search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transgender"

    • யாராவது என்னை போடா வாடா என்று கூப்பிட்டால் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். இன்னொரு முறை கூப்பிடு என்று திரும்பத் திரும்ப கூப்பிட சொல்வேன்.
    • ஹார்மோன் மாற்றத்திற்காக அதற்குரிய ஊசியை ரத்தப் பரிசோதனை செய்து எடுத்துக் கொண்டு வருகிறேன்.

    சமூகத்தில் ஆணாகப் பிறந்து பாலினங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பெண்ணாக மாறியவர்கள் திருநங்கைகள்.

    பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர்கள் திருநம்பிகள்.

    திருநங்கைகள் பற்றி அறியப்பட்ட அளவுக்கு திருநம்பிகள் பற்றி அறியப்படவில்லை. அப்படி தமிழகத்தில் சுமார் 2000 திருநம்பிகள் உள்ளனர். சென்னையில் 200-ல் இருந்து 250 வரை திருநம்பிகள் உள்ளனர். போலீசாக, வக்கீலாக, சர்வேயர் ஆக, சுங்க இலாகா, என்ஜினீயர் என பல்வேறு பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். நாங்களாக மாறவில்லை. எங்கள் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போதே எங்களுக்குள் இந்த ஹார்மோன் வளரத் தொடங்கிவிட்டது. சமூகமும் பெற்றோரும் எங்களை ஒதுக்குவதால் நாங்கள் தனிமையில் தவிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம் என்கின்றனர்.

    இப்படி பெண்ணாக இருந்து ஆணாக மாறிய சென்னையைச் சேர்ந்த திருநம்பி கூறியதாவது:-

    எனது தற்போதைய பெயர் அருண் கார்த்திக் (வயது 28) சொந்த ஊர் மதுரை. நான் என்ஜினீயராக அம்பத்தூரில் ஒரு ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வருகிறேன். நான் பெண்ணாக பிறந்திருந்தாலும் சின்ன வயதிலிருந்தே பையன் போலவே எனக்குள் எண்ணம் உருவானது. ஒரு கட்டத்தில் பையனை பார்த்தால் இவன் எவ்வளவு சுதந்திரமாக அலைகிறான் முடியை எவ்வளவு அழகாக ஸ்டைலாக கட் பண்ணி உள்ளான் என்று பொறாமையாக இருக்கும். பெண்களைப் பார்த்தால் எனக்கு அவர்கள் லைப் பார்ட்னர் ஆகத்தான் தெரியும். மேக்கப் கூட பிடிக்காது. சுடிதார் போட பிடிக்காது. சேலை கட்ட பிடிக்காது. பேண்ட் சட்டை போட்டுக் கொண்டு ஒரு இளைஞனாக ஜாலியாக சுற்றித் திரியத்தான் ஆசையாக இருந்தது.

    எனக்குள் ஏற்பட்ட இந்த மாற்றத்தை பெற்றோர் கடுமையாக எதிர்த்தனர். வயதுக்கு வந்ததும் சடங்கு சம்பிரதாயம் செய்த போது நான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல. அப்படி இப்படி என்று சொல்லி ஒரு மணி நேரம் கூட என்னால் அதில் இருக்க முடியவில்லை. என்னை அறியாமலேயே அந்த சமயத்தில் கோபம் கோபமாய் வந்தது. தூக்கம் இல்லாமல் தவித்தேன்.

    யாராவது என்னை போடா வாடா என்று கூப்பிட்டால் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். இன்னொரு முறை கூப்பிடு என்று திரும்பத் திரும்ப கூப்பிட சொல்வேன்.

    இந்தச் சூழ்நிலையில் எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. ஆணாக வாழ்ந்து வரும் என்னால் இன்னொரு பையனை திருமணம் செய்து கொள்ள முடியாது. அந்தப் பையனின் வாழ்க்கையை நான் கெடுக்க நினைக்கவில்லை. இதை என் வீட்டில் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. திருமணம் முடிந்தால் சரியாகி விடும் என்று என்னை சமாதானம் செய்வதிலேயே குறியாக இருந்தனர்.

