search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெறிநோய் தடுப்பூசி முகாம்
    X

    வெறிநோய் தடுப்பூசி முகாம்

    • முதுகுளத்தூரில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
    • கால்நடை உதவி மருத்துவர்கள் வினிதா, சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர் வீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முதுகுளத்துார்

    முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடந்தது. பேரூராட்சி சேர்மன் ஷாஜகான் தலைமை தாங்கினார்.

    கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் இளங்கோவன், உதவி இயக்குநர் சிவக்குமார், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் நேருகுமார், தலைமையாசிரியர் சந்தனவேல், என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் மங்களநாதன் முன்னிலை வகித்தனர்.முகாமில் மாணவர்களிடம் வெறிநோய் மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர்கள் வினிதா, சுந்தரமூர்த்தி, கால்நடை ஆய்வாளர் வீரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×