search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜப்தி"

    • சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் செல்போன் வழியாக எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது.
    • 100 வணிக நிறுவன உரிமையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.70 கோடி நீண்டகாலமாக வசூல் ஆகாமல் உள்ளது

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரியை வசூலிப்பதில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    பருவமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை சொத்துவரி, தொழில்வரி, தொழில் உரிமம் போன்ற வரி விதிப்புக்கு கடந்த 3 மாதமாக தீவிரப்படுத்தாமல் இருந்து வந்த நிலையில் மார்ச் 31-ந் தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தும் அவகாசம் முடிகிறது.

    அதனால் மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் 15 மண்டலங்களிலும் வரி வசூலை தீவிரப்படுத்தி வருகின்றனர். சென்னையில் 4 லட்சம் வணிக கட்டிடங்கள், 8 லட்சம் வீடுகள் என மொத்தம் 12 லட்சம் சொத்துகளுக்கு வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிதியாண்டிற்கு ரூ.1600 கோடி சொத்து வரி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு அதில் இதுவரையில் ரூ.1,296 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.2 கோடி கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.300 கோடி இன்னும் 40 நாட்களில் வசூலிக்கப்பட வேண்டும்.

    சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் செல்போன் வழியாக எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது. நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளவர்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது.

    சென்னை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் பல லட்சங்களை நிலுவையில் வைத்துள்ள வணிக நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    100 வணிக நிறவன உரிமையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.70 கோடி நீண்டகாலமாக வசூல் ஆகாமல் உள்ளது அவர்களின் வணிக கட்டிடங்களை ஜப்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான சட்டம் சார்ந்த பணிகள் நடந்து வருகின்றன.

    எனவே பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரியை செலுத்தினால்தான் அடிப்படையான வசதிகளை செய்ய முடியும். மார்ச் 31-ந் தேதி வரை காத்திருக்காமல் முன்கூட்டியே சொத்துவரி செலுத்தி மேல் நடவடிக்கை மற்றும் அபராதத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இழப்பீடு வழங்காததால் நடவடிக்கை
    • பஸ் மோதி 2 பேர் இறந்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 60). இவரது மனைவி லதா(35). கடந்த 2014-ம் ஆண்டு நிம்மியம்பட்டில் பைக்கில் சென்ற போது, பஸ் மோதி 2 பேரும் இறந்தனர்.

    இதைத்தொடர்ந்து மணியின் பிள்ளைகள் வாணியம்பாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க போக்குவரத்து கழகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

    ஆனால் போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க வில்லை. அதைத்தொடர்ந்து பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இன்று வேலூரில் இருந்து சேலம் சென்ற அரசு பஸ் வாணியம்பாடியில் ஜப்தி செய்யப்பட்டது.

    • மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வீரமணி உயிரிழந்தார்.
    • போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யப்படும் என உத்தரவிட்டார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே உள்ள ஊத்தங்கால் பழைய காலனியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் வீரமணி (வயது 24). இவர் கடந்த 4.5.2017 அன்று ஊ.மங்கலம் அம்பேத்கர் சிலை அருகே கடலூர்-விருத்தாசலம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வீரமணி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து வீரமணியின் தாய் அனுசுயா, சகோதரி ரதி ஆகியோர் நஷ்டஈடு பெற்றுத்தரக்கோரி கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் எண் 1-ல் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் பலியான வீரமணியின் குடும்பத்துக்கு சம்பந்தப்பட்ட விழுப்புரம் போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.17 லட்சத்து 73 ஆயிரத்து 600 வழங்க வேண்டும் என கடந்த 18.3.2021 அன்று உத்தரவிட்டார். ஆனால் இதுநாள் வரை வீரமணியின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வீரமணியின் குடும்பத்தினர், நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி பிரகாஷ், வீரமணியின் குடும்பத்துக்கு விழுப்புரம் போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூ.23 லட்சத்து 68 ஆயிரத்து 129 வழங்க வேண்டும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யப்படும் என உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் நேற்று காலை கடலூர் பஸ் நிலையத்தில் நின்ற விழுப்புரம் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான அரசு பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

    • பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்த அரசு மிதவை பஸ் ஜப்தி செய்யப்பட்டது
    • கோர்ட் உத்தரவிட்ட இழப்பீடு தொகையை வழங்காததால் நடவடிக்கை

    பெரம்பலூர், 

    தூத்துக்குடி மாவட்டம், போல்பேட்டையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜோதி (வயது 40). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ரவிச்சந்திரன் சென்னையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு ஜோதி சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக ஒரு தனியார் ஆம்னி பஸ்சில் பயணம் செய்தார். அந்த பஸ் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் பின்னால் வந்த ஒரு அரசு விரைவு மிதவை பஸ் ஆம்னி பஸ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஜோதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஜோதியின் கணவர் ரவிச்சந்திரன் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ரூ.14 லட்சத்து 7 ஆயிரத்து 117 ஆயிரம் இழப்பீடாக ஜோதியின் குடும்பத்தினருக்கு வழங்க திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2022-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஜோதியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

    இதனால்பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்துசெல்லும் திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகத்தின் ஏதேனும் விரைவு மிதவை பஸ்சை ஒன்றை ஜப்தி செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நேற்று காலை திருச்சியில் இருந்து திருப்பதி நோக்கி பயணிகளுடன் புறப்பட்டு பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த அரசு விரைவு மிதவை பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர்.

    • பெரம்பலூர் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
    • விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்காததை தொடர்ந்து கோர்ட் உத்தரவு

    பெரம்பலூர்,

    திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, வாளாடி கிராமத்தை சேர்ந்தவர் ரபீக். இவரது மகன் சீராஜ் (வயது 23). ஆப்டீசியனான இவர் அரியலூரில் கண் கண்ணாடி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி மாலையில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அரியலூர்-திருச்சி சாலையில் பூவாளூரில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று சீராஜ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சீராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சீராஜின் மனைவி கவுசிநிஷா இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ரூ.25 லட்சத்து 6 ஆயிரத்து 712-ஐ இழப்பீடாக கவுசிநிஷாவுக்கு வழங்க திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந்தேதி கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கவுசிநிஷாவுக்கு இழப்பீடு வழங்காமல் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் தற்போது வட்டியுடன் ரூ.38 லட்சத்து 92 ஆயிரத்து 547-ஐ இழப்பீடாக வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த இழப்பீட்டு தொகையையும் அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால், பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழக பஸ்களில் ஏதேனும் ஒன்றை ஜப்தி செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்காக பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த அரசு பஸ் ஒன்றை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டிற்கு கொண்டு சென்றனர். 

    • விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்தனர்
    • இழப்பீடு தொகை தராததால், ரேணுகா மீண்டும் அரியலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் வெளிப்பிரிங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கண்ணதாசன்(வயது40). இவர், கடந்த 2012-ம் ஆண்டு வெளிப்பி ரிங்கியத்திலிருந்து கீழப்பழுவூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து மோதியதில் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ரேணுகா தொடர்ந்த வழக்கில், அரியலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.6.70 லட்சம் இழப்பீடு தர விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து கிளை கழகத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை நீதிமன்றத்தில் விழுப்புரம் கோட்டம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரியலூர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.

    ஆனாலும், இழப்பீடு தொகை தராததால், ரேணுகா மீண்டும் அரியலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயங்கொண்டம் அடுத்த குறுக்கு ரோட்டுக்கு சென்ற நீதிமன்ற ஊழியர்கள் விழுப்புரத்திலிருந்து ஜெயங்கொண்டம் வழியாக திருச்சி வந்த விழுப்புரம் கோட்ட அரசு பேருந்தை ஜப்தி செய்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.



    • 13 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
    • 2019ல் லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது.

    திருப்பூர் :

    திருப்பூரில், விபத்து இழப்பீடு வழங்காததால், மூன்று அரசு பஸ்களை ஜப்தி செய்து கோர்ட்டு ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். தாராபுரம், ஆலாம்பாளை யத்தை சேர்ந்தவர் செல்வவேல், 16. இவர் தனது, இரு நண்பர்களுடன் காரில் கடந்த, 2014ல் சென்ற போது, அரசு பஸ் மோதியதில், காரில் சென்ற, மூவர் இறந்தனர். இதில், செல்வவேல் இழப்புக்கு, இழப்பீடு கேட்டு அவரது சகோதரி செல்வபிருந்தா, திருப்பூர் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார்.

