என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vehicle Sales"
- விற்பனைக்கு வந்த முதல் ஆண்டிலேயே ஹோண்டா ஆக்டிவா மாடல் விற்பனையில் 55 ஆயிரம் யூனிட்களை கடந்து அசத்தியது.
- 2004-05 காலக்கட்டத்தில் ஹோண்டா ஆக்டிவா விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை எட்டியது.
ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் மற்றொரு மைல்கல்லை எட்டி அத்தியிருக்கிறது. ஹோண்டா ஆக்டிவா மாடல் விற்பனையில் 3 கோடி யூனிட்களை கடந்துள்ளது. இந்த மைல்கல்லை எட்டுவதற்கு ஹோண்டா நிறுவனம் 22 ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமாகவே ஹோண்டா ஆக்டிவா மாடல் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
2001-ம் ஆண்டு ஆக்டிவா மாடல் 102சிசி ஸ்கூட்டர் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள 4 ஸ்டிரோக் என்ஜின் மற்றும் CVT யூனிட், இந்திய வாடிக்கையாளர்களை கவர்ந்தது. இரு பாலினத்தவரும் பயன்படுத்தும் வகையிலான டிசைன் இந்த ஸ்கூட்டரின் விற்பனை அதிகரிக்க காரணங்களாக மாறின. விற்பனைக்கு வந்த முதல் ஆண்டிலேயே ஹோண்டா ஆக்டிவா மாடல் 55 ஆயிரம் யூனிட்களை கடந்து அசத்தியது.
சந்தையில் நேரடி போட்டியை ஏற்படுத்த வேறு எந்த மாடல்களும் இல்லாத நிலையில், ஆக்டிவா மாடல் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. 2004-05 காலக்கட்டத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. 2008-09 ஆண்டுகளில் ஆக்டிவா மாடல் 110சிசி வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் முந்தைய வெர்ஷனை விட 15 சதவீதம் அதிக மைலேஜ் வழங்குவதாக ஹோண்டா அறிவித்தது.
இந்த காலக்கட்டத்தில் ஆக்டிவா விற்பனை ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரம் யூனிட்களாக அதிகரித்தது. பிறகு 2014-15 காலக்கட்டத்தில் ஆக்டிவா 3ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவே முதல் ஆக்டிவா 125 மாடல் ஆகும். 2016-ம் ஆண்டு ஹோண்டா ஆக்டிவா விற்பனையில் ஒரு கோடி யூனிட்களை கடந்தது. இந்த சமயத்தில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் என்பதை கடந்து, இந்தியாவில் விற்பனையாகும் முன்னணி இருசக்கர வாகனம் என்ற பெருமையை ஹோண்டா ஆக்டிவா பெற்றது.
இதைத் தொடர்ந்து வெறும் 7 ஆண்டுகளில் ஹோண்டா ஆக்டிவா மாடல் இரண்டு கோடி யூனிட்களை கடந்து அசத்தியது. 2018 ஆண்டு ஹோண்டா ஆக்டிவா மாடல் இரண்டு கோடி யூனிட்களை கடந்த நிலையில், 2023 ஆண்டிலேயே மூன்று கோடி யூனிட்கள் எனும் மைல்கல்லை கடந்துள்ளது.
- இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.
- நெக்சான் EV பிரைம் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 9.9 நொடிகளில் எட்டிவிடும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தை விற்பனையில் நெக்சான் EV மாடல் 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. 2020 ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நெக்சான் EV பிரைம் மற்றும் மேக்ஸ் என இரண்டு வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் நெக்சான் EV சீரிஸ் விலை ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம் என்று துவங்குகிறது. டாப் என்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 54 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
நெக்சான் EV பிரைம் மாடலில் 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது. நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி உள்ளது. இந்த வேரியன்ட் முழு சார்ஜ் செய்தால் 453 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது.
இரண்டு வெர்ஷன்களிலும் IP67 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி, 3.3 கிலோவாட் அல்லது 7.2 கிலோவாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. நெக்சான் EV பிரைம் மாடலை டிசி ஃபாஸ்ட் சார்ஜ் மூலம் 60 நிமிடங்களில் 10-இல் இருந்து 60 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும். EV மேக்ஸ் மாடலை 50 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 56 நிமிடங்களில் 86 சதவீதம் வரை சார்ஜ் செய்திடலாம்.
