search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaccination Camp"

    • 1-ந்தேதி தொடங்குகிறது
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் மாடுகளுக்கு தேசிய நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகிற 1-ந் தேதி முதல் தொடர்ச்சியாக 21-ந் தேதி வரை அனைத்து ஊராட்சிக ளிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதனால் கால்நடை வளர்ப்போர்கள் தங்களிடம் உள்ள மாடுகள் அனைத்திற் கும் சினைமாடுகள், கன்றுகள் உள்பட தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மேலும், கிடேரி கன்றுகளின் உரிமை யாளர், பெயர் விலாசம், தடுப் பூசி போடப்பட்ட விவரம், கால்நடைகளின் இனம் ஆகிய விவரங்களை உடனடி யாக இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டு, கால் நடை நிலையங்களில் உள்ள பதிவேட்டிலும் பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் கால்நடைவளர்ப்போருக்கு அரசால்

    அறிவிக்கப்படும் கால்நடைகள் சம்பந்தப்பட்ட திட்டபயன்கள் எளிதில் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டி யன் தெரிவித்துள்ளார்.

    • 1-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கால்நடைகளில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கோமாரிநோய் வராமல் தடுக்கும் வகையில் கோமாரிநோய் தடுப்பூசிப் பணி ஆண்டிற்கு 2 முறை இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் தற்போது கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி பணி 3-வது சுற்று வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) முதல் 21-ந் தேதி வரை தடுப்பூசி பணி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது.

    அனைத்து கிராமங்க ளிலும் இத்தடுப்பூசி போடப்படும் நாட்களில் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுக்கு தவறாமல் கோமாரிநோய் தடுப்பூசி போட்டு பயன்பெறலாம்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீதம் பணி முடித்து தடுப்பூசி போடாத மாடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்கி கோமாரி நோயை அறவே வராமல் தடுக்கவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கால்நடைகள் மூலமாக ஏற்படும் பொருளாதார இழப்பை தடுத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம்.

    இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    • முதுகுளத்தூரில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
    • கால்நடை உதவி மருத்துவர்கள் வினிதா, சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர் வீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முதுகுளத்துார்

    முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடந்தது. பேரூராட்சி சேர்மன் ஷாஜகான் தலைமை தாங்கினார்.

    கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் இளங்கோவன், உதவி இயக்குநர் சிவக்குமார், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் நேருகுமார், தலைமையாசிரியர் சந்தனவேல், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் மங்களநாதன் முன்னிலை வகித்தனர்.முகாமில் மாணவர்களிடம் வெறிநோய் மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர்கள் வினிதா, சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர் வீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புருசெல்லோசிஸ் எனும் கன்று வீச்சு நோய் பாக்டீரியா கிருமிகளால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு நோயாகும்.
    • இந்நோய் மாடு, ஆடு போன்ற பிராணிகள், நாய், குதிரைகளிலும் ஏற்படும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புருசெல்லோசிஸ் எனும் கன்று வீச்சு நோய் பாக்டீரியா கிருமிகளால் கால்நடைகளுக்கு ஏற்படும் ஒரு நோயாகும். இந்நோய் மாடு, ஆடு போன்ற பிராணிகள், நாய், குதிரைகளிலும் ஏற்படும். இறந்த நிலையில் கன்று அல்லது குட்டி பிறத்தல், நலிந்த கன்றுகள், நச்சுக்கொடி விழாமல் தங்குதல், பால்உற்பத்தி குறைதல் போன்ற அறிகுறிகள் ஏற்படுத்தும்.

    காளைகள் மற்றும் ஆட்டுக்கிடாக்களில் விரைவீக்கம், மூட்டு அழற்சி மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும். நாய்களிலும் கருச்சிதைவு, மூட்டு அழற்சி ஏற்படுத்தும்.நாட்டின மாடுகளில் கருச்சிதைவு ஏற்பட்டு விரைந்து தொற்றும் தன்மை கொண்டது.இந்நோய் கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கும் தொற்றும் நோயாகும். கால்நடைகளோடு நெருங்கி பழகும் விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் துறைப்பணியாளர்கள், இறைச்சி கடைகளில் பணிபுரிவோர், ஆராய்ச்சி பணியாளர்கள் மற்றும் கால்நடைகள் மூலம் கிடைக்கும் பால் மற்றும் இறைச்சி நுகர்வோர்களை தாக்கும் அபாயம் உள்ளது.

    இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் சுத்திகரிக்கப்படாத பால் மற்றும் இறைச்சி பொருட்களை உட்கொள்வதாலும், நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் சுரப்புகள் மற்றும் உயிர்கழிவுகளோடு தொடர்பு ஏற்படும் போது நோய் பரவிடும் வாய்ப்பு உள்ளது.

