search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tax"

    • உரிம கட்டணம் 11 மாதங்களுக்கு ஒருமுறை 8 சதவீத அடிப்படையில் உயர்த்தப்படும்.
    • சரக்கு மற்றும் சேவைவரி உரிம கட்டணத்திற்கு 18 சதவீதம் தனியாக செலுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    முன்னாள் படைவீரர் நலத்துறையை சேர்ந்த தஞ்சாவூர் ராணுவத்தினர் மாளிகையில் சுமார் 36658 சதுர அடி இடத்தில் 8328 சதுர அடி கட்டிடம் உள்ளது. அதில் 11 கடைகள் மற்றும் 2 அலுவலக அறைள் காலியாக உள்ளது.

    இந்த கடைகள் மற்றும் அலுவலக அறைகள் மாதாந்திர உரிம கட்டணம் அடிப்படையில் வாடகைக்கு வழங்கிட ஒப்பந்த விலைப்புள்ளிகள் இதன் மூலம கோரப்படுகிறது.

    உரிம கட்டணம் ஒப்பந்தம் 11 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். மின்கட்டணம் உரிமதாரரால் செலுத்தப்பட வேண்டும். முன் வைப்பு தொகையானது உரிம கட்டணத்தின் 11 மாதங்களுக்கான மொத்த தொகையை செலுத்த வேண்டும்.

    உரிம கட்டணம் 11 மாதங்களுக்கு ஒருமுறை 8 சதவீத அடிப்படையில் உயர்த்தப்படும். மேலும் அரசு விதிகளின் படி சரக்கு மற்றும் சேவைவரி உரிம கட்டணத்திற்கு 18 சதவீதம் தனியாக செலுத்த வேண்டும்.

    எனவே விருப்பம் உள்ளவர்கள் அடுத்த மாதம் 12-ந் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது ஒப்பந்த விலைப்புள்ளியினை மூடிய உறையில் முத்திரையிடப்பட்டு கடை எண்யை பதிவு செய்து ஒப்பந்த விலைப்புள்ளி என்பதனை தெளிவாக குறிப்பிட்டும், செயலாளர், ராணுவத்தினர் மாளிகை, தலைமை தபால் நிலையம் எதிரில், தஞ்சாவூர்-01 என்னும் முகவரியில் சமர்பிக்க வேண்டும். தாமதமாக பெறப்படும் ஒப்பந்த விலைப்புள்ளிகள் எந்த காரணத்திற்காகவும் ஏற்று கொள்ளப்பட மாட்டாது. உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேண்டீன் நடத்திட கடைகள் ஒதுக்கப்பட மாட்டாது.

    இந்த ஒப்பந்த விலைப்புள்ளி அறிவிப்பிற்கான விலைப்புள்ளி சமர்பிக்கும் கடைசி தேதி நீட்டிப்பு செய்யவோ அல்லது இந்த அறிவிப்பை முழுமையாக ரத்து செய்யவோ தஞ்சாவூர் மாவட்ட ராணுவத்தினர் மாளிகை நிர்வாகத்திற்கு மட்டுமே முழு அதிகாரம் உண்டு. மேலும் ஒப்பந்த விலைப்புள்ளியின் மீது இறுதி முடிவு தஞ்சாவூர் மாவட்ட ராணுவத்தினர் மாளிகை நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வரி கட்டாத கடைகளுக்கு முன்பு குப்பைத் தொட்டிகள் வைத்தும், கடைகளுக்கு சீல் வைத்தும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் வரி பாக்கி மற்றும் வாடகை பாக்கி வசூல் செய்ய மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.வரி கட்டாத கடைகளுக்கு முன்பு குப்பைத் தொட்டிகள் வைத்தும், கடைகளுக்கு சீல் வைத்தும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் தற்போது வரி மற்றும் வாடகை பாக்கி கணிசமாக வசூலாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடலூர் லாரன்ஸ் ரோட்டில் வள்ளியம்மை பஜார் உள்ளது. இந்த பஜாரில் 16 கடைகளுக்கு வரி செலுத்தவில்லை. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் குப்பைத்தொட்டிகளை பஜாரின் வாசலில் வைத்து கடைகளுக்கு சீல் வைக்க முயன்றனர்.

