search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "threat"

    திருநின்றவூரை சேர்ந்த 11 வயது சிறுமி 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Threat

    போரூர்:

    சென்னை அவசர ஆம்புலன்ஸ் சேவை பிரிவு எண் 108-க்கு செல்போனில் பேசிய மர்ம நபர் ராமாபுரத்தில் குண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார்.

    இது குறித்து காவல் கட்டுபாட்டு அறைக்கும் ராமாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனுக்கும் தகவல் தெரிவித்தனர் இதையடுத்து அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து சைபர் க்ரைம் போலீசார் ஆய்வு செய்ததில் ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் இருந்து அழைப்பு வந்தது தெரிந்தது.

    இதுபற்றி திருநின்றவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் போனில் பேசியது கூலி தொழிலாளியான சேகர் என்பவரின் 11 வயது மகள் என்பது தெரிந்தது. மேலும் சிறுமி பேசிய செல்போன் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடையது என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Threat

    பெண்ணை மிரட்டி கைதான போலி சப்-இன்ஸ்பெக்டர் திருச்செங்கோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சியை சேர்ந்தவர் பிரேமா(வயது 42). விசைத்தறி அதிபர்.
    இவருக்கும், தேவனாங் குறிச்சி அருகே உள்ள கீழேரிப்பட்டியை சேர்ந்த விசைத்தறி அதிபர் விக்னேஷ்(45) என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பிரேமா விக்னேசுக்கு பணம் கொடுக்க வேண்டி இருந்ததாக கூறப்படுகிறது. பலமுறை கேட்டுப்பார்த்தும் பணத்தை கொடுக்கவில்லை. 

    இதனால் விக்னேஷ், தனது நண்பர் கோம்பை நகரை சேர்ந்த பெயிண்டிங் காண்ட்ராக்டர் ரத்தினம் (45) என்பவரை சந்தித்து, பிரேமாவிடம் இருந்து தனது பணத்தை எப்படியாவது? வாங்கி தருமாறு கூறியுள்ளார்.

    இதையடுத்து ரத்தினம் நேற்று பிரேமாவை சந்தித்து பேசினார். தான் திருச்செங்கோடு புறநகர் போலீஸ் நிலையத்தில்  சப்-இன்ஸ்பெக்டராக உள்ளேன். விக்னேசுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விடு. இல்லையென்றால், வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்து விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.

    பயந்து போன பிரேமா இது பற்றி இன்ஸ்பெக்டரிடம் கூறுவதற்காக திருச்செங்கோடு புறநகர் போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, சப்-இன்ஸ் பெக்டர் என்று கூறி ரத்தினம் என்பவர் எனது வீட்டிற்கு வந்து என்னை மிரட்டினார் என தெரிவித்தார்.

    அதற்கு போலீசார், ரத்தினம் என்ற பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் யாரும் எங்கள் போலீஸ் நிலையத்தில் கிடையாது என்றனர். இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த பிரேமா, தன்னை மிரட்டியது போலி சப்-இன்ஸ்பெக்டர் என்பதை உணர்ந்தார்.

    போலீசாரும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி போலி சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினத்தை கைது செய்து, திருச்செங்கோடு கிளை சிறையில் அடைத்தனர்.
    ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு நேர்ந்த கதியைத்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க நேரிடும் என ஈரான் அதிபர் ரவுகானி எச்சரித்துள்ளார். #Iranwilldefeat #Trump #Saddam #Rouhani
    டெஹ்ரான்:

    பயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி  ஈரானின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அந்த தடைகளால் ஈரானின் பொருளாதாரம் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானுடன் வர்த்தக உறவுகளை வைத்து கொள்ள கூடாது எனவும் அமெரிக்கா தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது. இதனால் மேலும் பல சிக்கல்களை ஈரான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

    இந்நிலையில், ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு நேர்ந்த கதியைத்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க நேரிடும் என ஈரான் அதிபர் ரவுகானி எச்சரித்துள்ளார்.