    அதற்குப் பின் வேறு வழி இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தேன். அதன் பின்பும் நான் பலமுறை யோசித்தேன் தனியாக சென்று எப்படி வாழ்வது என்ன செய்வது என எனக்கு நானே கேள்வி எழுப்பிக்கொண்டேன். அதன் பின்பு இன்டர்நெட்டை பார்த்து எனக்கான விடையைத் தேடிக் கொண்டேன். உடனடியாக சென்னை வந்து இங்குள்ள திருநம்பிகளுடன் சேர்ந்தேன். தினமும் 200 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தேன். உணவு டெலிவரிபாயாக வேலை பார்த்தேன். அம்மா உணவகத்தில் தினமும் சாப்பிட்டு வந்தேன். வாழ்வது ஒரு தடவை. அதை நாம் விரும்பியபடி நல்லபடியாக வாழ்வோம் என்று நினைத்து ஆபரேஷன் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளில் இறங்கினேன். முதலில் மார்பக அறுவை சிகிச்சை செய்து அதை அகற்றினேன் முதலில் எனக்கு அறுவை சிகிச்சை பலனளிக்கவில்லை. இரண்டாவது முறை அறுவை சிகிச்சை செய்து பலன் கிடைத்தது.

    ஹார்மோன் மாற்றத்திற்காக அதற்குரிய ஊசியை ரத்தப் பரிசோதனை செய்து எடுத்துக் கொண்டு வருகிறேன். 6 மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்து ஊசி போட்டு வருகிறேன். 45 வயது முதல் 55 வயது வரை இந்த ஊசியினை போட வேண்டும். கர்ப்பப்பையையும் எடுத்து ஆணுக்கான ஹார்மோன் உடலில் மாறத் தொடங்கியது. அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக எனது குரல் மாறிவிட்டது. மீசை வளர்ந்தது. தாடி வளர்ந்தது.

    எனது தலை முடியை ஒரு நல்ல இளைஞனைப் போல கட் பண்ணி கொண்டேன். வெளியில் செல்லும்போது இந்தத் தோற்றத்தை பார்த்து தம்பி, சார், வாடா என்று அழைக்கும் போது உலகத்தை ஜெயித்த மாதிரி ஒரு எண்ணம் எனக்குள் மகிழ்ச்சியில் துள்ளியது.

    எல்லா ஆண்களைப் போல சரளமாக ஜாலியாக ஐ.டி. கம்பெனிக்கு வேலைக்கு போய் வருகிறேன். ஒரே கவலை பெற்றோர் என்னிடம் பேசுவதில்லை. தனிமை என்பது மிகப்பெரிய கொடுமை. நாங்களாய் தேடிக் கொண்டதில்லை. எனவே சமூகம் எங்களை ஒதுக்க கூடாது. திருநங்கைகள், திருநம்பிகளை திருநர் என்று அழைக்க வேண்டும்.

    திருநங்கைகள், திருநம்பிகளுக்காக குரல் கொடுப்பதற்காக அரசு அமைத்துள்ள நல வாரியத்தில் தோழி அமைப்பை சேர்ந்த சுதாவுடன் நானும் உறுப்பினராக உள்ளேன். எங்கள் சமூகத்துக்காக நான் இதன் மூலம் பல்வேறு பணிகளை அவர்களுக்காக செய்து வருகிறேன். எனக்கும் திருமணம் செய்ய ஆசை. விரைவில் அது நடக்கும். ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பேன். என்னை போல் தமிழகத்திலும் சென்னையிலும் பல திருநம்பிகள் வாழ்ந்து வென்று காட்டுவோம் என்ற நம்பிக்கையுடன் நடை போட்டு வருகிறோம் என்றார்.

    • அஞ்சலியின் கதறலை கண்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலியை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பஸ் நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் முக்கியமான பகுதியாக விளங்கி வருகின்றது.