    இதனை தொடர்ந்து அங்கிருந்த கடை உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் வள்ளியம்மை பஜாரில் உள்ள 16 கடைகளுக்கு நேரில் சென்ற அதிகாரிகள், எந்தெந்த கடைகளுக்கு எவ்வளவு வரி பாக்கி என குறிப்பிட்டு அந்தந்த கடைகளில் இறுதி நோட்டீஸ் ஒட்டினர். இதில் மூன்று நாட்களுக்குள் வரி செலுத்தவில்லை என்றால் கடைகளில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும் எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் நகராட்சி அலுவலகத்தில் வரிகள் செலுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் தொழில் வரி, சொத்து வரி, காலி நிலமனை வரி, குடிநீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் கட்டாமல் நிலுவையில் உள்ளவர்கள் வரியை விரைந்து செலுத்த வேண்டும் என பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகங்களில் நோட்டீஸ் அனுப்பியும் தொழில் வரி, சொத்து வரியை செலுத்தாத கடைகளை ஜப்தி செய்யும் நடவடிக்கை பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் நாராயணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. நகராட்சி அதிகாரிகள் ஜப்தி செய்ய வந்திருப்பதை அறிந்த கடை உரிமையாளர்கள் உடனடியாக நிலுவையில் உள்ள வரி பாக்கியினை நகராட்சிக்கு செலுத்தினார்கள். இதனால் வரி செலுத்திய கடைகளுக்கு ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

    ஒரே நாளில் மட்டும் ரூ.10 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து வரி செலுத்தாத கடைகள் மீது ஜப்தி நடவடிக்கை செய்யப்படும் என நகராட்சி கமிஷனர் நாராயணன் தெரிவித்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் நகராட்சி அலுவலகத்தில் வரிகள் செலுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் விரைந்து நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • மாநகராட்சி அதிகாரிகள் தகவல் அளித்தனர்.
    • ரூ.373 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கோவை,

    கோவை மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, மத்தியம், வடக்கு, தெற்கு என 5 மண்டலங்கள் உள்ளன.

    5 மண்டல எல்லைக்குள் சொத்து வரி செலுத்துபவர்கள் சுமார் 4 லட்சத்து 75 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்த 2021-22-ம் நிதியாண்டில் மாநகராட்சி சார்பில் ரூ.150 கோடி நிலுவை தொகை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் ரூ.27 கோடி வசூலிக்கப்பட்டது.

    அதேபோல் நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் மொத்தம் ரூ.373 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சொத்துவரி வசூலை தீவிரப்படுத்தியது மாநகராட்சி நிர்வாகம். இதன் காரணமாக தற்போது வரை ரூ.182 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து இன்று 73-வது வார்டு, பொன்னையராஜபுரம் வார்டு அலுவலகம், 40-வது வார்டில் பெரியதோட்டம் பகுதியில் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற்றது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    நடப்பு நிதியாண்டு மற்றும் கடந்த நிதியாண்டின் நிலுவை தொகை என மொத்தம் ரூ.524 கோடி சொத்து வரி வசூல் செய்ய வேண்டியுள்ளது. இதில் ரூ.210 கோடி வரை வரி வசூல் செய்யபட்டுள்ளது.

    இதில் நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ.373 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வசூல் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    சொத்து வரி தொகை செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வசூல்பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நீண்ட நாட்களாக சொத்துவரியை நிலுவை வைத்துள்ளவர்களின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    எனவே மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரியினங்களையும் உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தவிர்த்து, மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், மாா்ச் 31-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம் போல காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வரி பாக்கி உள்ள நிறுவனங்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • வரிபாக்கி உள்ள தனியார் நிறுவனத்தின் கட்டிடங்களை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஜப்தி செய்தனர்.

    வண்டலூர்:

    மறைமலைநகர் நகராட்சி பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் ஏராளமான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் பெருகி வருகின்றன.

    இந்தநிலையில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி பாக்கி அதிக அளவில் உள்ளது. அதனை வசூலிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    வரி பாக்கி உள்ள நிறுவனங்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது. எனினும் வரி பாக்கி தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இதற்கிடையே ரூ.1 கோடியே 10 லட்சம் வரி பாக்கி உள்ள தனியார் ஓட்டல் மற்றும் ரூ.21 லட்சம் வரிபாக்கி உள்ள கல்வி நிறுவனத்தின் கட்டிடம் ரூ.19 லட்சம் வரிபாக்கி உள்ள தனியார் நிறுவனத்தின் கட்டிடங்களை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஜப்தி செய்தனர். இதற்கான அறிவிப்பு நோட்டீசும் அங்கு ஒட்டப்பட்டது.

    வரி பாக்கி வைத்துள்ளவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி கமிஷனர் லட்சுமி எச்சரித்து உள்ளார்.

    • மதுரை பஸ் நிலைய கடைகளில் கோடிக்கணக்கில் வரி பாக்கி செலுத்தாதது தகவல் அறியும் சட்டத்தில் அம்பலமானது.
    • அதிகபட்சமாக ரூ.20 லட்சம் முதல் வரி பாக்கி வைத்துள்ளது

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பனகல் சாலை ஆகிய 3 இடங்களில் பஸ் நிலையங்கள் செயல்படுகிறது. இங்கு மாநகராட்சிக்கு சொந்தமாக 317 கடைகள் உள்ளன.

