search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "target"

    • மாவட்ட வனவியல் விரிவாக்க ஆய்வாளா் கிருஷ்ணசாமி, கல்லூரி முதல்வா் ஜோ. நளதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
    • தமிழக அரசின் பசுமை தமிழகம் இயக்கத்தின் ஒருபகுதியாக திருப்பூா் மாவட்டத்திற்கு 2022- 23ம் ஆண்டில் 4,70,400 மரக்கன்றுகள் நடவுசெய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    அவிநாசி:

    திருப்பூா் மாவட்டம் அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பசுமை தமிழகம் இயக்கத்தை செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

    இதுகுறித்து அமைச்சா்கள் கூறியதாவது:-

    தமிழக அரசின் பசுமை தமிழகம் இயக்கத்தின் ஒருபகுதியாக திருப்பூா் மாவட்டத்திற்கு 2022- 23ம் ஆண்டில் 4,70,400 மரக்கன்றுகள் நடவுசெய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வேம்பு, புங்கன், ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட 12 வகையான உள்நாட்டு மரக்கன்றுகள் வனத்துறை, தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த மரக்கன்றுகள் தமிழகத்தின் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் விவசாய நிலங்கள், கல்வி நிலையங்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்களில் நடப்பட்டு வளா்க்கப்பட உள்ளன. 2022 - 23ம் ஆண்டில் திருப்பூா் மாவட்டத்தில் 203.95 ஏக்கா் விவசாய நிலங்கள் 49.50 ஏக்கா் தனியாா் நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் 29.75 ஏக்கா் அரசுக்கு சொந்தமான நிலங்கள் என மொத்தம் 28,320 ஏக்கா் பரப்பில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன என்றனா்.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் வினீத் தலைமை வகித்தாா். ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநா் தேஜஸ்வி, திருப்பூா் சரக வன அலுவலா் சுரேஷ் கிருஷ்ணன், மாவட்ட வனவியல் விரிவாக்க ஆய்வாளா் கிருஷ்ணசாமி, கல்லூரி முதல்வா் ஜோ. நளதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • 250 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்பவர்களுக்கு மொபைல் டி.பி.சி. திறப்பதற்கு ஆலோசனை.
    • விவசாயிகளுக்கு ரூ. 120 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரேஷன் கடை ஆகியவற்றில் தமிழக அரசின் கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசின் முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    பின்பு அவர் நிருபவரிடம் கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 117 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளது நாள் ஒன்றுக்கு 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது இதற்காக தேவைப்படும் இடங்களில் ஒரே இடத்தில் இரண்டு கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

    மேலும் 250 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்பவர்களுக்கு மொபைல் டிபிசி திறப்பதற்கு ஆலோசனை மேற்கொண்டுள்ளபடும் அதிகாரிகள் கனிவுடன் மக்கள் பிரச்சனையை கேட்டறிந்து அதற்குண்டான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு 117 கோடி ரூபாய் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது இந்த ஆண்டு 120 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுற வங்கிகளில் கடன் கொடுக்கும் சங்கமாக இல்லாமல் வங்கி சேவை போன்று பல்வேறு சேவைகளை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

    ரேஷன் அரிசி தேவை இல்லை என்றால் அதனை வாங்க வேண்டாம் அதனால் ரேஷன் கார்டு இல்லாமல் போகாதுதமிழகத்தில் 109 நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளன மேலும் 20 நெல் சேமிப்பு கிடங்குகள் கட்ட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் அடுத்த 18 மாதங்களில் படிப்படியாக திறந்த வெளி நெல் குடோன் இல்லை என்ற நிலையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்

    எருக்கூர் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலையில் (சைலோ) விஞ்ஞான சேமிப்பு களன் செயல்பட வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு 40 வசூல் செய்வதாக எழுப்பிய கேள்விக்கு ராதாகிருஷ்ணன் பதில் அளிக்கையில் விவசாயிகளிடம் கூடுதல் பணம் வசூல் செய்யக்கூடாது இது தொடர்பாக கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்