    நாட்டு மக்களுடன் வானொலி மூலம் உரையாற்றிய ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி, 1980-களில் ஈரான் மீது போர் தொடர்ந்த சதாம் உசேனுக்கு ஏற்பட்ட அதேகதி அமெரிக்காவுக்கும், டிரம்ப்புக்கும் ஏற்படும். அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பயந்து ஏவுகணைகளை நாங்கள் கைவிட முடியாது என அவர் தெரிவித்தார். #Iranwilldefeat #Trump #Saddam #Rouhani
    கடையை அடைக்குமாறு மிரட்டல் விடுத்ததால் தி.மு.க. இளைஞரணி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின்போது நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பர்னிச்சர் கடை திறந்து இருந்தது. அந்த கடையை அடைக்குமாறு தி.மு.க.வினர் மிரட்டல் விடுத்தனர்.

    எனவே கடையை அடைக்கச்சொல்லி மிரட்டியதாக கடையின் உரிமையாளர் பிரவீன் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கோட்டார் போலீசார் தி.மு.க.வினர் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் 19 பேரில் ஒருவரான தி.மு.க. இளைஞரணி நிர்வாகியான கோதை கிராமத்தை சேர்ந்த மகேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 18 பேரை தேடி வருகிறார்கள்.
    சேலத்தில் லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டம் மேட்டூர், கருப்பு ரெட்டியூர் அருகே உள்ள கும்புரான் காடு பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 34). லாரி டிரைவர். இவர் நேற்று சங்ககிரி அருகே கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்னக்கவுண்டனூர் என்ற இடத்தில் லாரியை ஓட்டி வந்து நிறுத்தினார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஹரிகரனை மிரட்டி பணத்தை பறித்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி, திருப்பூர் மாவட்டம் கனகையம்பாளையம், கிழக்கு தெருவை சேர்ந்த செல்வகுமார் என்கிற மதன் (30), திருப்பூர் விக்னேஸ்வரர் நகரை சேர்ந்த பூபதி (23), திருச்செங்கோடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த குப்புசாமி என்கிற சதாசிவம் (23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் மதன் மீது தாராபுரம், பழனி டவுன், சூலூர் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளது.

    இதுபோல் சங்ககிரி, கலியனூர் பிரிவு பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் முருகேசன் (48)கீழே இறங்கியபோது அவரை 6 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றது. இந்த 6 பேர் கும்பலை சங்ககிரி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    சர்வதேச கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்டி இருப்பது, உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #InternationalCriminalCourt #ICC
    வாஷிங்டன்:

    ரோமில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் கீழ், நெதர்லாந்து நாட்டில் திஹேக் நகரில் 2002-ம் ஆண்டு சர்வதேச குற்றவியல் கோர்ட்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கோர்ட்டில் 123 நாடுகள் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளன. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சேராமலும் இருக்கின்றன.

    இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச கோர்ட்டு விசாரணை நடத்தி நீதி வழங்குகிறது.

    இந்த சர்வதேச கோர்ட்டை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இப்போது அதன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் மிகக்கடுமையாக விமர்சித்து இருப்பதுடன், பொருளாதார தடை என்ற ஆயுதத்தைக் காட்டி மிரட்டலும் விடுத்து இருக்கிறார்.

    சர்வதேச கோர்ட்டின் வக்கீல் பாதோ பென்சவுடா, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் செய்த போர்க்குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து போர்க்குற்றங்கள் குறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உள்ளார். இதை சர்வதேச கோர்ட்டு பரிசீலித்து வருகிறது.

    ஆப்கானிஸ்தானில் ரகசிய காவல் மையங்களில், கைது செய்து அடைத்தவர்களை அமெரிக்க ராணுவம் சித்ரவதை செய்ததற்கு அர்த்தம் உள்ள ஆதாரங்கள் இருப்பதாக சர்வதேச கோர்ட்டு ஒரு அறிக்கையில் கூறியது.

    மேலும், காசா மற்றும் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து இஸ்ரேல் மீது விசாரிக்க பாலஸ்தீனம் சர்வதேச கோர்ட்டில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த இரண்டு பிரச்சினைகளும், அமெரிக்காவுக்கு சர்வதேச கோர்ட்டு மீது எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியதாவது:-

    ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச கோர்ட்டை ஆப்கானிஸ்தானும் கேட்கவில்லை.

