search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "preparatory work"

    • பனியன் தொழில், விசைத்தறி, நூற்பாலை தொழில்களும் அதிகம் இருக்கிறது.
    • ஏற்கனவே இயங்கும் 7 துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளன.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் விவசாயமும், தொழில்வளமும், வேலை வாய்ப்பும் மிகுந்த மாவட்டமாக இருக்கிறது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக பனியன் தொழில், விசைத்தறி, நூற்பாலை தொழில்களும் அதிகம் இருக்கிறது.தொழில் வளர்ச்சி காரணமாக திருப்பூர் மாவட்டத்துக்கான மின்தேவையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அவ்வகையில் இம்மாவட்டத்தில் மட்டும் 13 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்து ஆயத்தப் பணியும் துவங்கியுள்ளது.

    அதன்படி காங்கயம் பெரியார் நகரில் ரூ. 1.62 கோடி மதிப்பில், பல்லடம் நாரணாபுரத்தில் 2.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு துணை மின்நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.பல்லடம் - முத்தணம்பாளையம் கிராமம், அமராவதிபாளையம், உகாயனூர் கிராமத்தில் துணை மின்நிலையங்கள் அமைய தலா 2 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் வடக்கு காளிபாளையம் கிராமம் தாண்டாக்கவுண்டன்பாளையம், நெருப்பெரிச்சல், காவிலிபாளையம், பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட, அணைப்பாளையம், திருப்பூர் வடக்கு தொகுதி, கூலிபாளையத்திலும் துணை மின்நிலையம் அமைய உள்ளது.காங்கயம் மடவிளாகம், கத்தாங்கன்னி, கம்பளியாம்பட்டி பகுதிகளில் துணை மின் நிலையம் அமைக்க இடம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    பல்லடம் - காங்கயம் ரோடு துணை மின்நிலையம், விஜயாபுரம் துணை மின்நிலையம், தாராபுரம் - சங்கராண்டாம்பாளையம், சக்திபாளையம் துணை மின்நிலையம் அமைக்க இடம் தேடும் பணி நடந்து வருகிறது.

    காங்கயம் தொகுதி - குறுக்கத்தி, ராசாத்தாவலசு, காடையூர், பல்லடம் - பொங்கலூர், தாராபுரம் தொகுதி- செலாம்பாளையம் துணை மின்நிலையம் அமைக்க அனுமதி பெறப்பட்டு ஆயத்த பணி துவங்கியுள்ளது.

    இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், திருப்பூர், பல்லடம், உடுமலை மின்பகிர்மான வட்டங்களில் 13 இடங்களில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். ஏற்கனவே இயங்கும் 7 துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளன. மொத்தம், 144 கோடி ரூபாய் மதிப்பில் இப்பணிகள் நிறைவு பெற்றதும் விவசாயம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்வினியோகம் மேம்படுத்தப்படும் என்றனர்.ன

    • ஒன்றியங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.
    • அரசமரம், சரக்கொன்றை, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    உடுமலை:

    தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், ஊராட்சிகளின் கட்டமைப்பு வசதி மட்டுமின்றி பசுமை நிறைந்த மாசில்லாத சுற்றுச்சூழலை உருவாக்கவும் மரம் வளர்க்கும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.ஒன்றியங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

    உடுமலை ஒன்றியத்துக்கான மரக்கன்றுகள் போடிபட்டியில் பண்ணை அமைத்து தயார் செய்யப்படுகிறது. மரக்கன்றுகள் எண்ணிக்கைக்கு தேவையான அளவு விதைகள், கன்றுகள் பராமரிப்பதற்கான மண், உரம் உள்ளிட்டவை அனைத்தும் வேலை உறுதி திட்டத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.

    திட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மரக்கன்றுகள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு அரசமரம், சரக்கொன்றை, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அதிக மரக்கன்றுகள் நடும் வகையில் இடவசதியுள்ள ஊராட்சிகளை தேர்வு செய்து மரக்கன்றுகள் வழங்கப்படும். வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் வாயிலாக ரோட்டோரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும். இதற்கான மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன என்றனர்.

    • ரெட்டவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 27 விவசாயிகளுக்கு தள்ளுபடியான கடன் தொகை கிடைக்காமல் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 1 மாதம் கடந்தும் இதுவரை உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தண்ணீர் திறப்பதற்கான எந்த ஆயத்த பணியும் நடைபெறவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் தலை மையில் விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    பேராவூணி வட்டம், ரெட்டவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் 27 விவசாயிகளுக்கு தள்ளுபடியான கடன் தொகை கிடைக்காமல் மோசடி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விவசாயிகள் புகார் செய்ததையடுத்து நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டது. எனவே மீண்டும் கைப்பற்றப்பட்ட தொகையை சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு கிடை த்திட நடவடிக்கைஎடுக்க வேண்டும்.கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்ப ட்டு 1 மாதம் கடந்தும் இதுவரை உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலிலும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலிலும்தண்ணீர் திறப்பதற்கான எந்த ஆயத்த பணியும் இதுவரை நடைபெறவில்லை.இது விவசாயிகளை கவலை யடையச் செய்துள்ளது. எனவே உடன் தூர்வாரி

    பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    ×