என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மறைமலைநகர் நகராட்சிக்கு ரூ.1½ கோடி வரிபாக்கி- ஓட்டல், தனியார் நிறுவன கட்டிடம் ஜப்தி
- வரி பாக்கி உள்ள நிறுவனங்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது.
- வரிபாக்கி உள்ள தனியார் நிறுவனத்தின் கட்டிடங்களை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஜப்தி செய்தனர்.
வண்டலூர்:
மறைமலைநகர் நகராட்சி பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் ஏராளமான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் பெருகி வருகின்றன.
இந்தநிலையில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி பாக்கி அதிக அளவில் உள்ளது. அதனை வசூலிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
வரி பாக்கி உள்ள நிறுவனங்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது. எனினும் வரி பாக்கி தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கிடையே ரூ.1 கோடியே 10 லட்சம் வரி பாக்கி உள்ள தனியார் ஓட்டல் மற்றும் ரூ.21 லட்சம் வரிபாக்கி உள்ள கல்வி நிறுவனத்தின் கட்டிடம் ரூ.19 லட்சம் வரிபாக்கி உள்ள தனியார் நிறுவனத்தின் கட்டிடங்களை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஜப்தி செய்தனர். இதற்கான அறிவிப்பு நோட்டீசும் அங்கு ஒட்டப்பட்டது.
வரி பாக்கி வைத்துள்ளவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி கமிஷனர் லட்சுமி எச்சரித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்