    இந்நோய் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவு. மனிதர்களில் இந்நோய் எலும்பு மற்றும் மூட்டு அழற்சி, தண்டுவட எலும்புகளில் அழற்சி, கல்லீரல் நோய், வயிறு மற்றும் குடல்களில் அழற்சி, இனப்பெருக்க உறுப்புகளில் அழற்சியை ஏற்படுத்தும். சில நேரங்களில் இந்நோய் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு, கண்கள் மற்றும் இதயத்திலும் பாதிப்பு ஏற்படுத்தும். சில நேரங்களில் இறப்பும் ஏற்படும்.

    கால்நடைகளில் இந்நோய் தடுப்பதற்காக மருந்துகள் 1,80,000 டோஸ்கள் வரப்பெற்று சேலம் கால்நடை பராமரிப்புத்துறையில் இருப்பில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் 01.02.2023 முதல் 28.02.2023 முடிய தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளது.

    இதில் 4 மாத வயது முதல் 8 மாத வயது முடியவுள்ள கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி போடப்படுகின்றது. தடுப்பூசி போடப்படும் கிடேரி கன்றுகளுக்கு அடையாள காதுவில்லைகள் பொருத்தப்படும். இந்த தடுப்பூசி ஒருமுறை போடப்பட்டால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புத்திறன் வெளிப்படுத்தும்.

    எனவே, கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி தங்களிடம் உள்ள 4 முதல் 8 மாத வயதுள்ள கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டு தங்கள் மாடுகளை நோயிலிருந்து பாதுகாத்து கொள்வதுடன் மனிதர்களுக்கு இந்நோய் ஏற்படாமல் தடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

    • இந்த முகாமில் கால்நடை மருத்துவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
    • மாட்டு தொழுவங்களில் சாணம், மழை நீர் தேங்காமல் வைப்பதன் மூலம் நோயை கட்டுக்குள் வைக்கலாம்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி மலையம் பாளையம் கிராமத்தில், கால்நடை தோல் கட்டி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தலைமை வகித்தார்.கால்நடை பராமரிப்புத் துறை திருப்பூர் கோட்ட உதவி இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் கால்நடை மருத்துவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

    இது குறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறியதாவது:-

    கால்நடைகளுக்கு கேப்ரிபாக்ஸ் என்ற வைரசால் தோல் கட்டி நோய் பாதிப்பு வேகமாக பரவி வருகின்றது. இந்த நோய் மழைக்காலங்களில் ஈக்களின் மூலமாக பரவுகின்றது .நோய் பாதிப்பின் அறிகுறிகளாக கால்நடைகள் தீவனம் உண்ணாமல் இருத்தல், கண் மற்றும் மூக்குகளில் இருந்து சளி போன்ற நீர் தென்படுதல், காய்ச்சல், பால் கறக்கும் மாடுகளில் திடீரென பால் குறைதல், உடம்பு முழுவதும் கட்டிகள் தென்படுதல், கால் வீக்கம், கழிச்சல் போன்றவை காணப்படும்.

    இந்த நோயை கட்டுப்படுத்த, நோய் வாய்ப்பட்ட, கால்நடைகளை இடம் விட்டு இடமாற்றாமல் இருக்க வேண்டும். தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தலாம். மாடுகளின் மேல் ஈ மற்றும் கொசு அமராமல் வைத்திருக்கவேண்டும்.மாட்டு தொழுவங்களில் சாணம், மழை நீர் தேங்காமல் வைப்பதன் மூலம் நோயை கட்டுக்குள் வைக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த முகாமில், கால்நடை மருத்துவர்கள், மலையம்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஜெயபால், செயலாளர் கௌதம் மற்றும் கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டனர்.

    • தாளவாடி சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    தாளவாடி:

    தமிழகம் முழுவதும் தற்பொழுது கால் நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கி வருகிறது. அதேபோல தாளவாடி மலைப்பகுதியிலும் கால் நடைகளுக்கு பெரியம்மை தாக்கம் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தாளவாடி சுற்று வட்டார பகுதியில் உள்ள கல்மண்டி புரம், சோளகர்தொட்டி, எரகணஹள்ள, தமிழ்புரம், மாதஹள்ளி, ஜோராஒசூர், காமையன்புரம், தொட்ட காஜனூர், தர்மாபுரம் மற்றும் பசப்பன்தொட்டி கிராமங்களில் பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

