search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaccination Camp"

    • மதுரையில் கொரோனா சிறப்பு முகாம் நடந்தது. இதில் 56 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
    • பொது மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் போடப்பட்டன.

    மதுரை

    தமிழகத்தில் கொரோனா பரவல் முற்றிலுமாக குறையவில்லை. மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் நேற்று 1000-க்கும் மேற்பட்ட மையங்களில் சுகாதார ஊழியர்கள் தடுப்பு செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். பொது மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் போடப்பட்டன.

    மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதல் டோஸ் 11 ஆயிரத்து 628, 2-வது டோஸ் 6 ஆயிரத்து 815, பூஸ்டர் 9 ஆயிரத்து 832 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக 28 ஆயிரத்து 275 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதல் டோஸ் 472, 2-வது டோஸ் 14 ஆயிரத்து 501, பூஸ்டர் 11 ஆயிரத்து 880 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக 26 ஆயிரத்து 853 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

    மதுரை அரசு மருத்துவமனையில் முதல் டோஸ் 75, 2-வது டோஸ் 555, பூஸ்டர் 871 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக 1501 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் முதல் டோஸ் 9, 2-வது டோஸ் 8, பூஸ்டர் 43 தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக 60 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் முதல் டோஸ் 12 ஆயிரத்து 184 பேருக்கும், 2-வது டோஸ் 21 ஆயிரத்து 879 பேருக்கும், பூஸ்டர் 22 ஆயிரத்து 626 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக 56 ஆயிரத்து 689 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    • மாவட்டத்தின் 1,341 இடங்களில் முகாம் நடந்தது.
    • 2,681 பணியாளர் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரை, 15 முதல் 18 வயது வரை இளம்சிறார்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் 35ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 98.92 சதவீதம் பேர் முதல் தவணையும், 79.06 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும், 15 முதல் 18 வயது பிரிவில், 88.64 சதவீதம் பேர் முதல் தவணையும், 75.18 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும், 12 முதல் 14 வயது பிரிவில் 90.44 சதவீதம் பேர் முதல் தவணையும், 66.84 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

    இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் அல்லது 26 வாரம் கடந்த 18 வயதுக்கு மேற்பட்டவர் அனைவருக்கும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி இன்று நடந்த 34-ம் கட்ட முகாமில் செலுத்தப்பட்டது. அரசு மருத்துவ கல்லூரி, தலைமை அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகம், பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் 1,341 இடங்களில் முகாம் நடந்தது. பல்வேறு துறைகளை சேர்ந்த 2,681 பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.  

    • செப்டம்பர் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்.
    • செப்டம்பர் மாதத்தில் ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் கடந்த 21ந் தேதி 34ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. செப்டம்பர் 30-ந் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய செப்டம்பர் மாதத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு மெகா முகாம் வீதம் 4 முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடங்கில் கைவசம் உள்ள தடுப்பூசி குறித்து துணை இயக்குனர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

    சுகாதாரத்துறையினர் கூறுகையில், மாவட்டத்துக்கு தலா ஒரு லட்சம் முதல் 3 லட்சம் வீதம் 60 லட்சத்துக்கு அதிகமான தடுப்பூசி தமிழகம் முழுவதும் கையிருப்பில் உள்ளது. கடந்தாண்டில் தடுப்பூசி செலுத்தாமல் நடப்பாண்டு துவக்கத்தில் தடுப்பூசி செலுத்தியிருந்தால் கூட இந்நேரம் பெரும்பாலானோர் பூஸ்டர் செலுத்தியிருக்க முடியும்.ஆனால் காலக்கெடு வந்த பின்பும் குறுஞ்செய்தி கிடைத்த பின்பும் பலர் பூஸ்டர் செலுத்தாமல் உள்ளதால் அதனால் மாதம் இரு மெகா முகாம் என்பது மாற்றப்பட்டு செப்டம்பரில் நான்கு முகாம் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • கொரோனா பாதிப்பில் இருந்து நாம் முழுமையாக மீண்டு வந்து விட்டதாக சொல்லமுடியாது.
    • இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் 6.71 லட்சம் மிதிவண்டிகள் ரூ.341 கோடி மதிப்பீட்டில் அனைத்து பள்ளிகளிடம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். அந்த வகையில் சென்னையில் உள்ள 174 பள்ளிகளில் 27,689 மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது வழங்கப்படும் மிதிவண்டிகளின் தரம் மாணவ, மாணவிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து நாம் முழுமையாக மீண்டு வந்து விட்டதாக சொல்லமுடியாது. இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது.

