

மதுரையில் வீட்டு வசதி வாரிய திட்டத்திற்கு 92 சென்ட் நிலத்தை முருகசாமி என்பவரின் குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். இதற்காக 11 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துவிட்டு, மீதமுள்ள 30 லட்சம் ரூபாயை 30 ஆண்டுகளாக தரவில்லை என புகார் அளித்திருந்தனர்.
நிலுவைத் தொகையை வழங்காதததால் வீட்டுவசதி வாரிய பொருட்களை ஜப்தி செய்ய சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டது.
இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.