    கடந்த, 2019ல், 13 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதுவரை இழப்பீடு வழங்காததால், பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். நேற்று, பஸ்சை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதைபோல் திருவண்ணாமலையை சேர்ந்தவர் இனிகோ ஜான்துரை, 28. கடந்த, 2017ல், டூவீலரில் முதலிபாளையம் பிரிவு அருகே சென்ற போது, அரசு பஸ் மோதி இறந்தார். இதுதொடர்பான வழக்கில், 2019ல், லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இழப்பீடு வழங்காத காரணத்தால், பஸ்சை நேற்று ஜப்தி செய்தனர்.

    கோவையை சேர்ந்தவர் ராஜன், 45. கடந்த, 2016ல், உக்கடம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே நின்ற போது, அரசு பஸ் மோதியதில் இறந்தார். இதுதொடர்பான இழப்பீடு வழக்கில், 12 லட்சத்து, 75 ஆயிரத்துக்கு சமரசம் செய்யப்பட்டது. இப்பீடு வழங்காததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

    • ராமநாதபுரம் வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ராக்கம்மாள். இவர்களதுமகள் சொர்ணவள்ளிக்கு பட்டினம்காத்தான் பகுதியில் 1.37 ஏக்கர் சொந்த நிலம் இருந்தது. அதனை வீட்டு வசதி வாரியம் கடந்த 1997ம் ஆண்டு 1 செண்ட் ரூ.5 ஆயிரம் என்று விலை நிர்ணயம் செய்து கையகப்படுத்தியது.

    ஆனால் அதற்கு ரிய பணத்தை வழங்கவில்லை. இதனைத்தொடர்ந்து சொர்ணவள்ளி, வீட்டு வசதி வாரியத்துறை அதிகாரிகளிடம் சென்று தனக்கு தர வேண்டிய பணத்தை கேட்டுள்ளார். இருந்த போதிலும் பணத்தை கொடுக்கவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட சொர்ணவள்ளி ராமநாதபுரம் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவில் சொர்ணவள்ளிக்கு தர வேண்டிய அசல் மற்றும் வட்டி ஆகியவை சேர்த்து ரூ.39 லட்சத்தை வீட்டு வசதி வாரியம் வழங்கிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன் பின்னரும் அவருக்கு பணம் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் நீதிமன்றத்தில் புகார் செய்தார். அதனை விசாரித்த ராமநாதபுரம் சப்-கோர்ட் நீதிபதி கதிரவன், ராமநாதபுரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்களை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.இதனையடுத்து ராமநாதபுரம் சப்-கோர்ட் ஆமினா ராமநாதபுரம் பெரிய கடை வீதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உள்ள கணினி உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றார். இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வரி கட்டாத கடைகளுக்கு முன்பு குப்பைத் தொட்டிகள் வைத்தும், கடைகளுக்கு சீல் வைத்தும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் வரி பாக்கி மற்றும் வாடகை பாக்கி வசூல் செய்ய மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.வரி கட்டாத கடைகளுக்கு முன்பு குப்பைத் தொட்டிகள் வைத்தும், கடைகளுக்கு சீல் வைத்தும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் தற்போது வரி மற்றும் வாடகை பாக்கி கணிசமாக வசூலாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடலூர் லாரன்ஸ் ரோட்டில் வள்ளியம்மை பஜார் உள்ளது. இந்த பஜாரில் 16 கடைகளுக்கு வரி செலுத்தவில்லை. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் குப்பைத்தொட்டிகளை பஜாரின் வாசலில் வைத்து கடைகளுக்கு சீல் வைக்க முயன்றனர்.

