search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் அருண் தம்புராஜ்.

    சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்- கலெக்டர் தகவல்

    • சுமார் 1,036 சிறப்பு முகாம்களில் 30,000 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதே இலக்கு.
    • மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் வெல்ல தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் வருகிற 21-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம்ஆகியவை சேர்த்து சுமார் 1036 சிறப்பு முகாம்களில் 30,000 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு "சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்" நடைபெறவுள்ளது.

    எனவே மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்குவீட்டிற்கே சென்று தடுப்பூசிபோட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் விடுபட்டு போன முன்களப்பணியாளாகள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் 2வது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் சிறப்பினமாக 18 முதல் 59 வயதுடைய அனைவரும் 3-வது தவனை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×