search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "should be removed"

    • வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் பொதுப்பணித்துறை மூலம் சாலை அமைக்க பணிகள் தொடங்கியது.
    • புதைவட கேபிள் அமைக்கும் பணி முழுமை பெறாமல் இருப்பதால் சாலை அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் பொதுப்பணித்துறை மூலம் சாலை அமைக்க பணிகள் தொடங்கியது.

    இந்த நிலையில் மின்துறை சார்பில் புதைவட கேபிள் அமைக்கும் பணி முழுமை பெறாமல் இருப்பதால் சாலை அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் நடந்தது.

    கூட்டத்தீதில், வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ஆறுமுகம், செயற்பொறி யாளர் திரு நாவுக்கரசு, பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்குப் பிரிவு செயற்பொறியாளர் சவுந்தர்ராஜன், உதவிப் பொறியாளர் சீனிவாசன், மின்துறை புதைவடப் பிரிவு உதவிப் பொறியாளர் லோகநாயகி, கொம்யூன் இளநிலைப் பொறியாளர் சத்தியநாராயணா ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், மாட வீதிகளில் விடுபட்டுள்ள மின் புதைவட கேபிள் அமைக்கும் பணியை துரிதாக முடித்துக் கொடுத்து, பொதுப்பணி த்துறை மூலம் சாலை அமைக்கும் பணியை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும். சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கொம்யூன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா அறிவுறுத்தினார்.

    மேலும், பொதுப்பணித்துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கள் மூலம் வில்லியனூர் தொகுதியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசித்தனர்.   

    • ஜல்லி க்குட்டை நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்
    • நீர் நிலையை சுற்றி சுற்றுச்சூழல் மாசுபடுகிறது

    பு.புளியம்பட்டி,

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து மாதம்பாளையம் பகுதியில் உள்ள ஜல்லி க்குட்டை நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என ஜல்லிக்குட்டையில் கள ஆய்வு நடத்திய சப்-கலெக்டரிடம் பாரதிய ஜனதா விவசாய அணியினர் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஒருங்கிணைப்பு குழு ஆகிய அமைப்பினர் மனு அளித்தனர்.

    மேற்படி 70 ஆண்டு களுக்கு மேல் பழமையான ஜல்லிக்குட்டு நீர் நிலைக்கு அதன் அருகில் உள்ள தேவகிரி மலையில் இருந்து வரும் அதிகப்ப டியான மழை நீரானது கால்வாய் வழியாக நெடுஞ்சாலை துறையால் கட்டப்பட்டிருக்கும் நீர்வழிப் பாலத்தின் வழியே சென்று ஜல்லி குட்டை நீர் நிலையை வந்தடைகிறது. மேலும் இதன் மதகு வழியே வெளியேறும் நீரானது பல சிறு குளங்களை கடந்து நல்லூர் மற்றும் புங்கம்பள்ளி குளத்தை அடைகிறது.

    இந்த ஜல்லிக் குட்டையில் தேங்கும் நீரானது அப்பகுதி சுற்றியுள்ள சுமார் 850 ஏக்கர் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயத்திற்கு உதவும் என கூறுகின்றனர்.

    இந்த ஜல்லி குட்டையில் உள்ளூர் மற்றும் வெளியூர்ல் இருந்து இறந்தவர்களின் உடலை புதைத்து வருவதால் இந்த நீர் நிலையை சுற்றி சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

    ஜல்லி குட்டையில் நீர் நிலையை நம்பி அப்பகுதி விவசாயிகள் உள்ளதால் குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி தருமாறும் மற்றும் ஜல்லிக்குட்டையில் இறந்த வர்களின் உடலை புதைக்க கூடாது என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    ×