search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூந்தமல்லி நகராட்சி"

    • பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்தனர்.
    • குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பூந்தமல்லி:

    உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் கிராம சபை கூட்டம் போல நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வார்டு குழு மற்றும் பகுதி சபா நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

    அதன்படி, பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு குமணன்சாவடி பகுதியில் பகுதி சபா கூட்டம் நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களின் பிரச்சனைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். பழுதான மின்கம்பங்களை சீரமைத்தல், சாலைகளை சீரமைத்தல், கழிவுநீர் மற்றும் மழை நீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், 18-வது வார்டு பகுதியை பூந்தமல்லி வட்டத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்தனர். உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணசாமி கூட்டத்தில் பூந்தமல்லி நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை, துணை தலைவர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் லதா, மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர் மற்றும் நகராட்சி அதிகாரிகள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் நகராட்சி அலுவலகத்தில் வரிகள் செலுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் தொழில் வரி, சொத்து வரி, காலி நிலமனை வரி, குடிநீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் கட்டாமல் நிலுவையில் உள்ளவர்கள் வரியை விரைந்து செலுத்த வேண்டும் என பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட வணிக வளாகங்களில் நோட்டீஸ் அனுப்பியும் தொழில் வரி, சொத்து வரியை செலுத்தாத கடைகளை ஜப்தி செய்யும் நடவடிக்கை பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் நாராயணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. நகராட்சி அதிகாரிகள் ஜப்தி செய்ய வந்திருப்பதை அறிந்த கடை உரிமையாளர்கள் உடனடியாக நிலுவையில் உள்ள வரி பாக்கியினை நகராட்சிக்கு செலுத்தினார்கள். இதனால் வரி செலுத்திய கடைகளுக்கு ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

    ஒரே நாளில் மட்டும் ரூ.10 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து வரி செலுத்தாத கடைகள் மீது ஜப்தி நடவடிக்கை செய்யப்படும் என நகராட்சி கமிஷனர் நாராயணன் தெரிவித்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் நகராட்சி அலுவலகத்தில் வரிகள் செலுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் விரைந்து நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×