    இந்த முகாமில் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுகளுக்கு பெரியம்மை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    • உலக வெறிநோய் தின தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • நூற்றுக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அரசு கால்நடை மருத்துவமனையில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உலக வெறிநோய் தின தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் சக்திவேல் பாண்டி தலைமை வகித்தார். உதவி இயக்குநர் பரிமள்ராஜ்குமார் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதில் திருப்பூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் மதிவாணன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் மருத்துவர் கெளசல்யா, கால்நடை முதுநிலை மேற்பார்வையாளர் ரபீக் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இதே போல பல்லடம்அருகே உள்ள கரடிவாவி அரசு கால்நடை மருத்துவமனையில் வெறிநோய் தின தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடை மருத்துவர் அர்ஜுனன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சுமார் 200க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

    • சுகாதார பணிகள் துணை இயக்குனர் திடீர் ஆய்வு
    • அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆணைக்கிணங்க, ஆலங்காயம் மற்றும் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    இம்முகாமை துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் டாக்டர்.டி.ஆர். செந்தில் கொரோனா தடுப்பூசி முகாமை நகராட்சி பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தடுப்பூசி முக்கியத்துவத்தை பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

    உடன் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ச.பசுபதி மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் உடன் இருந்தனர்.

    • தமிழகத்தில் 4 -ம் ஆலையை தடுக்கும் வகையில் வரும் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
    • ஈரோடு மாவட்டத்தில்1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    ஈரோடு, செப். 17-

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் ஆலையை தடுக்கும் வகையில் வரும் நாளை (ஞாயிற்று க்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்த ப்படுகிறது. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவ சமாக போடப்படுகிறது. மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியா ளர்கள் ஈடுப்படுகின்றனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்படுகிறது.

    இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். 

    • மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.
    • காலை 7 முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 37-வது மெகா தடுப்பூசி முகாம் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் முதல் தவணை மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி இதுவரை போடாதவர்களுக்கும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவு பெற்ற 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், 3-வது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 909 மையங்களில் 909 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டும், நகர் பகுதிகளில் 550 மையங்களில் 550 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டும் மொத்தம் 1,459 மையங்களில் 1,459 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டு சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது.

    அனைத்து வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்து வமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    மதுரை மாவட்டத்தில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதி உடையவர்கள் 2 லட்சத்து 20 ஆயிரத்து 256 பேர் - (ஊரக பகுதிகளில் 107498 மாநகர பகுதிகளில் - 112758) உள்ளனர். 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் முடிவுற்றவர்கள் 11 லட்சத்து 63 ஆயிரத்து 107 பேர் (ஊரக பகுதிகளில் 590374 மாநகர பகுதிகளில் -572733) உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை 18-ந் தேதி நடைபெற உள்ளது.
    • அனைவருக்கும் இலவசமாக கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பால சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-  கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் பொது மக்களை பாதிக்காமல் தடுக்கும் வகையில் சிறப்பு கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் சுமார் 3742 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 2-வது தவணை செலுத்தியவர்கள் 9 மாத இடைவெளியாக இருந்தது. குறைக்கப்பட்டு தற்சமயம் 6 மாத இடை வெளியில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வழிவகை செய்துள்ளது. மேலும் வருகிற 30-ந் தேதி வரை 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச மாக கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் முழு மையாக செலுத்தப் பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் தற்போது 12,78,000 பய னாளிகள் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திட வேண்டியுள்ளனர். அவர்கள் இந்த இலவச தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது. பொதுமக்கள் ஏதேனும் அடையாள அட்டை காண்பித்து தங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கொரோனா தொற்று தற்போது மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளானாலும் அது தீவிரமாகாது என்பதால், கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த சிறப்பு தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    • முத்தூர் கடைவீதி,வரட்டுக்கரை ஆகிய அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 7 மையங்களில் நாளை மறுநாள் 18-ந் தேதி நடைபெறுகிறது.
    • பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின், கோர்பவேக்ஸ் தடுப்பூசி ஆகியவற்றினை இலவசமாக போடுகின்றனர்.

    காங்கயம்:

    முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் முத்தூர் அரசு மருத்துவமனை வளாகம், மேட்டாங்காட்டுவலசு, மேட்டுப்பாளையம், ஊடையம், வீரசோழபுரம் ஆகிய துணை சுகாதார நிலையங்கள், முத்தூர் கடைவீதி,வரட்டுக்கரை ஆகிய அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 7 மையங்களில் நாளை மறுநாள் 18-ந் தேதி நடைபெறுகிறது.

    முகாமில் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள், பணியாளர்கள், பேரூராட்சி, ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் கலந்து கொண்டு வருகிற 18- ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 12 வயதுக்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள், இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், நகர, சுற்று வட்டார கிராம பொதுமக்களுக்கு முதல், 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின், கோர்பவேக்ஸ் தடுப்பூசி ஆகியவற்றினை இலவசமாக போடுகின்றனர்.

    ×