search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதவீதம்"

    • 160 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
    • அயோத்தி ராமர் பிரதிஷ்டை தினத்துக்கு முன்பாக 10 கோடி பேரை சந்தித்து பேச புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

    பா.ஜனதா கட்சி இந்த தடவை 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்பதை இலக்காக வைத்திருக்கிறது. இதற்காக மொத்தம் உள்ள 543 தொகுதிகளையும் தீவிரமாக பா.ஜ.க. தலைவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கடந்த தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு பார்த்து 160 தொகுதிகளில் பா.ஜனதா மிக மிக பலவீனமாக இருப்பதாக பா.ஜனதாவினர் அறிந்துள்ளனர். எனவே அந்த 160 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 55 சதவீதம் வாக்குகளை பெற்றால் மட்டுமே 350 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்ற முடியும். இதை கருத்தில் கொண்டு கூடுதலாக 10 சதவீதம் வாக்குகளை பெற வேண்டும் என்று நிர்வாகிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    பலவீனமாக உள்ள 160 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகள் தென்னிந்தியாவில் உள்ளன. அந்த 160 தொகுதிகளையும் 7 மண்டலங்களாக பிரித்து தேர்தல் ஏற்பாடுகளை செய்ய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. எனவே வரும் நாட்களில் பா.ஜ.க. நிர்வாகிகள் அதிகளவில் தென் மாநிலங்களுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    10 சதவீத வாக்குகளை கூடுதலாக பெறுவதற்காக ஒவ்வொரு பகுதியிலும் அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக வருகிற 22-ந் தேதி அயோத்தி ராமர் பிரதிஷ்டை தினத்துக்கு முன்பாக 10 கோடி பேரை சந்தித்து பேச புதிய வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பா.ஜனதா ஆட்சியின் 10 ஆண்டு சாதனைகள் பற்றி துண்டு பிரசுரங்களை நாடு முழு வதும் வீடுதோறும் கொடுப்பதை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அயோத்தி கோவில் விழாவுக்கு பிறகு ஜனவரி கடைசி வாரம் முதல் பா.ஜக. தலைவர்களின் நாடு தழுவிய பிரசாரம் தொடங்க இருப்பதாகவும் டெல்லி வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • மாணவர்களுக்கு இனி பொதுத் தோ்வு முடிவில் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும்.
    • பிப்ரவரி 15-ந் தேதி பொதுத் தோ்வுகள் தொடங்க உள்ள நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    மாணவா்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையைத் தவிா்க்கும் வகையில், தோ்வில் முதலிடம் பிடித்த மாணவா் என்பது போன்ற தனிப்பட்ட மாணவா்களின் பட்டியலை வெளியிடுவதை சி.பி.எஸ்.இ. ஏற்கெனவே நிறுத்திவிட்டது. அதன் தொடா்ச்சியாக, தற்போது ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை போன்ற விவரங்கள் வெளியீட்டையும் நிறுத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறியதாவது:-

    10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத் தோ்வு முடிவில் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும். மாணவா் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண் விவரம், ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை, அனைத்துப் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்கள் பட்டியல் போன்ற விவரங்கள் வெளியிடப்படாது.

    எனவே, உயா் கல்வி நிறுவனங்கள் அல்லது வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் சி.பி.எஸ்.இ. மாணவா்களின் பாட மதிப்பெண்களின் அடிப்படையில், அவா்கள் பெற்ற மொத்த மதிப்பெண்ணையும், மதிப்பெண் சதவீதத்தையும் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்' என்றாா்.

    சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வரும் 2024, பிப்ரவரி 15-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    • அணைகள் பாசனக் குளங்களில் நீர்மட்டம் கிடுகிடு சரிவு
    • பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு, வடகிழக்கு என இரண்டு பருவ காலங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களிலும், வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் பெய்யும்.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் பெய்ய தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமதமாக மழை தொடங்கியது. ஜூன், ஜூலை மாதங்களில் போதுமான அளவு மழை பெய்யவில்லை. சாரல் மழை மட்டுமே பெய்திருந்த நிலையில் வெயில் வாட்டி வதைத்தது.

    குமரி மாவட்டத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் 287.4 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 100 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவை விட 65 சதவீதம் குறைவாகும்.

    தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டியதை யடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலும் குறைவான அளவில் தண்ணீர் உள்ளது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணை களின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. பாசன குளங்களிலும் தண்ணீர் வேகமாக வற்ற தொடங்கி யுள்ளது.