    இங்கிருந்து சென்னை, வேலூர், திண்டிவனம், செங்கல்பட்டு, திருப்பதி மார்க்கமாக தினமும் 400-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்வதால் காஞ்சிபுரம் பஸ் நிலையம் எப்போதுமே அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக விளங்குகின்றது.

    இவ்வளவு மக்கள் வந்து செல்கின்ற இந்த இடத்தில் போதிய போலீசார் பாதுகாப்புக்கு இல்லாததாலும், பொருத்தப்பட்டுள்ள கண் காணிப்பு கேமராக்கள் சரியாக வேலை செய்யாததாலும் அதிக சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றது.

    பஸ் நிலையத்தின் உள்ளே சுற்றி திரியும் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பஸ் நிலையத்துக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளிடமும், பொது மக்களிடமும், மாணவ-மாணவிகளிடமும் பாராபட்சம் இல்லாமல் பணம் பறிக்கும் சம்பவம் தினந்தோறும் அரங்கேறி வருகின்றது.

    அது மட்டுமல்லாமல் திருநங்கைகளுக்குள் அவ்வப்போது போட்டி பொறாமையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், ஆபாசமாக பேசிக் கொள்வதும் வாடிக்கையாக உள்ளது.

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலி என்ற 27 வயதுடைய திருநங்கை காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்அம்பி பகுதியில் சக திருநங்கைகளுடன் வசித்து வருகிறார். அஞ்சலி கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் ஆணாக இருந்து திருநங்கையாக மாறி உள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு மக்கள் அதிக நடமாட்டம் உள்ளபஸ் நிலையத்தின் உள்ளே முககவசம் அணிந்த மர்ம வாலிபர் ஒருவர் திடீரென அஞ்சலி மீது பாய்ந்து அரிவாளால் கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    அஞ்சலியின் கதறலை கண்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அஞ்சலியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அஞ்சலி அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலியை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.

    • திருநங்கைகள் பாதுகாப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக சி.ஐ.டி., மகளிர் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., கே.ஜி.வி.சரிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • திருநங்கைகள் பாதுகாப்பு உதவி எண் 1091 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் திருநங்கைகளை கேலி கிண்டல் செய்வது, துன்புறுத்துவது அவர்களுக்கு மன நிதியாக ரீதியாக தொல்லை செய்யக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருநங்கைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    குண்டூரில் உள்ள சி.ஐ.டி. அலுவலகத்தில் இதற்காக சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் பாதுகாப்பு உதவி எண் 1091 அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது. இதில் திருநங்கைகள் தங்களுக்கு உள்ள பிரச்சினைகளை தொடர்பு கொண்டு கூறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    திருநங்கைகள் பாதுகாப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக சி.ஐ.டி., மகளிர் பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., கே.ஜி.வி.சரிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருநங்கைகள் பாதுகாப்பு சட்டபடி இந்த உதவி மையம் செயல்படும். கட்டணமில்லா தொலைபேசி எண் என்பதாலும், கட்டணம் ஏதும் இல்லை என்பதாலும் திருநங்கைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

    திருநங்கைகளுக்கும் சுயமரியாதை உள்ளது. அவர்களை உடல் ரீதியாக துன்புறுத்துபவர்கள் இதன் மூலம் தண்டிக்கப்படுவார்கள்.

    இந்த எண் திருநங்கைகளுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று சரிதா தெரிவித்தார்.

    • 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் கட்டிலுக்கு அடியில் பிணமாக கிடந்தார்.
    • கண்காணிப்பு காமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கோவை,

    கோவை காந்திபுரம் சத்தி சாலையில் ஆம்னி பஸ் நிலையம் அருகே பயன்பாடு இல்லாத காலி இடத்தில் ஓலை குடிசை ஒன்று இருந்தது. அங்கிருந்து நேற்று திடீரென துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் கட்டிலுக்கு அடியில் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் அரை நிர்வாண கோலத்தில் காணப்பட்டது. மேலும் அருகில் மதுபாட்டில்களும் கிடந்தன. அந்த நபரின் உடலை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் யார், அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் திருநங்கை என்பது தெரியவந்தது.

