search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "United States"

    அமெரிக்காவில் வீட்டில் வளர்ந்த பூனை, பனிப்பொழிவினால் முழுவதும் உறைந்தபோதும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. #USSnowstorm
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்பொழிவுடன் குளிர் காற்று வீசுகிறது. துருவ சுழல் எனப்படும் கடுங்குளிர் காரணமாக, நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    கடுங்குளிரினால் சிகாகோவில் ஓடும் ஆறு ஒன்று முற்றிலும் பனிக்கட்டியாக மாறி இருக்கிறது. பனியின் தாக்கத்தால் பல மாநிலங்களில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் மையப்பகுதிகளில், உயிரை உறையவைக்கும் கடுங்குளிருக்கு பலர் பலியாகியுள்ளனர்.

    குளிரின் தாக்கத்தை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் எடுத்து வலைத்தளங்களில் பலரும் வெளியிட்டு வருகின்றனர். அவ்வகையில், பனிப்பொழிவின் தாக்கத்தால் உறைந்துபோன பூனை, அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த தகவல் வெளியாகி உள்ளது.

    அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் ஃபிளஃபி எனும் பெயருடைய பெண் பூனை ஒன்று வளர்ந்து வந்துள்ளது. இது கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளது. இதனை அந்த வீட்டார் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

    பின்னர், அந்த பூனை வீட்டின் அருகில் இருந்த சாலையின் ஓரம் பனியினால் முழுவதுமாக மூடப்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு பூனையின் உடலில் இருந்த பனிக்கட்டிகள் அகற்றப்பட்டு, உடல் உஷ்ணத்தை அதிகரித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் பூனையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

    பொதுவாக பூனையின் சாதாரண உடல் வெப்பநிலை 101 டிகிரி ஆகும். ஆனால் இந்த பூனை -90 டிகிரி அளவிலான வெப்பநிலையில் உயிருடன் இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. #USSnowstorm
    அமெரிக்காவில் உள்ள செப்ரிங் பகுதியில் உள்ள வங்கியில் மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர். #USbankattack
    மியாமி:

    தெற்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள செப்ரிங் பகுதியில், இன்று காலை துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர், திடீரென கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    தாக்குதல் நடத்திய நபர் 21 வயதுடைய செப்ரிங் பகுதியை சேர்ந்தவராக கருதப்படுகிறது. மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கையின் படி, அமெரிக்காவில் 2017-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 40,000 பொதுமக்கள் இதுபோன்ற திடீர் தாக்குதல்களால் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்க மக்களின் இயல்பு வாழ்கை வெகுவாக  பாதிக்கப்பட்டுள்ளது. பிரச்சனை இந்த அளவுக்கு தீவிரமாக இருந்தபோதிலும், பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான கடும் சட்டங்கள் இயற்றும் முயற்சிகள் பல ஆண்டுகளாக இழுபறியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. #USbankattack 
    அமெரிக்காவில் கடந்த 10 வருடமாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #US #ComaPatient
    நியூயார்க்:

    அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஒரு பெண் கடந்த 10 வருடங்களாக ‘கோமா’ நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் 29-ந்தேதி ‘கோமா’வில் இருந்த பெண் திடீரென வேதனை கலந்த குரலில் முனகினார். அதை அருகில் இருந்த நர்சு கவனித்தார். திடீரென அப்பெண்ணுக்கு பிரசவத்துக்கான அறிகுறிகள் தெரிந்தன.

    உடனே அவரை பிரசவ அறைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை நலமாக உள்ளது. இச்சம்பவம் டாக்டர்கள் மற்றும் நர்சுக்கு அதிர்ச்சியை அளித்தது.

    இவர் கர்ப்பமாக இருந்த விவரம் யாருக்கும் தெரியவில்லை. நோயாளியாகவே சிகிச்சை அளித்து வந்தனர். அப்படி இருக்கும்போது அவரை யாரோ மர்மநபர் கற்பழித்து இருக்கலாம். அதன்மூலம் அவர் கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    அதுகுறித்து அரிசோனா மாகாண சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகிறது. ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. #US #ComaPatient
    சீனாவில் இருந்து வட கொரியாவினுள் சட்ட விரோதமாக நுழைந்த அமெரிக்கரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என வடகொரிய அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்தது. #NorthKoreya #US
    சியோல்:

    சீனாவில் இருந்து கடந்த மாதம் 16-ந் தேதி, வட கொரியாவினுள் சட்ட விரோதமாக நுழைந்த ஒரு அமெரிக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் லாரன்ஸ் புரூஸ் பைரன் என தெரிய வந்தது. அவர், “அமெரிக்காவின் மத்திய உளவுப்படை சி.ஐ.ஏ. உத்தரவின்பேரில்தான் நான் வடகொரியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தேன்” என கூறினார்.