    இதனால் கும்பபூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பரிதவிப்பில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டரில் சாகுபடி செய்யப் பட்டுள்ளது. தற்பொழுது 3 ஆயிரம் ஹெக்டரில் நெற் பயிர்கள் அறுவடை ஆகும் நிலையில் உள்ளன. மீதமுள்ள நெற்பயிர் கள்அறுவடைக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. 40 முதல் 50 நாட்கள் வரை அந்த நெற்பயிர்கள் அறு வடையாக காலதாமதம் ஏற்ப டும். எனவே பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

    பாசன குளங்களை பொருத்தமட்டில் 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்கள் உள்ளது. ஆனால் அனைத்து குளங்களிலும் தண்ணீர் குறைவாகவே காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் குளங்கள் வறண்ட நிலையில் உள்ளது. பேச்சிப்பாறை அணை இன்று காலை 28.99 அடியாக உள்ளது. அணைக்கு 333 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணை யில் இருந்து 685 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 24 அடியாக உள்ளது. அணைக்கு 32 கன அடிதண்ணீர் வந்து கொண் டிருக்கிறது.

    • பயிற்சி வகுப்புகள் வருகிற பிப்ரவரி மாதம் பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து மூன்று மாதம் நடைபெற உள்ளது.
    • கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடல் படையால் நவிக்பொது மற்றும் மாலுமி பணிகளிலும் இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் நடத்தப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற பிப்ரவரி மாதம் பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து மூன்று மாத காலத்திற்கு கடலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக நடைபெற உள்ளது.

    இதில் கலந்துகொள்ள தகுதியான மீனவர் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மேற்படி, விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவலகங்களிலும், மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள், ரேசன் கடைகள் ஆகிய இடங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் அருகாமையில் உள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவார்.

    தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும்.

    மேலும், பயிற்சிகளுக்கு மூன்று மாதங்களுக்கு மாதம் தலா ரூ. 1000 வழங்கப்படும். எனவே, 12-ம் வகுப்பு தேர்வில் மொத்த பாடங்களிலும் கூட்டு தொகையில் 50 சதவீதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இத் தகவல் இந்திய கடலோர காவல் படை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய வருகிற 12, 13 மற்றும் 26, 27 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்
    • மரணம் அடைந்தவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தால் அவற்றை நீக்க சிறப்பு முகாம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய வருகிற 12, 13 மற்றும் 26, 27 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். சிறப்பு முகாம்களில் சம்பந்தப்பட்ட நபர் நேரில் வந்து திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. திருத்தம் செய்ய வேண்டியவரின் உறவினர்களே முகாமில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தத்தை செய்யலாம். மரணம் அடைந்தவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தால் அவற்றை நீக்க சிறப்பு முகாம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வாக்காளர் பட்டிய லில் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 69 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மீதம் உள்ளவர்களின் ஆதார் எண்ணையும் வாக்காளர் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே முகாமில் பங்கேற்கும் பொதுமக்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக பொருளாதார வளர்ச்சியில் வேகமாக வளரக்கூடிய துறையாக சுற்றுலா துறை விளங்குகிறது.
    • சிறிய நாடான மாலத்தீவு 32 சதவீதம் பொருளாதார வளர்ச்சி சுற்றுலா சார்ந்தே உள்ளது.

    கும்பகோணம்:

    இந்திய பண்பாடுமற்றும் சுற்றுலா முதுநிலை ஆரா ய்ச்சி துறையின் சார்பில் கும்பகோணம் அரசுஆடவர் கல்லூரியில் உலக சுற்றுலா தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அரசினர் ஆடவர் கல்லூரி முதல்வர் (பொ) மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார்.தேர்வு கட்டுப்பாடு அதிகாரி ராமசுப்பிரமணியன், கணிதத்துறை தலைவர் குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    அனைவரையும் இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல்துறை தலைவர் முனைவர் தங்கராஜு வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக சுற்றுலா நிறுவன கிரேட் விங்ஸ் இயக்குனர் ஜாகிர் உசேன், புதுக்கோ ட்டை அரசினர் பெண்கள் கல்லூரியின் சுற்றுலாத்து றை தலைவர் நரசிம்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் .

    விழாவில் சுற்றுலா நிறுவன கிரேட் விங்ஸ் இயக்குனர் ஜாகிர் உசேன் பேசியதாவது:-

    ஆண்டுதோறும் உலக சுற்றுலா தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சுற்றுலா மறு சிந்தனை என்பதாகும். அதாவது மாற்றி சிந்திக்க வேண்டும் என்பதே.

    உலக பொருளாதார வளர்ச்சியில் வேகமாக வளரக்கூடிய துறை சுற்றுலா விளங்குகிறது.