    இதில் அரசு போக்கு வரத்து கழக அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, ஏ.டி.எம். மையம் உட்பட 277 கடைகள் இயங்கி வருகின்றன. மதுரை 3 பஸ் நிலையங்களில் உள்ள சுமார் 277 கடைகள் வாடகை, வரி செலுத்துகிறதா? என்பது தொடர்பாக சமூக ஆர்வலர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

    இதற்கு மாநகராட்சி தகவல் தொடர்பு அதிகாரி பதிலளித்துள்ளார். அதில், மேற்கண்ட 3 பஸ் நிலையங்களில் உள்ள வியாபார கடை உரிமையாளர்கள் ரூ.1 கோடியே 69 லட்சத்து 87 ஆயிரத்து 370-க்கு வரி பாக்கி வைத்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    3 பஸ் நிலையங்களில் ஒரே நபருக்கு 3, 4 கடைகள் வாடகைக்கு வழங்கப்பட்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை பஸ் நிலையங்களில் செயல்படும் சில கடை உரிமையாளர்கள் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் முதல் வரி பாக்கி வைத்துள்ளது இந்த சட்டத்தின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

    வரி பாக்கி வைத்து உள்ள வியாபாரிகளிடம் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து பாக்கியை வசூல் செய்ய வேண்டும். அல்லது அவர்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்

    • திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன.
    • நடப்பு நிதியாண்டில் சொத்து வரி ரூ. 83.34 கோடி நிலுவை உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இவற்றில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், காலியிடங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியன மாநகராட்சிக்கு பல்வேறு இனங்களில் வரி செலுத்துகின்றன. இவை தவிர மாநகராட்சி கட்டடங்கள் உள்ளிட்டவற்றில் ஏலம், குத்தகை அடிப்படையில் உரிமம் பெற்றவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    நடப்பு நிதியாண்டில் சொத்து வரி ரூ. 83.34 கோடி நிலுவை உள்ளது. காலியிட வரியில் ரூ. 7.97 கோடி, தொழில் வரி ரூ.3.30 கோடி,குடிநீர் கட்டணம்ரூ. 18.81 கோடி, குத்தகை இனத்தில் ரூ. 15.05 கோடி,திடக்கழிவு மேலாண்மை கட்டணம் ரூ. 13.61 கோடி மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ. 1.81 கோடி நிலுவை உள்ளது. மொத்தம் 143.89 கோடி ரூபாய் வரியினங்கள் நிலுவையில் உள்ளது. பல கோடி ரூபாய் வரிகள் செலுத்தப்படாமல் உள்ளன. நிர்வாகத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டப்பணிகள்,குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, அலுவலக பராமரிப்பு மற்றும் ஊழியர்கள் சம்பளம், மின் கட்டணம், ரோடுகள் பராமரிப்பு, கடன்களுக்கான வட்டி, தவணை செலுத்துதல் என மாநகராட்சி நிர்வாகம் கடுமையாகத் தள்ளாடிக் கொண்டுள்ளது.

    எனவே மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களை உரிய வகையில் பொதுமக்கள் செலுத்தி சீரான நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என கமிஷனர் கிராந்திகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். வரி செலுத்துவோர் வசதிக்காக மைய அலுவலகம், வரி வசூல் மையங்கள் ஆகியன ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தவிர அனைத்து நாட்களிலும் காலை 9:30 மணி முதல் மாலை5 மணி வரை செலுத்தலாம். மேலும் ஆன்லைன் வாயிலாகhttps://tnurbanepay.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வரி செலுத்தாதவா்களின் பெயா் பட்டியல் பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.
    • காங்கயம் நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    காங்கயம் : 

    வருகிற 30 ந் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் வணிகக் கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என காங்கயம் நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காங்கயம் நகராட்சி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீா்க் கட்டணம் செலுத்தாத 33 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்பு கடந்த ஒரு வாரத்தில் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும் சொத்துவரி செலுத்துவதற்கு இம்மாதம் 30 ந் தேதி கடைசி நாளாகும். அதற்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால், எந்தவித முன்னறிவிப்புமின்றி குடிநீா் இணைப்பு துண்டிப்பு மற்றும் வணிக கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும். தவிர, வரி செலுத்தாதவா்களின் பெயா் பட்டியல் பொது இடங்களில் காட்சிக்கு வைக்கப்படும்.எனவே மேற்கண்ட நடவடிக்கைகளை தவிா்ப்பதற்கு காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

    • மக்கள் படும் துன்பத்தை அரசுகளின் கவனத்திற்கு உரிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டும்.
    • ஜி.எஸ்.டி. தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவை ஆலோசனை கூட்டம் நிறுவனர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரவி வரவேற்றார்.

