search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருமாம்பாக்கத்தில் ஆட்டோவை உடைத்து டிரைவருக்கு கொலை மிரட்டல்
    X

    கிருமாம்பாக்கத்தில் ஆட்டோவை உடைத்து டிரைவருக்கு கொலை மிரட்டல்

    கிருமாம்பாக்கத்தில் மதுகுடிக்க பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் ஆட்டோவை உடைத்து சேதப்படுத்தி டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே நரம்பை நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவியரசு (வயது34), ஆட்டோ டிரைவர். இவர் கிருமாம்பாக்கத்தில் ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரிடம் கிருமாம்பாக்கம் மெயின்ரோட்டை சேர்ந்த பிரகாஷ்(31) என்பவர் மதுகுடிக்க அடிக்கடி பணம் கேட்டு பெறுவது வழக்கம்.

    சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த பிரகாஷ் மீண்டும் மதுகுடிக்க கவியரசுவிடம் பணம் கேட்டார். அதற்கு கவியரசு சவாரிக்கு சென்று விட்டு பணம் தருவதாக தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த பிரகாஷ் தனக்கு உடனடியாக பணம்தர வேண்டும் என்று தகராறு செய்தார்.

    மேலும் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் இரும்பு பைப்பை எடுத்து வந்து ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். அதோடு கவியரசுவை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதுகுறித்து கவியரசு கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பிரகாசை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×