    அந்த திருநங்கை எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் எப்படி அந்த இடத்துக்கு சென்றார் என்று தெரியவில்லை. அவரை யாராவது அழைத்துச் சென்று கொலை செய்து அதனை மறைப்பதற்காக தீ வைத்து எரித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக காந்திபுரம் பகுதியில் வசிக்கும் திருநங்கைகளிடம் போலீசார் விசாரிக்கிறார்கள். உங்களுடன் வசித்த திருநங்கைகளில் யாராவது மாயமாகி இருக்கிறார்களா என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இறந்து கிடந்த திரு நங்கை செல்லும் காட்சிகள் கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்ய ப்படுகிறது.

    • தேரோட்டம் முடிந்து அரவாண் பந்தலடியில் களப்பலியிட்ட பிறகு அங்கு திரண்ட திருநங்கைகள் தாலியை அறுத்து ஒப்பாரி வைத்து அழுதனர்.
    • தங்களது வேண்டுதல் நிறைவேறும் வகையில் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி 2-ந் தேதி நடந்தது.

    அப்போது கோவில் பூசாரி கையினால் மகிழ்ச்சியுடன் தாலி கட்டிக் கொண்ட ஆயிரக்கணக்கான திருநங்கைகள் இரவு முழுவதும் கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்சியுடன் இருந்தனர்.

    நேற்று காலை தேரோட்டம் முடிந்து அரவாண் பந்தலடியில் களப்பலியிட்ட பிறகு அங்கு திரண்ட திருநங்கைகள் தாலியை அறுத்து ஒப்பாரி வைத்து அழுதனர்.

    தங்க தாலி கட்டிய திருநங்கைகள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் வகையில் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மொத்தம் 27 பவுன் தங்க தாலியை காணிக்கையாக செலுத்தி உரிய ரசீது பெற்றுக் கொண்டனர்.

    இதே போல் வெள்ளியிலான தாலியை அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் போட்டனர். தாலியை காணிக்கையாக செலுத்துவதால் கூத்தாண்டவர் தங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார் என திருநங்கைகள் தெரிவித்தனர்.

    • திருநங்கைகளுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
    • சுயதொழில் செய்ய விரும்புவோர் தொடர்பாக பட்டியல் எடுக்கப்பட்டது.

    மதுரை

    திருநங்கைகளுக்கு சமூகத்தில் உரிய மரியாதை தரப்படுவது இல்லை. எனவே அவர்கள் பாலியல் மற்றும் பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் திருநங்கைகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் சுயதொழில் ஏற்படுத்தித் தருவது என்று மதுரை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு ('டான்சாக்ஸ்') முடிவு செய்தது. இதன்படி மாவட்ட அளவில் சுயதொழில் செய்ய விரும்புவோர் தொடர்பாக பட்டியல் எடுக்கப்பட்டது. இதில் திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் வாழ்வாதார மேம்பாடு திட்டத்தின் கீழ் சுயதொழில் ஏற்படுத்த மதுரை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, மாவட்ட வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு பயிற்சி மையம் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது.

    இதனைத் தொடர்ந்து மதுரையில் பிரதர் சிகா மற்றும் அனியம் அறக்கட்டளை மூலம் திருநங்கைகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் 'டான்சாக்ஸ்' மாவட்ட திட்ட மேலாளர் ஜெய பாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் முதற் கட்டமாக 40-க்கும் திருநங்கைகளுக்கு, மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் சுவாமிநாதன், அனியம் அறக் கட்டளை நிறுவனர் அழகு ஜெகன், பிரதர் சிகா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பானுமதி, ராஜேசுவரி, பக்கீர் வாவா மற்றும் திருநங்கைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • திருநங்கைகளின் அழகில் மயங்கிய அந்த வாலிபர், மோட்டார்சைக்கிளை அங்கு நிறுத்திவிட்டு அவர்களுடன் சென்றார்.
    • புகாரின் பேரில் போலீசார் அந்த வாலிபரை அழைத்துக்கொண்டு சேலம் 5 ரோடு பகுதிக்கு சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த எம்.செட்டிப்பட்டியை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர், மாடுகளை விற்பனை செய்வதற்காக கேரளாவுக்கு சென்றார். அங்கு மாடுகளை விற்பனை செய்துவிட்டு ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஓமலூர் நோக்கி புறப்பட்டார்.

