search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை இல்லாததால் 119 அடியாக குறைந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
    X

    கோப்பு படம்.

    மழை இல்லாததால் 119 அடியாக குறைந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

    • 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.
    • தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யததால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டு ள்ளது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை ப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி யில் 14707 ஏக்கர் நிலத்தில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டு ள்ளது. அவ்வ ப்போது கண்ணாமூச்சி காட்டும் மழை ஏமாற்றி வருவதால் அணையின் நீர்மட்டம் 119.35 அடியாக குறைந்து ள்ளது. 95 கன அடி நீர் வருகிறது. 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.56 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 69.70 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    Next Story
    ×