    இதனை தொடர்ந்து அங்கிருந்த கடை உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் வள்ளியம்மை பஜாரில் உள்ள 16 கடைகளுக்கு நேரில் சென்ற அதிகாரிகள், எந்தெந்த கடைகளுக்கு எவ்வளவு வரி பாக்கி என குறிப்பிட்டு அந்தந்த கடைகளில் இறுதி நோட்டீஸ் ஒட்டினர். இதில் மூன்று நாட்களுக்குள் வரி செலுத்தவில்லை என்றால் கடைகளில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும் எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு தீர்ப்பு வெளியானது
    • பேச்சு வார்த்தை க்கு பிறகே பொருட்களை ஊழியர்கள் ஜப்தி செய்து எடுத்துச்செல்வார்களா? என்பது தெரியும்.

    கோவை, பிப். 7-

    சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது39). லேத் பட்டறை தொழிலாளி.

    இவர் கடந்த 5-8-2011-ம் ஆண்டு தனது சகோதரர் முரளி கிருஷ்ணன் (38) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வால்பாறையில் உள்ள சோலையார் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வனத்துறை வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதில் முரளி கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

    இந்த விபத்து வழக்கில் உரிய இழப்பீடு வழங்க கோரி சத்தியமூர்த்தி மனைவி சுகந்தி சேலம் மாவட்ட சிறப்பு நீதிமன்ற தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் சத்தியமூர்த்திக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.20 லட்சத்து 40 ஆயிரத்தை 7.5 சதவீத வட்டியுடன் ஒரு மாத காலத்திற்குள் கொடுக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

    இதேபோல் முரளி கிருஷ்ணனுக்கு ரூ.20 லட்சத்து 11 ஆயிரத்தை 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என சேலம் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்து கோர்ட்டு உத்தரவுப்படி அரசு தரப்பில் இருந்து 50 சதவீத இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

    மீதமுள்ள தொகையை வழங்க கோரி பாதிக்கப்ப ட்டவர்கள் சார்பில் கோவை மாவட்ட 4-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு 2020-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால் வட்டியுடன் சேர்த்து ரூ 34 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து கோவை கோர்ட்டு அமீனா மருதையன், சேலம் கோர்ட் அமீனா சண்முகம் ஆகியோர் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்தனர்.

    அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 1 கார், 3 ஜீப், 25 கம்ப்யூட்டர் போன்ற ரூ 34 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்வ தற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். கோர்ட்டு ஊழி

    யர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடு

    பட்டனர். பேச்சு வார்த்தை க்கு பிறகே பொருட்களை ஊழியர்கள் ஜப்தி செய்து எடுத்துச்செல்வார்களா? என்பது தெரியும்.

    • பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்வதற்கு தயாராக இருந்த 4 பஸ்களை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
    • பஸ்களை கோர்ட்டு வளாகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் விபத்து ஏற்படுத்தி விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வணங்காமல் போக்குவரத்து துறை காலதாமதம் செய்து வந்துள்ளது. அவ்வாறு நீண்ட நாளா நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளில் தொடர்புள்ள அரசு பஸ்களை ஜப்தி செய்ய திருப்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

    அந்த உத்தரவின்படி இன்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்வதற்கு தயாராக இருந்த 4 பஸ்களை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர். பின்னர் அந்த பஸ்களை கோர்ட்டு வளாகத்திற்கு எடுத்துச் சென்றனர். ஜப்தி செய்த தகவலை போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வாரிசுதாரர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது.
    • கோவில் நிலத்தில் வசித்தவர்கள் குத்தகை நிலுவைத் தொகையை செலுத்தவில்லை.

    கடையநல்லூர்:

    சிவகிரி அருகே சுப்பிரமணியபுரம் சுந்தர விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் 53 சென்ட் நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்தவரின் மறைவுக்கு பின்னர் அவரது வாரிசுதாரர்கள் அந்த நிலத்தில் வீடு கட்டி வசித்தும், விவசாயம் செய்தும் வந்தனர்.

    அவர்கள் நீண்ட காலம் குத்தகை பணம் செலுத்தாததால், கோவிலுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 15 இருந்தது. இதுதொடர்பாக வாரிசுதாரர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது.

    எனினும் கோவில் நிலத்தில் வசித்தவர்கள் குத்தகை நிலுவைத் தொகையை செலுத்தவில்லை. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அந்த நிலத்தில் உள்ள வீட்டில் இருந்த பீரோ, பித்தளை பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்தனர்.

    ×