    அவரை நாட்டில் இருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என வடகொரிய அரசின் செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்தது.

    பொதுவாக வடகொரியா இப்படி சட்டவிரோதமாக தங்கள் நாட்டினுள் நுழைகிற யாரையும் எளிதில் விடுவித்து விடாது. இருப்பினும் அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்துகிற நிலையில் இருப்பதால்தான் லாரன்ஸ் புரூஸ் பைரனை விடுவிக்க முடிவு செய்துள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

    இதே லாரன்ஸ் புரூஸ் பைரன் பெயரில் ஒருவர் கடந்த ஆண்டு தென்கொரியாவில் சட்டவிரோதமாக நுழைந்து கைது செய்யப்பட்டார். அவர் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்குத்தான் தான் தனிப்பட்ட பயணமாக வந்துள்ளதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். #NorthKoreya #US
    அமெரிக்கா டெலவர் மாகாணத்தில் உள்ள டெலவர் தமிழ் நண்பர்கள் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
    வாஷிங்டன்:

    அமெரிக்கா டெலவர் மாகாணத்தில் உள்ள டெலவர் தமிழ் நண்பர்கள் சார்பில் வ.உ.சிதம்பரனாரின் 146-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் முதன்முதலாக நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவில், அவரை மையப்படுத்தி குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி, வினாடி வினா போட்டி, பெரியோர்களுக்கான பேச்சுப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.

    விழாவுக்கு வந்தவர்களை தங்கம் வையாபுரி வரவேற்றார். உலகத் தமிழ் கழகத்தின் கிளைத் தலைவர் கோ.அரங்கநாதன் தொடக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக வாஷிங்டனில் இயங்கி வரும் எனர்ஜில் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவர் மகேந்திரன் பெரியசாமி கலந்துகொண்டு பேசினார்.

    விழாவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இறுதியாக, ஒருங்கிணைப்பாளர் துரைக்கண்ணன் நன்றி கூறினார். 
    அமெரிக்காவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்த வாலிபர் ஒருவர் விடுதலையாக நாய் ஒன்று காரணமாக இருந்தது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் ஜோசுவா ஹார்னர் (42). சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் தன்மீது கூறப்பட்ட புகாரை அவர் மறுத்தார். வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அவருக்கு 50 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

    அதை எதிர்த்து அவர் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இதற்கு ஓரிகனை சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பு உதவி புரிந்தது. இந்த வழக்கில் சிறுமியிடம் பாலியல் குற்றம் புரிய வீட்டுக்குள் புகுந்த ஜோசுவா ஹார்னர். வீட்டின் முன்பு ‘லூசி’ என்ற தனது செல்ல நாயை சுட்டுக்கொன்றதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.

    ஜோசுவா ஹார்னர்

    ஆனால் அந்த நாய் சாகவில்லை. வேறு ஒருவரிடம் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நாயையும் அதன் புது எஜமானரையும் தீவிரமாக தேடி உயிருடன் கண்டுபிடித்தனர்.

    வழக்கு விசாரணையின் போது நாய் உயிருடன் இருப்பது நிரூபிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அவர் 50 ஆண்டுகால ஜெயில் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். #tamilnews
    அமெரிக்கா நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிதி ராணுவத்துக்கானது அல்ல என பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி மொகமது குரேஷி தெரிவித்துள்ளார். #US #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பயங்கரவாத இயக்கங்களுக்கு துணை போவதாகவும், ஆப்கானிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களுக்கு புகலிடம் அளிப்பதாகவும் கூறி பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார்.

    இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள சர்வதேச ராணுவ பள்ளியில் பாகிஸ்தான் வீரர்கள் சேர தடை விதிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் உண்டாகியது.

    இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ள அமெரிக்க ராணுவம் வழங்கும் 300 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2 ஆயிரம் கோடி) நிதியுதவியை நிறுத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    இந்நிலையில், அமெரிக்கா நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிதி ராணுவத்துக்கானது அல்ல என பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி மொகமது குரேஷி தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், அமெரிக்கா நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிது ராணுவ நலத்திட்டங்களுக்கானது அல்ல. அந்த நிதி பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கானது என தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ செப்டம்பர் 5-ம் தேதி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #US #Pakistan
    அமெரிக்காவில் சீக்கியர் டெர்லோக் சிங் படுகொலையில் நெவார்க் நகரத்தைச் சேர்ந்த ராபர்ட்டோ உபெய்ரா என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். #SikhMan #Murder
    நியூயார்க்:

    அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் எசெக்ஸ் நகரில் பெரிய அளவில் கடை வைத்து நடத்தி வந்தவர் சீக்கியரான டெர்லோக் சிங் (வயது 55). இவர் கடந்த 16-ந் தேதி தனது கடையில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், அங்கு வாழ்ந்து வருகிற சீக்கிய மக்கள் இடையே மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. இந்த படுகொலை தொடர்பாக எசெக்ஸ் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலையாளியை தேடி வந்தனர்.



    இந்த நிலையில் டெர்லோக் சிங் படுகொலையில் நெவார்க் நகரத்தைச் சேர்ந்த ராபர்ட்டோ உபெய்ரா (55) என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர் அந்தக் கடையில் சின்னச்சின்ன வேலைகள் செய்து வந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. அதன் முடிவில் அவர் டெர்லோக் சிங்கை கொலை செய்ததின் பின்னணி என்ன என்பது தெரிய வரும். 
    கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக, கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என தனது குடிமக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. #KeralaFloods #KeralaRain
    புதுடெல்லி:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர்.

    இந்நிலையில், கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக, கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என தனது குடிமக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. மேலும் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. எனவே அமெரிக்க குடிமக்கள் தங்கள் பயணங்களை தள்ளிவைக்கும் படி அறிவுறுத்தி உள்ளது. #KeralaFloods #KeralaRain
    அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறு நிர்பந்திக்க வந்திருந்த அமெரிக்க மந்திரியின் அணுகுமுறை வருத்தமளிப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. #PompeoinNKorea #USKoreahighleveltalks '#extremelyregrettable
    சியோல்:

    டொனால்ட் டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு வடகொரியா அதிபரை வலியுறுத்த அமெரிக்க வெளியுறவு மந்திரி நேற்று பியாங்யாங் வந்திருந்தார்.

    சிங்கப்பூரில் சமீபத்தில் அமெரிக்கா - வடகொரியா இடையில் கையொப்பமான அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்தது.

    வடகொரியா இந்த ஒப்பந்தத்தை ஒழுங்காக நிறைவேற்றினால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

    இதற்கிடையில், டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிய வகையில் வடகொரியா ரகசியமாக அணு ஆயுத உற்பத்திக்கு தயாராகி வருவதாக தெரியவந்தது.

    வடகொரியாவின் யாங்பியான் பகுதியில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக தென்கொரியாவை சேர்ந்த இணையச் செய்தி நிறுவனம் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது.

    இந்நிலையில், டொனால்ட் டிரம்ப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு வடகொரியா அதிபரை வலியுறுத்த அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்ப்பியோ நேற்று பியாங்யாங் வந்தார்.

    வடகொரியா அதிபரின் உதவியாளர் கிம் யோங் சோல் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ரி யோங் ஹோ ஆகியோர் அவரை வரவேற்றனர்.

    முன்னதாக, அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட மைக் பாம்ப்பியோ, வரும் வழியில் விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    வடகொரியாவில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழித்துவிட வேண்டும் என சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் உறுதியளித்துள்ளனர். உலகத்துக்கு அவர்கள் அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடகொரியா அதிபரை இந்த பயணத்தின்போது நான் வலியுறுத்துவேன்.

    இதற்கு வடகொரியாவும் தயாராக இருப்பதாகவே நான் கருதுகிறேன். அதிகமாக சந்திப்பதன் மூலம் நட்புறவும், நம்பிக்கையும் பலப்படும் என்பதால் வடகொரியா தரப்பில் இருந்து உரிய எதிர்வினையை எதிர்பார்க்கிறேன் என பேட்டியின்போது மைக் பாம்ப்பியோ குறிப்பிட்டிருந்தார்.