    5 ரோடு பகுதியில் சென்றபோது சாலையோரம் நின்றிருந்த திருநங்கைகளை அந்த வாலிபர் பார்த்தார். வாலிபரை கண்டதும், திருநங்கைகள் பேச்சு கொடுத்தனர். அப்போது திருநங்கைகளின் அழகில் மயங்கிய அந்த வாலிபர், மோட்டார்சைக்கிளை அங்கு நிறுத்திவிட்டு அவர்களுடன் சென்றார். அவரை திருநங்கைகள் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

    அதன் பிறகு சில மணி நேரம் கழித்து அந்த வாலிபர் மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று தந்தையிடம் பணத்தை கொடுத்தார். அதனை எண்ணி பார்த்த போது ரூ.1 லட்சம் மட்டும் இருந்தது. ரூ.65 ஆயிரத்தை காணவில்லை. இதைக்கண்டு அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சேலம் விரைந்து வந்தார். இதுதொடர்பாக பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் அந்த வாலிபரை அழைத்துக்கொண்டு சேலம் 5 ரோடு பகுதிக்கு சென்றனர். அங்கு நின்ற திருநங்கைகளை அந்த வாலிபர் அடையாளம் காட்டினார். உடனே போலீசார் அந்த திருநங்கைகளிடம் விசாரணை நடத்திய போது, அவர்தான், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறினார். அவருடன் நாங்கள் நீண்ட நேரம் செலவிட்டோம். அதற்காகத்தான் அவர் ரூ.65 ஆயிரத்தை கொடுத்தார் என்றனர்.

    உடனே போலீசார் திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.65 ஆயிரத்தை வாங்கி அந்த வாலிபரிடம் ஒப்படைத்தனர். அப்போது திருநங்கைகளிடம் இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று கூறினர்.

    மேலும் வாலிபரிடம், இவ்வளவு பணத்தை கொண்டு போகிறோமே என்ற அச்சம் கூட இல்லாமல் திருநங்கைகளை கண்டு சபலபட்டு இருக்கிறீர்களே என்று போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • வேலை வாய்ப்பு முகாமில் 6 திருநங்கைகளும், 3 திருநம்பிகளும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
    • பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கான (திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள்) சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்டது.

    இதில் காஞ்சிபுரத்தைச் சார்ந்த 114 திருநங்கைகள் மற்றும் 3 திருநம்பிகள் மற்றும் 5 வேலையளிக்கும் தனியார் துறை நிறுவனங்களும் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 6 திருநங்கைகளும், 3 திருநம்பிகளும் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். அவருக்கு திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் நன்றி தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய துறை இயக்குனர் அருணகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ருநங்கை ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • அந்த வழியாகச் சென்ற பயணிகள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் தகவல் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமபட்டி ஒன்றியம் வடவத்தூர் எல்லை கல் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழல் கூடத்தில் நேற்று திருநங்கை ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த வழியாகச் சென்ற பயணிகள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் தகவல் தெரிவித்தனர்.