    சுற்றுலாதுறை நிலையான வருமானத்தை தரக்கூடியது, சிறிய நாடான மாலத்தீவு 32 சதவீதம் பொருளாதார வளர்ச்சி சுற்றுலா சார்ந்தே உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முதுநிலை சுற்றுலா ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள், துறை தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் உதவி பேராசிரியர் லதா நன்றி கூறினார்.

    • மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 82 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.
    • வேறு வேறு துறைகள் என்றாலும் ஆன்மீக அறிவியல் குறித்து ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் புகழ்பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் நிறுவனத்தின் சிறப்பு பேராசிரியருமான டாக்டர் சிவன் தனது மனைவி மாலதியுடன் சிறப்பு வழிபாடு மற்றும் ஆயுஷ் ஹோம பூஜையில் பங்கேற்றார். தொடர்ந்து மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த தர்மபுரம் ஆதின மடத்தில் 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்–சாரியார் சுவாமிகளை சந்தித்து குடும்பத்துடன் ஆசி பெற்றார். அவருக்கு ஆதினம் சார்பில் நினைவு பரிசாக திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய சிவன், தருமபுரம் ஆதீனம் நாட்டின் தொன்மையான மடமாகும். இது சைவத்துடன் தமிழையும் வளர்த்து வருவது மகிழ்ச்சிக்குரியது. நமது நாடு விண்வெளி துறையில் மட்டுமல்லாது அணுசக்தி துறை, வேளாண் துறை, வேளாண் அறிவியல் துறை ரசாயனத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டு வருகிறது. விரைவில் இந்தியா உலகத்தில் முதன்மையான நாடாக உருமாறும்.

    தற்போது மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 82 சதவீத பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. விரைவில் 100 சதவீதம் என்ற இலக்கை எட்டும், மாணவர்கள் தங்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்புள்ள துறைகளை தேர்ந்தெடுத்து ஆழ்ந்து படிக்க வேண்டும். அறிவியலும் ஆன்மீகமும் வேறு வேறு துறைகள் என்றாலும் ஆன்மீக அறிவியல் குறித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

    • குமரி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள் உள்ளது.இந்த மையங்களில் பல அங்கன்வாடிகள் சேதமடைந்து காணப்படுகிறது
    • கடலோரப் பகுதியில் உள்ள சாலையின் அடியில் குடிநீர் திட்டத்திற்காக பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு அடிக்கடி தண்ணீர் வெளியேறி வருகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடந்தது.விஜய் வசந்த் எம்.பி. தலைமை தாங்கினார்.கலெக்டர் அரவிந்த் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தளவாய் சுந்தரம், பிரின்ஸ், ராஜேஷ் குமார், மேயர் மகேஷ் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பேசுகை யில், குமரி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள் உள்ளது.இந்த மையங்களில் பல அங்கன்வாடிகள் சேத மடைந்து காணப்படுகிறது. இருக்கைகள், மின்விளக்கு வசதி இல்லாமல் உள்ளது. அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புத்தன்அணை குடிநீர் திட்டத்திற்காக இறச்சகுளம் சாலை தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகிறது. அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. நாகர்கோவில் நகர மக்க ளுக்கு 7 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. பேசுகையில் குமரி மாவட்டத்தில் அங்கன்வாடி கட்டிடங்கள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. வாடகை கட்டிடத்தில் செயல்படும் அங்கன்வாடி கட்டிடங்களை மாற்றிவிட்டு நிரந்தர கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்பொழுது சேதம் அடைந்த பள்ளிகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளிக் கூடங்கள் சேதம டைந்து பராமரிப்பின்றி உள்ளது.அவற்றை பரா மரிக்க போதுமான நிதி ஒதுக்க வேண்டும்.

    கடலோரப் பகுதியில் உள்ள சாலையின் அடியில் குடிநீர் திட்டத்திற்காக பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு அடிக்கடி தண்ணீர் வெளியேறி வருகிறது. இத னால் விபத்துகள் நடந்து வருகிறது.

    எனவே சாலையின் நடுவே போடப்பட்டுள்ள சிமெண்ட் பைப்புகளை அகற்றி விட்டு இரும்பு பைப்புகள் அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    பிரின்ஸ் எம்.எல்.ஏ. கூறுகையில், இரணியல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் எந்த ஆண்டு முடிவடையும். ஏற்கனவே கடந்த கூட்டத்தில் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் தற்பொழுது வரை பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை. இந்த குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பரசேரி- இரணியல் சாலையும் மோசமாக உள்ளது. கட்டிமாங்கோடு நொட்டாங்கோடு பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை என்றார்.