டாடா நெக்சான் EV பிரைம் மற்றும் மேக்ஸ் மாடல்கள் முறையே 129 ஹெச்பி பவர், 245 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 143 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. நெக்சான் EV பிரைம் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 9.9 நொடிகளில் எட்டிவிடும். EV மேக்ஸ் மாடல் இதே வேகத்தை ஒன்பது நொடிகளில் எட்டிவிடும்.
- ஒட்டுமொத்த விற்பனையில் இன்னோவா க்ரிஸ்டா மட்டும் 25 சதவீத பங்குகளை பெற்றுள்ளது.
- டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது கார் மாடல் ஆகும்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் டீசல் என்ஜின் கொண்ட இன்னோவா க்ரிஸ்டா மாடல் மே மாத விற்பனையில் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்திய சந்தையில் ஒட்டுமொத்த டொயோட்டா வாகனங்கள் விற்பனையில் இன்னோவா க்ரிஸ்டா மட்டும் 25 சதவீத பங்குகளை பெற்று அசத்தியுள்ளது.
மே 2023 மாதத்தில் மட்டும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 4 ஆயிரத்து 786 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதன் வருடாந்திர விற்பனை 75 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் டொயோட்டா நிறுவனம் 2 ஆயிரத்து 737 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இதன் மூலம் டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது கார் மாடல் என்ற பெருமையை இன்னோவா க்ரிஸ்டா பெற்று இருக்கிறது.
கடந்த மே மாதம் அதிகம் விற்பனையான கிளான்சா மாடலை விட இன்னோவா க்ரிஸ்டா 393 யூனிட்களே குறைவாக விற்பனையாகி உள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் மாடல் கடந்த மாதத்தில் 2 ஆயிரத்து 990 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. பழைய மாடல் என்ற வகையிலும் இன்னோவா க்ரிஸ்டா, புதிய எம்பிவி-யான ஹைகிராஸ்-ஐ விற்பனையில் முந்தியுள்ளது.
இன்னோவா க்ரிஸ்டா மாடலில் 2.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 145 ஹெச்பி பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 205 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் ஹைப்ரிட் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது.
இந்த என்ஜின் 184.8 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பெட்ரோல் மாடலில், eCVT கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலின் விலை ரூ. 18 லட்சத்து 55 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 29 லடச்த்து 99 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2018 ஆண்டு என்டார்க் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
- அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பிரபலமாக இருந்துவரும் என்டார்க் மாடல் விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது.
டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர் இந்திய சந்தை விற்பனையில் 1.45 மில்லியன் யூனிட்களை கடந்துள்ளது. கடந்த 2018 பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் என்டார்க் விற்பனையில் 1 மில்லியன் யூனிட்களை 2022 ஏப்ரல் மாதம் எட்டியது. மார்ச் 2023 இறுதி வரை என்டார்க் மொத்த விற்பனை 12 லட்சத்து 89 ஆயிரத்து 171 யூனிட்களாக இருந்தது. 2019 நிதியாண்டில் மட்டும் 1 லட்சத்து 65 ஆயிரத்து 947 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது.
2023 நிதியாண்டில் டிவிஎஸ் என்டார்க் ஒட்டுமொத்த விற்பனை 2 லட்சத்து 90 ஆயிரத்து 539 யூனிட்கள் ஆகும். இதன் மூலம் வருடாந்திர விற்பனையில் 16.55 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஒரே ஆண்டில் டிவிஎஸ் நிறுவனம் இத்தனை யூனிட்கள் விற்பனை செய்தது இதுவே முதல் முறை ஆகும். இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள் பட்டியலில் என்டார்க் மாடல் நான்காவது இடத்தில் உள்ளது.
முதல் மூன்று இடங்களில் ஆக்டிவா, டிவிஎஸ் ஜூப்பிட்டர் மற்றும் சுசுகி அக்சஸ் போன்ற மாடல்கள் உள்ளன. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே டிவிஎஸ் என்டார்க் மாடல் பிரபலமாக இருந்து வருகிறது. அறிமுகம் செய்யப்பட்ட இரண்டே மாதங்களில் என்டார்க் மாடல் 19 ஆயிரத்து 809 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இதே ஆண்டின் இறுதியில் டிவிஎஸ் நிறுவனம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 039 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.