    தமிழகத்தில் நாள்தோறும் 500 என்ற அளவில்தான் கொரானா தொற்று பாதிப்பு உள்ளது. எனினும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மத்திய அரசின் இலவச பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் 30-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தித்தான் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். எனவே செப்டம்பர் மாதம் முழுவதும் தொடர்ச்சியாக வாரத்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இன்னும் 4 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. எனவே மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1432 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
    • வரிசையாக நின்று, தடுப்பூசி போட்டு செல்வதை பார்க்க முடிந்தது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கொரோனா மீண்டும் பரவுகிறது. மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இருந்த போதிலும் நோய் தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. மதுரையில் நேற்று மட்டும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாநகரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடன் உள்ள 100-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றை தடுக்கும் வகையில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. அது இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி நடந்து வருகிறது.

    இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் இன்று 1432 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது. 1600 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இரவு 7 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.

    மதுரை மாவட்டத்தில் முதல் டோஸ்- 87 சதவீதம் பேரும், 2-வது டோஸ்- 77 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். பூஸ்டர் டோஸ் ஆக 3 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது என்றார்.

    மதுரை மாவட்டத்தில் இன்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் கூட்டம் இல்லை. சில பகுதிகளில் 50-க்கும் மேற்பட்டோர் வரிசையாக நின்று, தடுப்பூசி போட்டு செல்வதை பார்க்க முடிந்தது.

    • 1529 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைத்து தடுப்பூசி வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • கோவை மாவட்டத்தில் இதுவரை 2,14,024 பேருக்கு முன்னெச்சரிக்கை (பூஸ்ட்டர்) தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது

    கோவை 

    கோவை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் பன்முக நோய் தடுப்பு நடவடிக்கைகளாலும் பொது மக்களின் ஒத்துழைப்பினாலும் தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்த ப்பட்டுள்ளது.

    மேலும் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதை தமிழக அரசு கருத்தில் கொண்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மாநிலம் முழுவதும் துரித படுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் 34 வது கொரோனா தடுப்பூசி முகாம் வருகின்ற நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் 1529 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைத்து தடுப்பூசி வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதில் கிராமப்புறங்களில் 1081 முகாம்களும் மாநகராட்சிப்பகுதிகளில் 339 முகாம்களும் நகராட்சிப்பகுதிகளில் 109 முகாம்களும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது . மக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை உடனடியாக பயன்படுத்தி க்கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.

    கோவை மாவட்டத்தில் இதுவரை 2,14,024 பேருக்கு முன்னெச்சரிக்கை (பூஸ்ட்டர்) தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 2888241 நபர்களுக்கு முதல் தவணை 2646998 இரண்டாம் தவணையும் 15:18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு 140239 முதல் தவணை 110400 இரண்டாம்தவணையும், 12-14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு 90250 முதல் தவணை 62619 இரண்டாம் தவணையும் தடுப்பூசிகள் என மொத்தமாக 62,32,938 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக முன்னெச்சரிக்கை (பூஸ்ட்டர்) தடுப்பூசியானது இரண்டாம் தவணைப் பெற்று 6 மாதங்கள் அல்லது 26 வாரம் ஆன 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக அரசு தடுப்பூசி மையங்களில் வழங்கப்படுகிறது.

    இந்த தடுப்பூசி முகாம் மூலம் பொதுமக்கள் மற்றும் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் தங்களை சார்ந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்திட வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • 34-வது மாபெரும் தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.
    • காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் 34-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 வரை 34-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 16,82,050 (98.50 சதவீதம்) நபர்களுக்கும், 2-வது தவணை தடுப்பூசி 15,81,862 (92.64 சதவீதம்) நபர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு 3-ம் தவணை தடுப்பூசி 2,69,354 நபர்களுக்கும் என மொத்தம் 35 லட்சத்து 33 ஆயிரத்து 266 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளா தவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் 3-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் அனைவரும் தவறாமல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் 34-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

    கொரோனாவை வெல்வதற்கு தடுப்பூசி ஒன்றே ஒரே தீர்வு என்பதை உணர்ந்து தடுப்பூசி செலுத்தி, கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது தவணை போட வேண்டிய வர்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஆறு மாதம் நிறைவு பெற்ற 18 வயதிற்கு மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போடவேண்டியவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.
    • இந்த வாய்ப்பினை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் ஆகாஷ் கேட்டுக்கொண்டு உள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் வரும் 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 1,000 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது.

    இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது தவணை போட வேண்டிய வர்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஆறு மாதம் நிறைவு பெற்ற 18 வயதிற்கு மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போடவேண்டியவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.

    காலை, நண்பகல், பிற்பகல் என வெவ்வேறு இடத்திலும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள பகுதிகள் பேருந்து நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் தடுப்பு ஊசி செலுத்தும் இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இதில் 12 வயதிற்கு மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த காலம் தவறியவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போடவேண்டியவர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • கொளத்துப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் ஆடுகளுக்கான நோய் தடுப்பூசி முகாம் நடை பெற்றது.
    • முகாமில் மருத்துவ குழுவினர் வெள்ளாடு, செம்மறி ஆடு, விலையில்லா ஆடுகளுக்கு நோய் கொல்வி தடுப்பூசி போட்டனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே கொளத்துப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தேவம்பாளையம், கொம்ப னைப்புதூர் கிராமங்களில் ஆடுகளுக்கான நோய் தடுப்பூசி முகாம் நடை பெற்றது.

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி உத்தரவின் பேரில் கால்நடை உதவி இயக்குனர் டாக்டர்.கோவிந்தராஜ் முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.

    முகாமில் கொம்ப னைப்புதூர் கால்நடை உதவி மருத்துவமனை டாக்டர். சி.விஜயகுமார் தலைமையில் மருத்துவ குழுவினர் வெள்ளாடு, செம்மறி ஆடு, விலையில்லா ஆடுகளுக்கு நோய் கொல்வி தடுப்பூசி போட்டனர்.

    இதில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பி.ஆர்.சிவக்குமார் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

    • 3-வது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை மாவட்டத்தில் 33-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
    • மதுரை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது-

    நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 33-வது மெகா தடுப்பூசி முகாம் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்த தீர்மா னிக்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் முதல் தவணை மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி இதுவரை போடாத வர்களுக்கும், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவு பெற்ற 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், 3-வது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை மாவட்டத்தில் 33-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

    மதுரை ஊரக பகுதிகளில் 909 மையங்களில் 909 தடுப்பூசி செலுத்தும் பணி யாளர்களை கொண்டும், நகர் பகுதிகளில் 550 மைய ங்களில் 550 தடுப்பூசி செலுத்தும் பணி யாளர்களை கொண்டும் மொத்தம் 1,459 மையங்களில் 1,459 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டு சிறப்பு தடுப்பூசி முகாம் காலை 7 முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி ேபாடப்படுகிறது.

    அனைத்து வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தடுப்பூசி செலுத்தி ஆறு மாதம் நிறைவு பெற்ற 18 வயதிற்கு மேற்பட்டோர் பயனடையும் வகையில் இலவசமாக போடப்படுகிறது.
    • இந்த தடுப்பூசி முகாமை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்காசி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் வருகிற 7-ந் தேதி 1,000 மையங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பு ஊசி செலுத்த முகாம் நடைபெற உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் இரண்டாவது தவணை போட வேண்டியவர்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஆறு மாதம் நிறைவு பெற்ற 18 வயதிற்கு மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை தடுப்பு ஊசி போட வேண்டியவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் இலவசமாக போடப்படுகிறது.

    காலை, நண்பகல், பிற்பகல் என ஆட்டத்தில் உள்ள வெவ்வேறு இடத்திலும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள வார்டு பகுதிகள்,பேருந்து நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,அரசு மருத்துவமனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்காசி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    மேலும் இதில் 12 வயதிற்கு மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த காலம் தவறியவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    • கடலூர் மாவட்டத்தில் 3,753 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
    • மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு மாநில முழுவதும் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 3753 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. இந்த நிலையில் 3-வது பூஸ்டர் தடுப்பூசி ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் பணம் செலுத்தி பொதுமக்கள் போட்டு வந்தனர்.

    தற்போது 75 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 15-ந் தேதி முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி அரசு சார்பில் இலவசமாக முகாம்களிலும் போடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தடுப்பூசி செலுத்திக்கொண்டு அங்கிருந்த பொது மக்களிடம் தடுப்பூசி என்பது மிகவும் பாதுகாப்பானதாகும். ஆகையால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

    அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா, மாநகராட்சி செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி, மாவட்ட தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி உள்ளனர்.

    ×