    அப்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, செயற்பொறியாளர் குணசீலன், கண்காணிப்பு பொறியாளர் ராஜா மோகன், சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ராஜகுமார், தாசில்தார் செந்தில்குமார், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், கூட்டுறவு கடன் சங்க தலைவர் போகர்.ரவி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 82 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.
    • வேறு வேறு துறைகள் என்றாலும் ஆன்மீக அறிவியல் குறித்து ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் புகழ்பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் நிறுவனத்தின் சிறப்பு பேராசிரியருமான டாக்டர் சிவன் தனது மனைவி மாலதியுடன் சிறப்பு வழிபாடு மற்றும் ஆயுஷ் ஹோம பூஜையில் பங்கேற்றார். தொடர்ந்து மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த தர்மபுரம் ஆதின மடத்தில் 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்–சாரியார் சுவாமிகளை சந்தித்து குடும்பத்துடன் ஆசி பெற்றார். அவருக்கு ஆதினம் சார்பில் நினைவு பரிசாக திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய சிவன், தருமபுரம் ஆதீனம் நாட்டின் தொன்மையான மடமாகும். இது சைவத்துடன் தமிழையும் வளர்த்து வருவது மகிழ்ச்சிக்குரியது. நமது நாடு விண்வெளி துறையில் மட்டுமல்லாது அணுசக்தி துறை, வேளாண் துறை, வேளாண் அறிவியல் துறை ரசாயனத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டு வருகிறது. விரைவில் இந்தியா உலகத்தில் முதன்மையான நாடாக உருமாறும்.

    தற்போது மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 82 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. விரைவில் 100 சதவீதம் என்ற இலக்கை எட்டும், மாணவர்கள் தங்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்புள்ள துறைகளை தேர்ந்தெடுத்து ஆழ்ந்து படிக்க வேண்டும். அறிவியலும் ஆன்மீகமும் வேறு வேறு துறைகள் என்றாலும் ஆன்மீக அறிவியல் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

    • 5 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் பனை விதைகளை விதைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • செருதூர் கடற்கரை–யிலிருந்து- ராமர்மடம் வரை 6 கிலோமீட்டர் தொலைவிற்கு பனை விதை நடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சியானது 6 கி.மீ தூரம் கடற்கரை கொண்ட கிராமமாகும். 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி மற்றும் 2018ம் ஆண்டு வீசிய கஜாபுயல் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்த கடலோர கிராமம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது

    அதனை தடுக்கும் வகையில் இயற்கை அரணாக விளங்கும் பனை மரத்தை அதிக அளவில் நட வேண்டும் என ஊராட்சி சார்பில் திட்டமிட்டு 5 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் பனை விதைகளை விதைக்க இலக்கு நிர்ணயிக்க–ப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன் தொடங்கி வைத்தார்

    செருதூர் கடற்கரை–யிலிருந்து- ராமர்மடம் வரை 6 கிலோமீட்டர் தொலைவிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களைக் கொண்டு பனை விதை நடப்பட்டது இதன் மூலம் கிராமத்தை பெரிய அளவிலான பாதிப்பிலிருந்து காக்க முடியும் என தெரிவித்தனர்.வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி வெற்றிச்செல்வன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரம்யா தமிழரசன், ஊராட்சி செயலர் ச.சீதா, வார்டு உறுப்பினர் செல்வம், செல்வி, கலாநிதி மக்கள் நல பணியாளர் செல்வி கலந்து கொண்டனர்.

    • 4 இடங்களில் மீன் குஞ்சுகள் வளா்ப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • கரந்தை அரசு நுண் மீன் குஞ்சு பொரிப்பகத்துக்கு உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 8 கோடி நுண்மீன் குஞ்சுகளில், இதுவரை 6.60 கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் கரந்தையில் உள்ள நீா்வாழ் உயிரின ஆய்வுக் கூடத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    உள்நாட்டு மீன் வளா்ப்பில் மாநிலத்திலேயே முதன்மையான மாவட்டமாக தஞ்சாவூா் மாவட்டம் திகழ்கிறது.

    உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், மீன் வளா்ப்போருக்குக் குறைந்த விலையில் அரசு நிா்ணயிக்கும் விலையில் மீன் குஞ்சுகள் விநியோகம் செய்வதற்காகவும் கரந்தை, நெய்தலூா், அகரப்பேட்டை, திருமங்கலக்கோட்டை ஆகிய 4 இடங்களில் மீன் குஞ்சுகள் வளா்ப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மேலும், கரந்தையில் அரசு நுண் மீன் குஞ்சு பொரிப்பகம் இயங்கி வருகிறது.

    குறைந்து வரும் நாட்டு இன மீன் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக தமிழக அரசால் கல்பாசு (கருஞ்சேல் கெண்டை) ரூ.2.50 லட்சமும், இந்திய பெருங்கெண்டை ரூ.2.50 லட்சமும் என மொத்தம் ரூ.5 லட்சம் உற்பத்தி செய்து, இம்மாவட்டத்திலுள்ள ஆறுகளில் இருப்பு செய்வதற்கான பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    கரந்தை அரசு நுண் மீன் குஞ்சு பொரிப்பகத்துக்கு உற்பத்தி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 8 கோடி நுண்மீன் குஞ்சுகளில், இதுவரை 6.60 கோடி இலக்கு எட்டப்பட்டுள்ளது.

