search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கன்றுகள் நடவு"

    • நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் மரக்கன்று நடவு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வனத்துறை நர்சரியில் உற்பத்தி செய்யப்பட்டு, இலவசமாக நடவு செய்து தரப்படுகிறது.

    தாராபுரம் : 

    தமிழ்நாடு உயிர் பன்முகத்தன்மை மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் மரக்கன்று நடவு செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கென அந்தந்த பகுதிகளின் மண் வளம், நில அமைப்புக்கேற்ற மரக்கன்றுகள், அந்தந்த பகுதியில் உள்ள வனத்துறை நர்சரியில் உற்பத்தி செய்யப்பட்டு, இலவசமாக நடவு செய்து தரப்படுகிறது.

    கடந்த ஜூலையிலேயே இத்திட்டம் நடைமுறைக்கு வரவேண்டிய நிலையில் எதிர்பார்த்த பருவமழை இல்லாததால் தற்போது மரக்கன்றுகளை நடவு செய்ய வனத்துறையினர் முடிவெடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் ஆனைமலை புலிகள் காப்பக கட்டுப்பாட்டில் உள்ள தாராபுரம் நர்சரியில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    வனத்துறையினர் கூறுகையில், நன்கு வளர்ந்த நிலையில் சந்தனம், தேக்கு, மகாகனி, சவுக்கு மற்றும் மலை வேம்பு மரக்கன்றுகள் உள்ளன. அவை இலவசமாகவே நடவு செய்து தரப்படும்.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், அரசு நிலங்களில் மரம் வளர்க்க விரும்புவோர், திருப்பூர் வனச்சரக அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.விருப்பம் தெரிவிப்போரின் இடத்திற்கு நேரில் வந்து, அங்கு மரம் வளர்ப்பதற்கான சூழல் உள்ளதா என, கள ஆய்வு செய்த பின் மரக்கன்றுகள் நடவு செய்து கொடுக்கப்படும். 40 ஆயிரம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன என்றனர்.

    • விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பயன் பெற வனத்துறை சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கபட்டு வருகிறது.
    • விவசாயிகள் தற்போதுள்ள மழைக்கால பருவத்தை பயன்படுத்தி மரக்கன்றுகளை வனத்துறையின் மூலம் நடவு செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு சில வாரங்களில் பருவ மழையும் தொடங்க உள்ளது.

    இதனால் தங்கள் நிலங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து வனத்துறையை பயன் படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் விவசாயிகளுக்கு அவர்கள் விருப்பத்தின் பேரில் தங்கள் விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பயன் பெற வனத்துறை சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கபட்டு வருகிறது.

    நல்லம்பள்ளி ஒன்றியம், டொக்குபோதனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கெட்டுப்பட்டி பகுதியில் முதலமைச்சரின் கனவு திட்டமான பசுமைத் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் வனத்துறை மூலம் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை தருமபுரி வனபாதுகாவலர் உத்தரவின் பேரில் வனச்சரகர் ராமச்சந்திரன் அடங்கிய குழுவினர் பார்வையிட்டனர்.

    மேலும் வனத்துறையின் சார்பில் தருமபுரி மற்றும் தொப்பூர் அலுவலகங்களில் தேக்கு, சில்வர் ஊக், ஈட்டி, நாவல், செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் வனத்துறை சார்பில் தெரிவித்தனர்.

    விவசாயிகள் தற்போதுள்ள மழைக்கால பருவத்தை பயன்படுத்தி மரக்கன்றுகளை வனத்துறையின் மூலம் நடவு செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    • மாவட்ட வனவியல் விரிவாக்க ஆய்வாளா் கிருஷ்ணசாமி, கல்லூரி முதல்வா் ஜோ. நளதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
    • தமிழக அரசின் பசுமை தமிழகம் இயக்கத்தின் ஒருபகுதியாக திருப்பூா் மாவட்டத்திற்கு 2022- 23ம் ஆண்டில் 4,70,400 மரக்கன்றுகள் நடவுசெய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    அவிநாசி:

    திருப்பூா் மாவட்டம் அவிநாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பசுமை தமிழகம் இயக்கத்தை செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

    இதுகுறித்து அமைச்சா்கள் கூறியதாவது:-

    தமிழக அரசின் பசுமை தமிழகம் இயக்கத்தின் ஒருபகுதியாக திருப்பூா் மாவட்டத்திற்கு 2022- 23ம் ஆண்டில் 4,70,400 மரக்கன்றுகள் நடவுசெய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வேம்பு, புங்கன், ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட 12 வகையான உள்நாட்டு மரக்கன்றுகள் வனத்துறை, தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    இந்த மரக்கன்றுகள் தமிழகத்தின் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் விவசாய நிலங்கள், கல்வி நிலையங்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், அரசுக்கு சொந்தமான நிலங்களில் நடப்பட்டு வளா்க்கப்பட உள்ளன. 2022 - 23ம் ஆண்டில் திருப்பூா் மாவட்டத்தில் 203.95 ஏக்கா் விவசாய நிலங்கள் 49.50 ஏக்கா் தனியாா் நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் 29.75 ஏக்கா் அரசுக்கு சொந்தமான நிலங்கள் என மொத்தம் 28,320 ஏக்கா் பரப்பில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன என்றனா்.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் வினீத் தலைமை வகித்தாா். ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநா் தேஜஸ்வி, திருப்பூா் சரக வன அலுவலா் சுரேஷ் கிருஷ்ணன், மாவட்ட வனவியல் விரிவாக்க ஆய்வாளா் கிருஷ்ணசாமி, கல்லூரி முதல்வா் ஜோ. நளதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • ஒன்றியங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
    • அரசமரம், சரக்கொன்றை, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    உடுமலை:

    தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், ஊராட்சிகளின் கட்டமைப்பு வசதி மட்டுமின்றி பசுமை நிறைந்த மாசில்லாத சுற்றுச்சூழலை உருவாக்கவும் மரம் வளர்க்கும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.ஒன்றியங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

    உடுமலை ஒன்றியத்துக்கான மரக்கன்றுகள் போடிபட்டியில் பண்ணை அமைத்து தயார் செய்யப்படுகிறது. மரக்கன்றுகள் எண்ணிக்கைக்கு தேவையான அளவு விதைகள், கன்றுகள் பராமரிப்பதற்கான மண், உரம் உள்ளிட்டவை அனைத்தும் வேலை உறுதி திட்டத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.

    திட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மரக்கன்றுகள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு அரசமரம், சரக்கொன்றை, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அதிக மரக்கன்றுகள் நடும் வகையில் இடவசதியுள்ள ஊராட்சிகளை தேர்வு செய்து மரக்கன்றுகள் வழங்கப்படும். வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் வாயிலாக ரோட்டோரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும். இதற்கான மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன என்றனர்.

    ×