    சர்வதேச கோர்ட்டில் உறுப்பினர்களாக எந்தவொரு நாடும் கேட்கவில்லை. சர்வதேச கோர்ட்டு அமெரிக்க இறையாண்மைக்கு எதிராகவும், அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.

    நாங்கள் சர்வதேச கோர்ட்டுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம். நாங்கள் சர்வதேச கோர்ட்டுக்கு உதவ மாட்டோம். நாங்கள் சர்வதேச கோர்ட்டில் சேரவும் மாட்டோம். சர்வதேச கோர்ட்டு, அதன் முடிவை தேடிக்கொள்ள விட்டு விடுவோம். எல்லாவற்றுக்கும் மேலாக, எங்களைப் பொறுத்தமட்டில் சர்வதேச கோர்ட்டு ஏற்கனவே செத்துப்போய் விட்டது.

    சர்வதேச கோர்ட்டு சட்ட விரோதமானது. எங்கள் குடிமக்களைக் காப்பதற்கு நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டால் சர்வதேச கோர்ட்டுக்கு எதிராக பொருளாதார தடை விதிப்போம்.

    சர்வதேச கோர்ட்டை சேர்ந்தவர்கள் மீது அமெரிக்க குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். அமெரிக்கர்களுக்கு எதிரான விசாரணையில் சர்வதேச கோர்ட்டுக்கு உதவுகிற எந்தவொரு நிறுவனம் அல்லது நாட்டின் மீதும் நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், ஜான் போல்டனின் கருத்துக்களை ஆதரித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, “அமெரிக்க குடிமக்களையும், எங்கள் நட்பு நாடுகளையும் சர்வதேச கோர்ட்டின் நேர்மையற்ற வழக்குகளில் இருந்து காப்பதற்கு ஜனாதிபதி டிரம்ப் எதை வேண்டுமானாலும் செய்வார்” என்று குறிப்பிட்டார்.

    சர்வதேச கோர்ட்டுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிற பட்சத்தில், அதன் நீதிபதிகளும், வக்கீல்களும் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது. அவர்களது அமெரிக்க நிதிகள் முடக்கப்படும்.

    அமெரிக்காவின் மிரட்டலுக்கு சர்வதேச கோர்ட்டு பதிலடி கொடுத்து உள்ளது.

    இது தொடர்பாக சர்வதேச கோர்ட்டு விடுத்து உள்ள அறிக்கையில், “சர்வதேச கோர்ட்டு என்பது நீதி வழங்கும் ஒரு அமைப்பு. ரோமில் ஏற்படுத்தப்பட்ட சட்ட எல்லைக்குள் அது கண்டிப்புடன் செயல்படுகிறது. அது சுதந்திரமான, பாரபட்சமற்ற நீதி வழங்க உறுதி கொண்டு உள்ளது” என கூறப்பட்டு உள்ளது. இருப்பினும் சர்வதேச கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம் என்னும் அமெரிக்காவின் மிரட்டல், உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லை அருகே வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி சிறுமியை கடத்தி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகேயுள்ள தெற்கு வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுதுரை. சம்பவத்தன்று பொன்னுதுரையும், அவரது மனைவியும் நெல்லை மார்க்கெட்டுக்கு வந்துவிட்டனர். வீட்டில் அவர்களது மகள் மட்டும் தனியாக இருந்தார்.

    அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அவர்கள் திடீரென பொன்னுதுரையின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் அரிவாளை காட்டி மிரட்டி பொன்னுதுரையின் மகளை கடத்தி சென்று விட்டனர்.

    வீட்டுக்கு வந்த பொன்னுதுரையும், அவரது மனைவியும் இதுபற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி சிறுமியை கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    கத்தியை காட்டி மிரட்டி வியாபாரியிடம் வழிப்பறி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை விளாச்சேரி அருகே உள்ள மொட்ட மலையைச் சேர்ந்தவர் மல்கர்பாஷா (வயது 46). இவர் முறுக்கு, மிட்டாய் ரகங்களை பல்வேறு கடைகளுக்கும் வினியோகித்து வருகிறார்.