    இலக்கை முழுமையாக நிறைவு செய்வதற்கு மீன்வளத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது மீன்வள உதவி இயக்குநா் சிவக்குமாா், மீன்வள ஆய்வாளா் ஆனந்தன், கண்காணிப்பாளா் மாதவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • சுமார் 1,036 சிறப்பு முகாம்களில் 30,000 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதே இலக்கு.
    • மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் வெல்ல தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் வருகிற 21-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம்ஆகியவை சேர்த்து சுமார் 1036 சிறப்பு முகாம்களில் 30,000 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு "சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்" நடைபெறவுள்ளது.

    எனவே மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்குவீட்டிற்கே சென்று தடுப்பூசிபோட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் விடுபட்டு போன முன்களப்பணியாளாகள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் 2வது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் சிறப்பினமாக 18 முதல் 59 வயதுடைய அனைவரும் 3-வது தவனை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு நடப்பாண்டில் ரூ.1,500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி முதல் வருகிற 20-ந் தேதி வரை 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ‘வளமான ஊரக வளர்ச்சியைக்காண, கூட்டுறவு அமைப்புகளின் வாயிலாக அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நல்லாட்சி’ என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது. இதையொட்டி கூட்டுறவு வார விழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது.

    விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்.கணேஷ், சாந்தி ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ரூ.1 கோடியே 74 லட்சம் மதிப்பில் 357 பயனாளிகளுக்கு சுயஉதவிக் குழு கடன், டாப்செட்கோ மகளிர் மற்றும் ஆடவர் சுய உதவிக்குழு கடன், மத்திய கால கறவை மாட்டுக் கடன் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் 13 கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் 146 மையங்கள் மூலம் நடப்பாண்டில் விவசாயிகளுக்கு ரூ.32 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. நகர கூட்டுறவு வங்கிகள் சார்பில் ரூ.10 கோடி கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. நீலகிரியில் 82 கூட்டுறவு சேவை மையங்களும், 3 அம்மா மருந்தகங்களும் இயங்கி வருகிறது. 3 அம்மா மருந்தகம் மற்றும் கூட்டுறவு மருந்தகம் சார்பில், 15 சதவீத தள்ளுபடி விலையில் மருந்து, மாத்திரைகள் ரூ.95 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

    கூட்டுறவு சங்கத்தின் மூலம் 237 முழு நேர ரேஷன் கடைகள், 95 பகுதி நேர ரேஷன் கடைகள், 14 நடமாடும் ரேஷன் கடைகளும் செயல்பட்டு வருகின்றது. மத்திய அரசின் வணிக வங்கிகள் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு துரிதமாக கடன் வழங்கவில்லை என்பதால், மத்திய அரசு வழங்கிய தூய்மை பாரத திட்டத்தின் நிதி ரூ.2½ கோடி கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. மேலும் நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு நடப்பாண்டில் ரூ.1,500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கிராமப்பகுதிகளில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்ட மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை சம்பந்தப்பட்டவர்கள் வங்கிகளில் செலுத்தாமல் உள்ளனர். இந்த கடனை வசூலிக்க மகளிர் திட்ட அதிகாரிகள் உடன் இணைந்து செயல்பட இருக்கின்றனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் இயற்கை விவசாயமாக மாற்ற 150 கூட்டுறவு சங்கங்கள் மூலம் முதல் கட்டமாக 25 சதவீத இயற்கையான இடுபொருட்கள் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சிறந்த கூட்டுறவு வங்கிகளான மத்திய கூட்டுறவு வங்கி, குன்னூர் நகர கூட்டுறவு வங்கி மற்றும் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    இதில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் லோகநாதன், துணை பதிவாளர்கள் நீலா, துரைசாமி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஆல்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ் பேசும்போது, நீலகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக கலெக்டர் வேகமாக பணிகளை மேற்கொண்டு வருகிறார். மஞ்சூர் பரமூலா, ஓணிக்கண்டி ஆகிய 2 இடங்களில் பகுதி நேர ரேஷன் கடைகளை தொடங்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் நான் கலெக்டரிடம் மனு கொடுத்தேன். இந்த மனு கலெக்டர் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு பல நாட்களாகியும் ரேஷன் கடைகளை திறக்க அதிகாரிகள் கலெக்டருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் செயல்படுகின்றனர். இது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றார். முன்னதாக கஜா புயலில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல எனது முழு திறமையையும் வெளிப்படுத்துவேன் என இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா கூறியுள்ளார். #ManikaBatra #Olympic
    புதுடெல்லி:

    இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா இந்த ஆண்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கமும், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.



