search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bicycling"

    • பெண்களின் அன்றாட போக்குவரத்துக்கு அதிகமாக உதவுவது இருசக்கர வாகனங்கள்.
    • பல பெண்கள் பயந்த நிலையில் இருசக்கர வாகனம் ஓட்டுவதை பார்க்க முடியும்.

    ஷாப்பிங் செல்வது, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது மற்றும் அலுவகத்துக்கு செல்வது என பெண்களின் அன்றாட போக்குவரத்துக்கு அதிகமாக உதவுவது இருசக்கர வாகனங்கள். அதில் ஏறி உட்கார்ந்ததும் சிட்டாக பறக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அதேநேரம், பல பெண்கள் சற்று பயந்த நிலையிலேயே இருசக்கர வாகனம் ஓட்டுவதையும் பார்க்க முடிகிறது.

    பல ஆண்டுகளாக வாகனம் ஓட்டிவந்தாலும் இந்த பய உணர்வு அவர்களுக்கு தொடர்கதையாகவே இருக்கும். உளவியல் ரீதியான இந்த பிரச்சினைக்கு 'மோட்டார்' போபியா' என்று பெயர். தொடர் முயற்சிகள் மூலம் இதை குணப்படுத்த முடியும். தற்போதைய காலத்தில், இருசக்கர வாகனங்களை ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. இருந்தபோதும், பல பெண்கள் ஒருவித பயத்துடனும், பதற்றத்துடனுமே வாகனத்தை ஓட்டுகிறார்கள்.

    மோட்டார்போபியா' உள்ளவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான பாதையையே போக்குவரத்துக்காக பயன்படுத்துகிறார்கள். தனக்கு அல்லது தான் அதிகமாக நேசித்தவருக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட விபத்து அல்லது காயம், இறப்பு போன்றவற்றால் ஏற்பட்ட மனஉளைச்சல், பரம்பரையாக உண்டாகும் மரபணு மாற்றம், வாகனம் ஓட்டுவது பற்றிய எதிர்மறையான தகவல்களை அதிகமாக கேட்டறிந்தது போன்ற பல்வேறு காரணங்களால் 'மோட்டார்போபியா' ஏற்படலாம்.

    இந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்டும்போதும், மற்றவருடன் வாகனத்தில் சவாரி செய்யும் போதும், பதற்றம் மற்றும் பய உணர்வு அதிகரிக்கும் அத்தகைய சூழ்நிலையில் அதிகப்படியாக வியர்த்து கொட்டுவதால் உடல் குளிர்ந்து போவது, தலைச்சுற்றல், மயக்கம், இதயத்துடிப்பு அதிகரிப்பது. குமட்டல், மூச்சுத்தினறல், நடுக்கம், வயிற்று வலி மற்றும் செரிமானக்கோளாறு போன்ற அறிகுறிகள் உண்டாகும்.

    ''மோட்டார்போபியா' பிரச்சினை உள்ளவர்கள் வாகனத்தை ஒட்டுவதற்கு முன்னும், ஓட்டிய பின்னும் சுவாசப் பயிற்சி மேற்கொள்வது, மனம் மற்றும் உடல் தளர்வு நுட்பங்களை மேற்கொள்வது, வாகனங்கள் தொடர்பான திரைப்படங்கள் அல்லது வீடியோக்களை பார்த்து ஒவ்வொரு குழலையும் கணிக்க முயற்சி செய்வது போன்ற பயிற்சிகளை செய்யலாம்.

    முதலில் ஒரு வாகனத்தில் பயணம் செய்து பழகிய பின்னர், அந்த வாகனத்தை ஓட்ட முயற்சிக்கலாம். தொடக்கத்தில் அருகில் உள்ள இடங்களுக்கு மட்டும் பயணித்து பயத்தை போக்கிக்கொண்ட பிறகு, நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம். "மோட்டார் போபியா' பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் அறிவாற்றல் நடத்தை சிகிச்சை, விர்ச்சுவல் ரியாகிட்டி எக்ஸ்போஷர் தெரபி மற்றும் பதற்றத்துக்கான எதிர்ப்பு மருத்துகளை உளவியல் நிபுணரின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ளலாம்.

    • கடந்த 1-ந்தேதி காஷ்மீரில் இருந்து புறப்பட்ட அவர் 3 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்தை 25 நாட்களில் கடந்து கன்னியாகுமரி வந்தார்.
    • எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பணக்குடியை சேர்ந்த திருநங்கைகள் வினோதினி, முஜி, வாணி ஆகியோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    கன்னியாகுமரி:

    மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் மிஸ்கான் ரகுவன்சி (வயது 22). கல்லூரி மாணவியான இவர் ஒரே பாரதம், உண்மையான பாரதம் மற்றும் பெண்கள் உரிமை பெண் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

    கடந்த 1-ந்தேதி காஷ்மீரில் இருந்து புறப்பட்ட அவர் 3 ஆயிரத்து 600 கிலோ மீட்டர் தூரத்தை 25 நாட்களில் கடந்து கன்னியாகுமரி வந்தார். பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

    எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் பணக்குடியை சேர்ந்த திருநங்கைகள் வினோதினி, முஜி, வாணி ஆகியோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    சைக்கிள் பயண வீராங்கணை மிஸ்கான்ரகுவன்சி கூறுகையில், தான் தினமும் 100 முதல் 150 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டதாகவும், நாட்டில் பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்புக்கு கேள்விக்குறி எழுந்து உள்ளதால் அதனை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு முன்பு நர்மதை நதிக்கரையில் 3200 கிலோமீட்டர் தூரத்தை 19 நாட்களில் சைக்கிள் மூலம் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். 

    ×