    பியாங்யாங் நகரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்-னின் வலதுகரமாக விளங்கிவரும் உதவியாளர் கிம் யோங் சோல் மற்றும் அந்நாடின் உயரதிகாரிகளுடன் நேற்றும் இன்றும் பேச்சுவார்த்தை நடத்திய மைக் பாம்ப்பியோ, அங்கிருந்து இன்று ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.



    அவர் புறப்பட்டு சென்ற பின்னர் வடகொரியா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இன்று மாலை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், ’இருநாட்களாக நடைபெற்ற இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையின்போது அமெரிக்காவின் சார்பில் முன்வைக்கப்பட்ட நிர்பந்தங்களும், நிபந்தனைகளும், கடைபிடித்த பாணியும் மிகவும் வருத்தம் அளிக்கும் மனப்போக்குடன் அமைந்திருந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'கொரியா தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பகுதியாக மாற்ற வேண்டுமானால் அதற்கான திட்டமிட்ட அணுகுமுறைகளை இருதரப்பினரும் ஒரே நேரத்தில் கையாள்வதுதான் வேகமான வழியாக அமையும்’ என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். #PompeoinNKorea  #USKoreahighleveltalks '#extremelyregrettable 
    முதியோர் காப்பகத்தில் சேர்க்க முயன்ற 72 வயது மகனை 92 வயதான தாய் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தை சேர்ந்த 92 வயது அன்னா மே ப்லஸிங், அவருடைய 72 வயது மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்தனர். இந்த கொலை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ப்லஸிங் தெரிவித்ததெல்லாம் அதிர்ச்சி ரகம்.

    வயது முதிர்ச்சி காரணமாக ப்லஸிங்-கை பார்த்துக்கொள்வதில் சிரமம் இருப்பதாக அவரது மகன் அடிக்கடி அவரிடம் தெரிவித்துள்ளார். ஒரு நாள் மனைவியின் பேச்சை கேட்டு அவரது மகன் அன்னா மே ப்லஸிங்-கை முதியோர் காப்பகத்தில் சேர்த்து விட முடிவு செய்துள்ளார்.

    இந்த தகவலை ப்லஸிங்கிடம் தெரிவித்தபோது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து மிகவும் வருந்தியுள்ளார். இருப்பினும் அவரது மகன் அவரது முடிவில் இருந்து பின் வாங்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த ப்லஸிங், மகனின் அறைக்கு அவரது கணவர் பயன்படுத்திய இரண்டு கை துப்பாக்கிகளை நேற்று மறைத்து எடுத்து சென்றுள்ளார். அங்கு தூங்கிக்கொண்டிருந்த மகனை நோக்கி சுட்டு கொலை செய்துள்ளார். அதைத்தொடர்ந்து, மருமகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

    தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் ப்லஸிங்-கை கைது செய்ய முயன்றனர், ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்துள்ளார். இறுதியாக அவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    92 வயதாகும் தாய், பெற்ற மகனையே துப்பாக்கியால் சுட்டுகொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, அமெரிக்காவில் நடைபெற்ற பேஸ்பால் போட்டி ஒன்றில் கலந்துகொண்டு பந்து வீசி போட்டியை தொடங்கி வைத்தார். #RohitSharma #SeattleMariners

    வாஷிங்டன்:

    ரோகித் சர்மா, இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக உள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் இவர் பல சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ர சாதனை படைத்துள்ளார். மேலும் ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த 264 ரன்களே ஒரு தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோராகும்.

    முன்னணி கிரிக்கெட் வீரரான இவர் தனது மனைவியுடன், தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் நேற்று சியாட்டில் நகரில் நடைபெற்ற சியாட்டில் மரைனர்ஸ் - தம்பா பே ரேய்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கலந்துகொண்டார்.



    பேஸ்பால் வீரராக புதிய அவதாரம் எடுத்த அவர், இந்த போட்டியில் சியாட்டில் அணிக்காக கலந்துகொண்டு பந்தை முதலாவதாக (பர்ஸ்ட் பிட்ச்) வீசி போட்டியை தொடங்கி வைத்தார். இந்த கவுரவத்தை பெற்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். 

    ரோகித் சர்மா தனது மனைவி ரித்திகா உடன் இந்த போட்டியை கண்டு களித்தார். ரோகித், பந்துவீசிய வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. #RohitSharma #SeattleMariners




    ×