்கப்பட்ட எல்லைக்கு மாறாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை காலி செய்து காவல் துறையின் போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கோவை மாநகராட்சியின் மூலம் ஆக்கிரமிப்பை அகற்ற சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×