search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குத்திக்கொலை"

    • மனைவி பிரிய காரணமாக இருந்த தம்பியை குத்திக்கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
    • உடன்பிறந்த தம்பியை அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி தெற்கு தெருவில் வசித்து வருப வர் கணபதி. இவருக்கு கந்த சாமி என்ற சசிகுமார் (வயது 18), சரவணகுமார் (24), ராஜா (21) ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர்.

    இதில் மூத்த மகனான சரவணகுமார் திருமணம் முடித்து தந்தையின் வீட்டு அருகே தனிக்குடித்தனம் இருந்து வருகிறார். இளைய மகன் வேலைக்கு செல்லா மல் ஊர் சுற்றி வந்ததோடு, தினமும் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டுள் ளார்.

    இந்நிலையில் நேற்று காலை கந்தசாமி வீட்டின் அறையில் கத்தியால் குத்தப் பட்டு குடல் சரிந்து இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து கந்தசாமியின் தந்தை கணபதி அருப்புக் கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில அளித்த புகா ரின் பேரில் போலீசார் கொலையுண்ட கந்தசாமி உடலை கைப்பற்றி விசா ரணை நடத்தினர்.

    குடும்ப பிரச்சினை கார ணமாக உடன்பிறந்த சகோத ரரே இந்த கொலையை செய்தாரா என்ற கோணத் தில் விசாரணை நடத்தப் பட்டது. அதில் சரணக்குமார் தான், சகோதரர் கந்தசா மியை கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்கு மூலத்தில், தனது தம்பி கந்த சாமி அடிக்கடி மது அருந்தி விட்டு தகராறு செய்ததாக வும், அதனால் தன்னுடைய மனைவி பிரிந்து சென்றதா கவும் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த தான், நேற்று முன் தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கந்தசாமியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக வும் கூறியுள்ளார்.

    உடன்பிறந்த தம்பியை அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்ப வம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • கோஷ்டி மோதலில் புவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார், சஞ்சய் ஆகியோர் காயம் அடைந்தனர்.

    பீளமேடு,

    கோவை ஆர்.ஜி.புதுரை சேர்ந்தவர் புவனேஸ்வரன்(23). இவருக்கும் அதே பகுதியை வாலிபர்கள் சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இரு தரப்பினரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று அந்த கும்பல், புவனே ஸ்வரனிடம் பேச வேண்டும் என கூறி சின்னியம்பாளையத்துக்கு அழைத்துள்ளனர். அதன்படி அவரும் தனது நண்பர்களுடன் அங்கு சென்றார்.

    அப்போது அங்கு 6 பேர் நின்றிருந்தனர். அவர்கள் அனைவரும் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் மற்றொரு வாலிபரின் தாயாரை தகாத வார்த்தைகளால் பேசி திட்டி உள்ளார்.

    இதனால் அவர்களுக்கிடையே அடிதடி ஏற்பட்டது. மேலும் இது கோஷ்டி மோதலாக மாறி ஒருவரையொருவர் தாக்கி உள்ளனர். வாக்குவாதம் முற்றவே 6 பேர் கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து புவனேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களை குத்தினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த புவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார் (22), சஞ்சய் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கல்லூரி மாணவரை குத்தி கொன்றது அதே பகுதியை சேர்ந்த ஜெகத்தரி, சாந்தகுமார், பாலாஜி, தினேஷ், சதீஷ், மாதவன், உள்பட 6 பேர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மாதவன் உள்பட 2 பேர் கைது செய்தனர். தப்பியோடிய மற்ற 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். கோவையில் கோஷ்டி மோதலில் வாலிபர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • பெட்ரோல் பங்க் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    • முனியப்பன் சிங்காநல்லூரில் பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    குனியமுத்தூர்,

    கோவை வெள்ளலூர் அருகே உள்ள வள்ளி யம்மைபுரம் கக்கன் வீதியை சேர்ந்தவர் கோபிநாத் (வ யது 30). கூலித்தொழிலாளி.

    இவரது மனைவி ஜோதி(28). இவர்களுக்கு ராஜேஷ்குமார்(10) என்ற மகன் உள்ளார்.

    முல்லை நகரை சேர்ந்தவர் முனியப்பன்(25). சிங்காநல்லூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கோபிநாத்தும், முனியப்ப னும் நண்பர்கள்.

    இவர்கள் வார இறுதி நாட்களில் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். அதன்படி நேற்று கோபிநாத், முனியப்பன் ஆகியோர், மது வாங்கி வந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒன்றாக மது அருந்தினர்.

    பின்னர் அனைவரும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போ து மதுரைவீரன் கோவில் அருகே உள்ள பொதுக ழிப்பிடம் பகுதியில் வந்த போது, நண்பர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு சத்தம் போட்டனர்.

    சிறிது நேரத்தில் கோபிநாத், முனியப்பனை தவிர மற்ற அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.இவர்கள் 2 பேரும் அங்கு நின்று கொண்டு தொடர்ந்து வாய்த்தகராறில் ஈடுபட்ட னர். மேலும் ஒருவருக்கொ ருவர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த முனியப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோபிநாத்தை சரமாரியாக குத்தினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த கோபிநாத் ரத்தவெள்ளத்தில் மயங்கி கீழே சரிந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள், பொதுமக்கள் பார்த்து ஓடி வந்தனர். மக்கள் வருவதை பார்த்ததும் முனியப்பன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    இதையடுத்து பொது மக்கள் கோபிநாத்தை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி தலை மறைவான முனி யப்பனை தேடி வந்தனர். இந்த நிலையில் கோவையில் பதுங்கி இருந்த முனி யப்பனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியரை குத்திக்கொன்ற வழக்கில் வாலிபருக்கு சிவகங்கை கோர்ட்டு ஆயுள் தண்டனை வழங்கியது.
    • ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி சாய் பிரியா உத்தரவிட்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை அரசு மருத்துவமனையில் தற்காலிக மருந்தாளுநராக பணிபுரிந்தவர் தமிழ் செல்வன். இவருக்கும், ஒக்கூர் அண்ணா நகரை சேர்ந்த அருண்குமாரின் தாயாருக்கும் தகாத உறவு இருந்தது.

    கடந்த 10.4.2019-ந் தேதி இது குறித்து மருத்துவமனையில் பணியில் இருந்த தமிழ்ச்செல்வனிடம் அருண்குமார் கேட்க சென்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்ச்செல்வனை குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை ஒருங்கினைந்த வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தீர்ப்பு கூறப்பட்டது.

    அருண்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்படவே அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி சாய் பிரியா உத்தரவிட்டார்.

    ×