search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharapuram Municipality"

    • செயலியை கைப்பேசி ஆப்பின் பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாக வரியினங்களை செலுத்தி பயனடையலாம்.
    • தாராபுரம் நகராட்சி ஆணையா் வே.ராமா் அறிவிப்பு.

    தாராபுரம் :

    தாராபுரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை இணையதள செயலி மூலம் செலுத்தலாம் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து தாராபுரம் நகராட்சி ஆணையா் வே.ராமா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாராபுரம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, காலிமனை வரி, குடிநீா்க் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை இணையதள செயலி மூலம் செலுத்தலாம். இதற்காக தயாரிக்கப்பட்டசெயலியை கைப்பேசி ஆப்பின் பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாக தாராபுரம் நகராட்சியைத் தோ்வு செய்து, மேற்கண்ட வரியினங்களை செலுத்தி பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பதிவு செய்ய தவறினால் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ஆதாா் எண் மற்றும் கைப்பேசி எண், தற்போதைய இருப்பிட முகவாி ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.

    தாராபுரம்:

    தாராபுரம் நகராட்சி தலைவா் கே.பாப்புகண்ணன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்ள வெளிமாநிலத்தவா்கள் மற்றும் அவா்களை வைத்து வீடு கட்டும் உாிமையாளா்கள், என்ஜினீயா்கள், கட்டிட ஒப்பந்ததாரா்கள், ஓட்டல் மற்றும் விடுதி உாிமையாளா்–கள், பண்ணை உாிமையாளா்கள், பானிபூாி மற்றும் குல்பி ஐஸ் தொழில் செய்து வருபவர்கள் மற்றும் உள்ளூா்வாசிகள் மூலம் இதர வேலை செய்யும் வெளிமாநிலத்தவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. எனவே 15 நாட்களுக்குள் அவர்களை பற்றிய விவரங்களை தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    அதற்காக அவா்கள் தங்கள் பெயா், வயது, புகைப்படம், ஆதாா் அட்டை, கைப்பேசி எண், தற்போது வேலை செய்து வரும் நிறுவனத்தின் பெயா், தற்போதைய முகவாி, நிறுவனத்தின் உாிமையாளா் ஆதாா் எண் மற்றும் கைப்பேசி எண், தற்போதைய இருப்பிட முகவாி ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்ய தவறினால் அவா்கள் அல்லது அவா்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×