    அவைத்தலைவர் ஜெயபால், நகரதலைவர் நசீர், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகரசெயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளின் ஜி.எஸ்.டி. வரி விகித உயர்வுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

    மாதாமாதம் மாற்றி மாற்றி வரியை உயர்த்தி கொண்டு போவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, ஜி.எஸ்.டி. கவுன்சில் தீர்மானங்களுக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து அரிசி, பால் போன்றவற்றிற்கு வரியை குறைக்க செய்ய வேண்டும்.

    சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டோர் ஒவ்வொருவரும் மக்கள் படும் துன்பத்தை அரசுகளின் கவனத்திற்கு உரிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டியது கடமை ஆகும்.

    தஞ்சை வணிகர் சங்கபேரவையின் சார்பில் சென்னையில் உள்ள ஜி.எஸ்.டி. தலைமை அலுவலகம் முன்பு வரும் வருகிற 29-ம் தேதி தஞ்சையின் 52 வணிகர் சங்க வட்ட செயலாளர்களும் சென்று ஆர்ப்பாட்டம் செய்திடுவது.

    இதற்கான ஏற்பாடுகளை செய்திட மாநிலநிர்வாகிகளை கேட்டு கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள்ஆத்மநாதன், சுந்தரமூர்த்தி, காசிநாதன், சபிக்முகமது, பிரகாஷ், துணைச் செயலாளர் சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரசெயலாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

    • தொழில்வரி விதிப்புகள் அதிகரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வரியினங்கள் முனைப்புடன் வசூலிக்க வேண்டும்.
    • பகுதிவாரியாக வரி வசூல் நிலவரம் குறித்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சியில் வரி வசூல் நிலவரம் குறித்து மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் வருவாய் பிரிவினர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இதில் பகுதிவாரியாக வரி வசூல் நிலவரம் குறித்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில், புது வரி விதிப்புக்குப் பின் பெறப்பட்ட வசூல் நிலவரம்,சொத்து வரி விதிப்புகளில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டடங்கள் ஆகியன குறித்து விவரம் பெறப்பட்டது.

    தொழில்வரி விதிப்புகள் அதிகரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வரியினங்கள் முனைப்புடன் வசூலிக்க வேண்டும்.குடிநீர் கட்டணம் நீண்ட நாள் உள்ள இணைப்புகளில் வசூல் தாமதமாகும் நிலையில் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது ஏறத்தாழ 4 கோடி ரூபாய் குடிநீர் கட்டணம் நிலுவை உள்ளது. வரும் வாரத்தில் இதில் தீவிரம் காட்டி குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாயாவது வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    • செயலியை கைப்பேசி ஆப்பின் பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாக வரியினங்களை செலுத்தி பயனடையலாம்.
    • தாராபுரம் நகராட்சி ஆணையா் வே.ராமா் அறிவிப்பு.

    தாராபுரம் :

    தாராபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை இணையதள செயலி மூலம் செலுத்தலாம் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து தாராபுரம் நகராட்சி ஆணையா் வே.ராமா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாராபுரம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, காலிமனை வரி, குடிநீா்க் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை இணையதள செயலி மூலம் செலுத்தலாம். இதற்காக தயாரிக்கப்பட்டசெயலியை கைப்பேசி ஆப்பின் பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாக தாராபுரம் நகராட்சியைத் தோ்வு செய்து, மேற்கண்ட வரியினங்களை செலுத்தி பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கரூர் மாநகராட்சிக்கு வரி செலுத்தாத 11 கடைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
    • ரூ.10 லட்சம் வரை வரி பாக்கி செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர்.

    கரூர்

    கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பஸ் நிலையம், திண்டுக்கல் ரோடு, மினி பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் வணிக நிறுவனம் மற்றும் மளிகை கடைகள் இயங்கி வருகிறது. இந்தநிலையில் கரூர் மினி பஸ் நிலையம் அருகே உள்ள 2 கடைகள், திண்டுக்கல் சாலையில் ஒரு கடை, கரூர் பஸ் நிலையத்தில் 8 கடைகள் என மொத்தம் 11 கடைக்காரர்கள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை ஒரு கடைக்கு தலா ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து 11 கடைக்காரர்களுக்கு மாநகராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பியும் பணத்தையும் செலுத்தவில்லையாம்.

    இதையடுத்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சிக்கு வரி செலுத்தாத 11 கடைகளுக்கும் சீல் வைப்பதற்காக மாநகராட்சி ஆய்வாளர், நகர அமைப்பு ஆய்வாளர் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று சென்றனர்.

    அப்போது கடைகளின் உரிமையாளர்களுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், கரூர் மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்ததாத 11 கடைகளுக்கும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதனால் கரூர் பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×