பின் 2020 ஆண்டு 2 லட்சத்து 65 ஆயிரத்து 016 யூனிட்கள் விற்பனையானது. இது வருடாந்திர அடிப்படையில் 24 சதவீதம் அதிகம் ஆகும். 2021 நிதியாண்டில் கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையிலும் என்டார்க் மாடல் 2 லட்சத்து 51 ஆயிரத்து 491 யூனிட்களை விற்பனை செய்திருந்தது. 2022 நிதியாண்டில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 277 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இந்த வரிசையில் 2023 நிதியாண்டில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 539 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
- பொலிரோ நியோ மாடலும் பொலிரோ சீரிஸ் விற்பனை அதிகரிக்க உதவி இருக்கிறது.
- வருடாந்திர விற்பனை அடிப்படையில் 54 சதவீதம் வளர்ச்சியை பொலிரோ மாடல் பதிவு செய்துள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ மாடல் 2023 நிதியாண்டில் மட்டும் விற்பனையில் 1 லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. 2000-ம் ஆவது ஆண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பொலிரோ மாடல் இதுவரை விற்பனையில் 14 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.
2021 மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பொலிரோ நியோ மாடலும் பொலிரோ சீரிஸ் விற்பனை அதிகரிக்க உதவி இருக்கிறது. இந்தியாவில் விற்பனையான டாப் 30 யுடிலிட்டி வாகனங்கள் பட்டியலில் மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ மாடல் மொத்தத்தில் 1 லட்சத்து 577 யூனிட்கள் விற்பனையாகி ஏழாவது இடம்பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்கள் இணைந்து மாதம் 8 ஆயிரத்து 381 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதன் மூலம் வருடாந்திர விற்பனை அடிப்படையில் 54 சதவீதம் வளர்ச்சியை பொலிரோ மாடல் பதிவு செய்துள்ளது.
இந்திய சந்தையில் பொலிரோ மாடல் B4, B6, மற்றும் B6 (O) என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 9 லட்சத்து 92 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 03 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
"விற்பனையில் 14 லட்சம் யூனிட்களை கடந்து இருப்பதன் மூலம் பொலிரோ மாடல் எஸ்யுவி என்பதை கடந்து, இந்தியாவின் ஊரக மற்றும் வளர்ந்து வரும் நகர்ப்புறங்களில் மிகவும் பிரபலமான பெயராகவும் மாறி இருக்கிறது. 2023 நிதியாண்டில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் விற்பனை எங்களது வாடிக்கையாளர்களின் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறது," என்று மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோடிவ் பிரிவு தலைவர் வீஜே நக்ரா தெரிவித்துள்ளார்.
- நிதியாண்டின் கடைசி மாதத்தில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதிக யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது.
- தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது.
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது மார்ச் மாத வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. 2023 மார்ச் மாதத்தில் மட்டும் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் சுமார் 27 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் ஒலா எலெக்ட்ரிக் பங்குகள் 70 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஒரே மாதத்தில் இத்தனை யூனிட்கள் விற்பனை செய்திருப்பது ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு முதல் முறை ஆகும். சமீபத்திய மாதாந்திர விற்பனை விவரங்களை வைத்து பார்க்கும் போது ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் அதிக வாகனங்களை விற்பனை செய்திருப்பது உறுதியாகி இருக்கிறது.
தற்போதைய நிதியாண்டில் போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஒலா எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது. 2022-23 நிதியாண்டின் கடைசி மாதத்தில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதிக யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. அதன்படி தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது.
ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வைத்திருப்போர் பெரும்பாலும் ஒலா எக்ஸ்பீரியன்ஸ் செண்டரை சுற்றி 20 கிலோமீட்டர் பரப்பளவில் வசிக்கின்றனர் என்று ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 2 முதல் 4 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி பேக்குகளால் வித்தியாசப்படும் ஆறு மாடல்களை ஒலா எலெக்ட்ரிக் விற்பனை செய்து வருகிறது.
- மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்கள் பட்டியலில் வேகன்ஆர் இடம்பெற்று இருக்கிறது.
