என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டல் சீல்"

    • மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்றபோது அதில் முழு தேறை இறந்து கிடைந்து இருந்துள்ளது.
    • ஓட்டல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர் கோரிக்கை வைத்தனர்.

    சென்னை பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது நாவலடி என்கிற பிரபல தனியார் ஓட்டல்.

    இந்த ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் சாப்பிட்ட உணவில் முழு தேரை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்றபோது அதில் முழு தேறை இறந்து கிடைந்து இருந்துள்ளது.

    இதையடுத்து, உணவு சாப்பிட்டவர்கள் நாவலடி ஓட்டல் நிர்வாகத்திடம் தேரை குறித்து கேட்டனர். அப்போது, வாடிக்கையாளருக்கும், ஓட்டலர் நிர்வாகத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நாவலடி ஓட்டல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    • ஒரு ஓட்டல் அனுமதி இல்லாமல் செயல்படுவது தெரிந்தது.
    • பரிசோதனைக்காக 6 ஓட்டல்களில் இருந்தும் உணவு மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது.

    கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா தலைமையில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள 2 ஓட்டல்களில் சுகாதாரமற்ற உணவு விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து அந்த ஓட்டல்களுக்கு சீல் வைத்தனர். மேலும் ஒரு ஓட்டல் அனுமதி இல்லாமல் செயல்படுவது தெரிந்தது. அந்த ஓட்டல் தொடர்ந்து செயல்பட தடை விதிக்கப்பட்டது. மேலும் கடைகளில் இருந்த கெட்டுபோன உணவுகள், பழைய இறைச்சிகள், தவறான முறையில் பதபடுத்தபட்ட மற்றும் தடை செய்யபட்ட மசாலாக்கள், செயற்கை உணவு வண்ண பொடிகளை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பரிசோதனைக்காக 6 ஓட்டல்களில் இருந்தும் உணவு மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது.

    ×