    இரு சக்கர வாகனத்தில் சரக்குகளை மதுரையின் பல பகுதிகளுக்கும் வினியோகித்து விட்டு மல்கர் பாஷா ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 2 பேர் வழி மறித்தனர்.

    அவர்கள் கத்தியை காட்டி, வியாபாரி மல்கர் பாஷாவை மிரட்டினர். பின்னர் அவரிடம் இருந்து 1,470 ரூபாயை பறித்துச் சென்று விட்டனர். இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது திருநகர் திரு மலைச்செல்வன் (21), பாலமுருகன் (21) என தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் காரியாபட்டி மந்திரி ஓடை பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (24), பழனி (25) ஆகியோர் திருமங்கலம் 4 வழிச்சாலையில் வெள்ளரி வியாபாரம் செய்து வருகின்றனர்.

    2 பேருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் உள்ள நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் பழனி கம்பால் தாக்கியதில் பிரபு காயம் அடைந்தார். சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிரபு கொடுத்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் விசாரணை நடத்தி பழனியை கைது செய்தனர்.

    மதுரை சிறைத்துறை பெண் சூப்பிரண்டை தொடர்ந்து, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் ரவுடி ‘புல்லட்’ நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ வெளியாகி உள்ளது. #BulletNagarajan #WomenInspector
    தேனி:

    தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்த ரவுடி நாகராஜன் என்ற ‘புல்லட்’ நாகராஜன். இவர் மதுரை சிறைத்துறை பெண் போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் ‘வாட்ஸ்-அப்’ மூலம் ‘புல்லட்’ நாகராஜன் கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ வெளியாகி உள்ளது.



    ஆடியோவில் ‘புல்லட்’ நாகராஜன் பேசியிருப்பதாவது:-

    இன்ஸ்பெக்டருக்கு நடிகை விஜயசாந்தி என்று நினைப்பா? சரியான பெண்ணாக இருந்தால் இரவு தனியாக ரெய்டுக்கு வரவேண்டியது தானே. 10 போலீஸ்காரர்களை வைத்துக்கொண்டு அடிப்பது பெரிது கிடையாது. இன்னொரு வாயாடி ஜெயமங்கலத்தில் இருந்தது. அதை இப்பதான் டிரான்ஸ்பர் பண்ணிவிட்டேன். ஒவ்வொரு ஆளையும் தூக்கிவிட்டுக்கொண்டே இருக்க முடியாது. இது நிரந்தர பணி நீக்கம் ஆகிவிடும்.

    இன்னொரு முறை என்னுடைய மண்ணில் உள்ள பெரியகுளத்துக்காரங்களை யாரை கைவைத்தாலும் நேரடியாக நான் வருவேன். பெண்ணாக இருப்பதால் ஒரு வாய்ப்பு தருகிறேன். 2-வது வாய்ப்பு தர நான் ஒன்றும் கடவுள் கிடையாது. பாவம் அனாதையாக ஈ மொய்த்துக்கிடக்கும் அளவுக்கு ஆகிவிடாதீர்கள்.

    உன் வீட்டை சுற்றிலும் 100 போலீஸ் போட்டுக்கோ. என்னை பிடித்துவிட்டால் நான் அதே இடத்தில் இறந்துவிடுகிறேன். உங்களுக்கு எங்கே தொட்டால் வலிக்கும் என்பது எனக்கு தெரியும். இனிமேல் என்னுடைய பசங்ககிட்ட வாலாட்டினால் நான் எடுக்கிற ஆக்‌ஷன் பயங்கரமாக இருக்கும்.

    இது, சினிமா கிடையாது. நீங்கள் ஒன்றும் நடிகை விஜயசாந்தி கிடையாது. சினிமா எல்லாம் பார்க்காதீர்கள். டியூட்டியை மட்டும் பாருங்கள். இல்லையென்றால் புழல் சிறைக்கு அனுப்பிவிடுவேன்.