- 2023 முதல் காலாண்டில் மட்டும் மாருதி நிறுவனம் மூன்று கார்களை அறிமுகம் செய்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் 2023 முதல் காலாண்டில் மட்டும் 3 லட்சத்து 98 ஆயிரத்து 494 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 2022 முதல் காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 3 லட்சத்து 08 ஆயிரத்து 095 யூனிட்களையே விற்பனை செய்திருந்தது. அந்த வகையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனை வருடாந்திர அடிப்படையில் 62 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
2023 முதல் காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 69 ஆயிரத்து 437 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது. 2022 முதல் காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 45 ஆயிரத்து 519 யூனிட்களையே ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மாருதி சுசுகி நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 2023 முதல் காலாண்டில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 931 யூனிட்கள் ஆகும். இது முந்தைய ஆண்டில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 614 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் XL6, எர்டிகா மற்றும் மாருதி பிரெஸ்ஸா என மூன்று புது வாகனங்களை அறிமுகம் செய்து இருப்பதே விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. எனினும், மாருதி சுசுகி நிறுவனம் தொடர்ந்து சிப்செட் குறைபாடு பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது. கடந்த காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 51 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
- கியா இந்தியா நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்திய சந்தையில் தனது முதல் வாகனத்தை அறிமுகம் செய்தது.
- தற்போது இந்நிறுவனம் விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.
கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் ஐந்து லட்சம் கார்களை விற்று புது மைல்கல் எட்டியுள்ளது. 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலக்கட்டத்திலும் இந்த மைல்கல் எட்டி இருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இந்திய சந்தையில் வலுவான இடத்தை பிடிக்க கியா நிறுவனம் தற்போது மஹிந்திராவுக்கு போட்டியாளராக உள்ளது.
2017 வாக்கில் இந்திய எண்ட்ரியை அறிவித்த கியா இந்தியா ஜனவரி 2019 முதல் உற்பத்திக்கான டிரையல் பணிகளை துவங்கியது. இதற்காக ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் பகுதியில் 536 ஏக்கர் பரப்பளவில் நிலத்தை கையகப்படுத்தியது. தற்போது கியா நிறுவனம் ஆண்டுக்கு மூன்று லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டு இருக்கிறது. மேலும் வாகனங்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவதை அடுத்து, உற்பத்தியை விரிவுப்படுத்தவும் கியா நிறுவனம் முடிவு செய்து உள்ளது.
தற்போது கியா நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக கியா சொனெட் இருந்து வருகிறது. எனினும், இந்நிறுவனம் முதலில் அறிமுகம் செய்த கியா செல்டோஸ் மாடலின் வெற்றி இந்திய சந்தையில் அந்நிறுவனம் தடம் பதிக்க உதவியது. செல்டோஸ் மாடல் ஏராளமான அம்சங்கள், அசத்தல் பவர்டிரெயின் ஆப்ஷன்களை சரியான விலையில் விற்பனைக்கு வந்தது. இதன் காரணமாக அமோக வரவேற்பை பெற்றது.
2020 ஆண்டு கியா நிறுவனம் கார்னிவல் எம்பிவி மற்றும் கியா சொனெட் சப்-4 மீட்டர் எஸ்யுவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. கியா சொனெட் மாடல் அந்நிறுவன விற்பனையை மேலும் வலுப்படுத்தியது. ஆரம்பத்தில் கியா செல்டோஸ், அதன் பின் சொனெட் என அந்நிறுவன மாடல்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில், தான் புதிதாக கியா கரென்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
கியா கரென்ஸ் பெற்ற வெற்றியை கொண்டு முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களான மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் உடன் கியா இந்தியா போட்டியை ஏற்படுத்துகிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காலாண்டு விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
- இந்த விற்பனையில் வர்த்தக வாகனங்களும் அடங்கும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2023 நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் 3 லட்சத்து 16 ஆயிரத்து 443 வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தத்தில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 250 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது.
இதில் பயணிகள் வாகன விற்பனை 2 லட்சத்து 12 ஆயிரத்து 914 யூனிட்கள் ஆகும். இது கடந்த ஆண்டு வெறும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 780 யூனிட்களாக இருந்தது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் சர்வதேச சந்தையில் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சியை ஒட்டி ஏற்பட்ட மாற்றங்களை குறிக்கிறது.
உள்நாட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மாதத்தில் மட்டும் 45 ஆயிரத்து 197 தனியார் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 125 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் எஸ்.யு.வி.-க்கள் மட்டும் 68 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்தன. இதே காலக்கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 9 ஆயிரத்து 283 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்