search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உள்ளாட்சி தினத்தையொட்டி பூந்தமல்லி நகராட்சியில் வார்டு குழு கூட்டம்- கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பங்கேற்பு
    X

    உள்ளாட்சி தினத்தையொட்டி பூந்தமல்லி நகராட்சியில் வார்டு குழு கூட்டம்- கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பங்கேற்பு

    • பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்தனர்.
    • குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பூந்தமல்லி:

    உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் கிராம சபை கூட்டம் போல நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வார்டு குழு மற்றும் பகுதி சபா நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

    அதன்படி, பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு குமணன்சாவடி பகுதியில் பகுதி சபா கூட்டம் நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களின் பிரச்சனைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். பழுதான மின்கம்பங்களை சீரமைத்தல், சாலைகளை சீரமைத்தல், கழிவுநீர் மற்றும் மழை நீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், 18-வது வார்டு பகுதியை பூந்தமல்லி வட்டத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் தெரிவித்தனர். உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணசாமி கூட்டத்தில் பூந்தமல்லி நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை, துணை தலைவர் ஸ்ரீதர், நகராட்சி ஆணையர் லதா, மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர் மற்றும் நகராட்சி அதிகாரிகள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×