    அவர் எருமப்பட்டி போலீசில் கொடுத்த புகார் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருநங்கையின் பிணத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    விசாரணையில் பிணமாக கிடந்த திருநங்கை சேந்தமங்கலத்தை அடுத்த பழைய பாளையத்தைச் சேர்ந்த ராஜூ மகன் ஸ்ரினிகா(வயது 26) என்பது தெரிய வந்தது. அவரது முழங்காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டாரா? அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தாரா? என்ற கோணத்தில் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநங்கை சாவில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

    அவர் இறப்பதற்கு முன்பாக யாருடனும் செல்போனில் பேசினாரா? அவர் யாருடனாவது வாக னத்தில் சென்றாரா? அது தொடர்பான காட்சிகள் கண்காணிப்பு காமிராக்க ளில் பதிவாகி உள்ளதா? என போலீசார் தீவிர விசா ரணை நடத்தி வருகிறார்கள்.எருமபட்டி அருகே

    திருநங்கை சாவில் மர்மம் நீடிப்பு 

    • கடந்த 1-ந்தேதி காஷ்மீரில் இருந்து புறப்பட்ட அவர் 3 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்தை 25 நாட்களில் கடந்து கன்னியாகுமரி வந்தார்.
    • எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பணக்குடியை சேர்ந்த திருநங்கைகள் வினோதினி, முஜி, வாணி ஆகியோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    கன்னியாகுமரி:

    மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் மிஸ்கான் ரகுவன்சி (வயது 22). கல்லூரி மாணவியான இவர் ஒரே பாரதம், உண்மையான பாரதம் மற்றும் பெண்கள் உரிமை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

    கடந்த 1-ந்தேதி காஷ்மீரில் இருந்து புறப்பட்ட அவர் 3 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்தை 25 நாட்களில் கடந்து கன்னியாகுமரி வந்தார். பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பணக்குடியை சேர்ந்த திருநங்கைகள் வினோதினி, முஜி, வாணி ஆகியோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    சைக்கிள் பயண வீராங்கணை மிஸ்கான்ரகுவன்சி கூறுகையில், தான் தினமும் 100 முதல் 150 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டதாகவும், நாட்டில் பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்புக்கு கேள்விக்குறி எழுந்து உள்ளதால் அதனை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு முன்பு நர்மதை நதிக்கரையில் 3200 கிலோமீட்டர் தூரத்தை 19 நாட்களில் சைக்கிள் மூலம் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். 

    • பாகிஸ்தானில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார்.
    • ஏற்கனவே தனக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக மர்வியா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 26 வயதான மர்வியா மாலிக், கடந்த 2018ம் ஆண்டு அந்நாட்டின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராகி சாதனை படைத்தார்.

    இவர் பாகிஸ்தானில் திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார்.

    இந்நிலையில் லாகூர் நகரில் மர்வியா மாலிக் மீது இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் மர்வியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    ஏற்கனவே தனக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக மர்வியா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு பயந்து சில காலம் லாகூரை விட்டு தள்ளி இருந்ததாகவும், அண்மையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக லாகூர் வந்தபோது தன்னை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாகவும் மர்வியா கூறியுள்ளார்.

    தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்மு பல இடங்களில் தேடியும் திருநம்பி செய்யது செரீப்பை கண்டு பிடிக்க முடியவில்லை.
    • மாயமான திருநம்பியை கண்டுபிடித்து தருமாறு போலீசாரிடம் புகார் செய்தார்.

    திருவள்ளூர்:

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்தி என்கிற அம்மு (35). திருநங்கையான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக புட்லூர் பகுதியில் வசித்து வருகிறார்.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சகோதரன் அமைப்பு மூலம் திருநம்பியாக மாறிய திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாத்திமா என்கிற செய்யது செரீப் (21) என்பவரை அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்து இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அம்முவின் வீட்டுக்கு சிலர் வந்து செய்யது செரீப்பை அழைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. அவர் மாயமாகி இருந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அம்மு பல இடங்களில் தேடியும் திருநம்பி செய்யது செரீப்பை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசில் அம்மு புகார் செய்தார். அதில் மாயமான திருநம்பி செய்யது செரீப்பை கண்டுபிடித்து தருமாறு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×