search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "000 Centres"

    • இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது தவணை போட வேண்டிய வர்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஆறு மாதம் நிறைவு பெற்ற 18 வயதிற்கு மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போடவேண்டியவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.
    • இந்த வாய்ப்பினை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் ஆகாஷ் கேட்டுக்கொண்டு உள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் வரும் 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 1,000 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது.

    இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது தவணை போட வேண்டிய வர்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஆறு மாதம் நிறைவு பெற்ற 18 வயதிற்கு மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போடவேண்டியவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.

    காலை, நண்பகல், பிற்பகல் என வெவ்வேறு இடத்திலும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள பகுதிகள் பேருந்து நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் தடுப்பு ஊசி செலுத்தும் இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இதில் 12 வயதிற்கு மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த காலம் தவறியவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போடவேண்டியவர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×