    இவ்வாறு அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மதனகலாவிடம் கேட்டபோது, ‘சில நாட்களுக்கு முன்பே இந்த ஆடியோ எனக்கு வந்தது. உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார். இப்போது சமூக வலைதளங்களிலும் வெளியாகி உள்ளது. நான் இதுவரை புகார் எதுவும் அளிக்கவில்லை. எதற்காக இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை’ என்றார்.  #BulletNagarajan #WomenInspector 
    மதுரை சிறைத்துறை எஸ்.பி.க்கு மிரட்டல் விடுத்தது உண்மை என்றால் ரவுடி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். #TNMinister #CVeShanmugam
    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு சென்னை மாகாணம் என்று முன்பு அழைக்கப்பட்டது. அண்ணாவின் சீரிய முயற்சியால் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது.

    இதைபோல் சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரையும் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரிடம் மதுரையில் சிறைத்துறை பெண் எஸ்.பி.யை ரவுடி மிரட்டி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு அமைச்சர் பதில் அளிக்கும்போது, இந்த பிரச்சனை பற்றி எனக்கு தெரியாது. போலீஸ் சூப்பிரண்டுக்கு ரவுடி மிரட்டல் விடுத்தது உண்மை என்றால் தமிழகத்தில் உள்ள ரவுடிகள் அனைவருக்கும் எச்சரிக்கை விடும் விதமாக பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #TNMinister #CVeShanmugam
    எனது ஆன்மீக யாத்திரையை தடுக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். மிரட்டல்கள் பற்றி எனக்கு கவலை இல்லை என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். #arjunsampath

    கோவை:

    இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது-

    இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி அமைய வேண்டும். மாநிலத்தில் ரஜினி தலைமையிலான ஆன்மீக அரசு அமைய வேண்டும் என்பதற்காக ‘மி‌ஷன் 2019’ என்ற பெயரில் 108 நாட்கள் ஆன்மீக யாத்திரை தொடங்க உள்ளேன்.

    இந்த யாத்திரை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்க இருந்தது. பாரதீய ஜனதா, ரஜினி உள்ளிட்ட ஆன்மிக அரசியலை முன்னிலைப் படுத்துபவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன்.

    இது சில அமைப்பினருக்கு பிடிக்கவில்லை. அவர்கள் எனது யாத்திரைக்கு இடை யூறு ஏற்படுத்துகிறார்கள். நான் தொலைக்காட்சிகளில் பேசும் போதும், கட்டுரைகள் வெளியிடும் போதெல்லாம் எனக்கு புதிய, புதிய செல்போன் நம்பர்களில் இருந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டே இருந்தது.

    தற்போது என்னை கொல்ல சதி நடப்பதாக செய்திகள் மூலம் அறிந்தேன். நான் கடந்த 30 வருடங்களாக மக்களுக்காக பணியாற்றி வருகிறேன். மிரட்டல்களை பற்றி கவலைப்படவில்லை. எனக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #arjunsampath

    கிருமாம்பாக்கத்தில் மதுகுடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் ஆட்டோவை உடைத்து சேதப்படுத்தி டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே நரம்பை நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவியரசு (வயது34), ஆட்டோ டிரைவர். இவர் கிருமாம்பாக்கத்தில் ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரிடம் கிருமாம்பாக்கம் மெயின்ரோட்டை சேர்ந்த பிரகாஷ்(31) என்பவர் மதுகுடிக்க அடிக்கடி பணம் கேட்டு பெறுவது வழக்கம்.

    சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த பிரகாஷ் மீண்டும் மதுகுடிக்க கவியரசுவிடம் பணம் கேட்டார். அதற்கு கவியரசு சவாரிக்கு சென்று விட்டு பணம் தருவதாக தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த பிரகாஷ் தனக்கு உடனடியாக பணம்தர வேண்டும் என்று தகராறு செய்தார்.

    மேலும் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் இரும்பு பைப்பை எடுத்து வந்து ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். அதோடு கவியரசுவை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதுகுறித்து கவியரசு கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பிரகாசை தேடி வருகிறார்கள்.

    ×