    டெல்லியை சேர்ந்த 23 வயதான மனிகா பத்ரா அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி இருக்கிறார். உலக தரவரிசையில் 56-வது இடத்தில் இருக்கும் மனிகா பத்ரா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த காலகட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது மற்றும் 20-வது இடத்தில் உள்ள வீராங்கனைகளை வீழ்த்தி இருக்கிறேன். இது எனது மனஉறுதியை பலப்படுத்தி இருக்கிறது.

    அடுத்து நான் ஒலிம்பிக் போட்டிக்காக கடுமையாக உழைக்க இருக்கிறேன். 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல எனது முழு திறமையையும் வெளிப்படுத்துவேன். உலக தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் வருவதும், அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதும் தான் எனது இலக்காகும்’ என்று தெரிவித்தார்.  #ManikaBatra #Olympic 
    பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.88 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சாந்தா கூறினார்.
    பெரம்பலூர்:

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அளவிலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளர்களுக்கு நிதி உள்ளாக்கம், நிதியியல் கல்வி மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குதல் தொடர்பாக ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது.

    பயிலரங்கத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.88 கோடி கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கியாளர்கள் மேற்காணும் இலக்கினை நிறைவேற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் கடன் உதவி வழங்கி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க முன்வர வேண்டும். மேலும் சிறந்த தொழில் முனைவோர் குழுக்களை கண்டறிந்து அவர்களுக்கு கடன் உதவி வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கலெக்டர் சாந்தா, வேப்பந்தட்டை தாலுகா வெங்கனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 31 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 84 லட்சம் வங்கி கடன் இணைப்பை வழங்கினார்.

    பயிலரங்கத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் தேவநாதன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் உமாமகேஸ்வரி, மண்டல இணைப்பதிவாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். 
    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் குழந்தை பலியானது. போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். #JammuKashmir #Pakistan #India
    ஜம்மு:

    காஷ்மீரில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

    கடந்த ஒரு வார காலமாக பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது. இப்படி கடந்த 15-ந் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் 2 பேர், பொதுமக்களில் 4 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

    மேலும் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்திருக்கிறார்கள்.

    இதற்கு பதிலடி தரும் விதமாக இந்திய எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் நேற்று முன்தினம் பாகிஸ்தானின் எல்லைக்கு அப்பால் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியும், பீரங்கி குண்டுகளை வீசியும் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதனால் நிலைகுலைந்துபோன பாகிஸ்தான் ராணுவம், தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.



    இதையடுத்து தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி இந்திய எல்லை பாதுகாப்புபடை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தது. அதன்படி இரு தரப்பிலும் தாக்குதல் நிறுத்தப்பட்டது.

    ஆனாலும், நேற்று முன்தினம் இரவு சம்பா மாவட்டத்தில் உள்ள ராம்கர் செக்டர் பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறிய தாக்குதலை நடத்தியது. அதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்று அதிகாலை ஜம்மு மாவட்டத்தில் சர்வதேச எல்லையையொட்டி உள்ள அர்னியா செக்டார் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் தாக்குதல் நடத்தினர். சிறிய ரக பீரங்கிகள் மற்றும் தானியங்கி ஆயுதங்களை கொண்டு அவர்கள் தாக்கினர்.

    அதனை தொடர்ந்து இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளால் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர்.

    இருப்பினும் பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டதில் 62 வயதான மூதாட்டி மற்றும் சிறப்பு போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்லன்வாலா செக்டாரில், பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில், வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த 8 மாத ஆண் குழந்தை பலியானது.

    பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச எல்லை பகுதியில் இருந்து 5 கி.மீ தொலைவுக்குள் உள்ள பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.

    இதற்கிடையில், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனிடம், ‘ராணுவ ஒத்துழைப்பின் மூலம் இரு நாடுகளும் அமைதி மற்றும் வளத்தை பெற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை’ என பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவேத் பஜ்வா கூறியது பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “அமைதியை வேண்டி அண்டை நாடு முன்வைக்கும் எந்த ஒரு பரிந்துரையையும் அரசு தீவிரமாக பரிசீலிக்கும்” என்றார்.  #JammuKashmir #Pakistan #India 
    ×