search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெகா தடுப்பூசி முகாம்
    X

    மெகா தடுப்பூசி முகாம்

    • 3-வது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை மாவட்டத்தில் 33-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
    • மதுரை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது-

    நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 33-வது மெகா தடுப்பூசி முகாம் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்த தீர்மா னிக்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் முதல் தவணை மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி இதுவரை போடாத வர்களுக்கும், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவு பெற்ற 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், 3-வது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை மாவட்டத்தில் 33-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

    மதுரை ஊரக பகுதிகளில் 909 மையங்களில் 909 தடுப்பூசி செலுத்தும் பணி யாளர்களை கொண்டும், நகர் பகுதிகளில் 550 மைய ங்களில் 550 தடுப்பூசி செலுத்தும் பணி யாளர்களை கொண்டும் மொத்தம் 1,459 மையங்களில் 1,459 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டு சிறப்பு தடுப்பூசி முகாம் காலை 7 முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி ேபாடப்படுகிறது.

    அனைத்து வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×