என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவை மாவட்டத்தில் நாளை 34-வது கொரோனா தடுப்பூசி முகாம்
- 1529 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைத்து தடுப்பூசி வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- கோவை மாவட்டத்தில் இதுவரை 2,14,024 பேருக்கு முன்னெச்சரிக்கை (பூஸ்ட்டர்) தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது
கோவை
கோவை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் பன்முக நோய் தடுப்பு நடவடிக்கைகளாலும் பொது மக்களின் ஒத்துழைப்பினாலும் தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்த ப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதை தமிழக அரசு கருத்தில் கொண்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை மாநிலம் முழுவதும் துரித படுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் 34 வது கொரோனா தடுப்பூசி முகாம் வருகின்ற நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 1529 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைத்து தடுப்பூசி வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதில் கிராமப்புறங்களில் 1081 முகாம்களும் மாநகராட்சிப்பகுதிகளில் 339 முகாம்களும் நகராட்சிப்பகுதிகளில் 109 முகாம்களும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது . மக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை உடனடியாக பயன்படுத்தி க்கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.
கோவை மாவட்டத்தில் இதுவரை 2,14,024 பேருக்கு முன்னெச்சரிக்கை (பூஸ்ட்டர்) தவணை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 2888241 நபர்களுக்கு முதல் தவணை 2646998 இரண்டாம் தவணையும் 15:18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு 140239 முதல் தவணை 110400 இரண்டாம்தவணையும், 12-14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு 90250 முதல் தவணை 62619 இரண்டாம் தவணையும் தடுப்பூசிகள் என மொத்தமாக 62,32,938 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக முன்னெச்சரிக்கை (பூஸ்ட்டர்) தடுப்பூசியானது இரண்டாம் தவணைப் பெற்று 6 மாதங்கள் அல்லது 26 வாரம் ஆன 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக அரசு தடுப்பூசி மையங்களில் வழங்கப்படுகிறது.
இந்த தடுப்பூசி முகாம் மூலம் பொதுமக்கள் மற்றும் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் தங்களை சார்ந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்திட வேண்டும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்