    இதற்கு பதிலளித்து கலெக்டர் அரவிந்த் பேசு கையில், குமரி மாவட்டத்தில் பள்ளிக்கட்டிடங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளது.

    மேலும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு அதை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.பள்ளி கட்டிடங்களை பராமரிப்பதற்கு அனைத்து துறைகளின் சார்பிலும் நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

    புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. இந்த பணியை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.அதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகள் முடிக்கப்படும் போது பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும்.

    கடற்கரை சாலையில் குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்டு உள்ள சிமெண்ட் பைப்புகளை அகற்றிவிட்டு இரும்பு பைப்புகள் அமைப்பதற்கு 8 கிலோ மீட்டர் தூரத்திற்குதிட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது என்றார்.

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தர்ஷினி முதலிடமும், சவுமியா இரண்டாமிடமும், ஐஸ்வர்யா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
    • 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாமிதா பானு முதலிடமும், சிவஸ்ரீயாழினி மற்றும் அமிர்தினி இருவரும் இரண்டாமிடமும், தாஜுல்நசிபா மற்றும் ஜாபிரா இருவரும் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

    சீர்காழி:

    தருமபுரம் ஆதீன திருமடத்தால் நடத்தப்படும் வைத்தீஸ்வரன்கோவில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 2021-2022ம் கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தர்ஷினி (474/500) முதலிடமும், சவுமியா (472/500) இரண்டாம் இடமும், ஐஸ்வர்யா (468/500) மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

    11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் உமாமகேஸ்வரி (583/600) முதலிடமும், கங்கா (553/600) இரண்டாம் இடமும், ரெஜீனா (544/600) மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பாமிதா பானு (575/600) முதலிடமும், சிவஸ்ரீயாழினி மற்றும் அமிர்தினி இருவரும் (460/600) இரண்டாம் இடமும், தாஜுல்நசிபா மற்றும் ஜாபிரா இருவரும் (459/600) மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

    சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளியி ன் ஆட்சி மன்ற குழுத்த லைவர்ராஜேஷ்,செயலர் பாஸ்கரன், பொருளாளர் பாஸ்கரன், ஆதீன பொது மேலாளர் கோதண்ட ராமன், பள்ளி முதல்வர் ஜெகதீ ஷ்குமார், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டினர். சிறப்பிடம் பெற்ற மாணவ}மாணவியரை தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் பாராட்டி அருளாசி வழங்கினார்.

    • சேலம் மாவட்டத்தில் 158 அரசுப் பள்ளிகளை சார்ந்த 22 ஆயிரத்து 955 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்.
    • அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் தேர்ச்சி 83.16 சதவீதம்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 158 அரசுப் பள்ளிகளை சார்ந்த 22 ஆயிரத்து 955 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 239 மாணவிகளும், 7 ஆயிரத்து 851 மாணவர்களும் என 19 ஆயிரத்து 90 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 83.16 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

    கடந்த 2020-ம் ஆண்டு அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் தேர்ச்சி 93.10 சதவீதம் ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 83.16 ஆக குறைந்துள்ளது.

    மாவட்டத்தில் உள்ள 158 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி 7 பள்ளிகள் பெற்றுள்ளது. அவைகள், ஏகலைவா உண்டு உறைவிட மகளிர் மேல்நிலைப்பள்ளி அபிநவம் மற்றும் கொங்கணாபுரம், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, எடப்பாடி, காடையாம்பட்டி மாதிரிப் பள்ளிகள் ஆகிய 7 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை நிகழ்த்தி உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு 9 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • குமரி மாவட்டத்தில் 95.08 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
    • புள்ளியியலில் 145 பேர் தேர்வு எழுதியதில் 145 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. குமரி மாவட்டத்தில் 95.08 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மொழிப்பாடத்தில் 22 ஆயிரத்து 963 பேர் தேர்வு எழுதியதில் 22 ஆயிரத்து 128 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 96.36 ஆகும்.

    ஆங்கில பாடத்தில் 22 ஆயிரத்து 963 பேர் தேர்வு எழுதியதில் 22 ஆயிரத்து 293 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.08 சதவீதம் ஆகும்.

    கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் 5 ஆயிரத்து 651 பேர் தேர்வு எழுதியதில் 5 ஆயிரத்து 642 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 99.84 சதவீதம் ஆகும்.

    கணிதத்தில் 13 ஆயிரத்து 806 பேர் தேர்வு எழுதியதில் 13 ஆயிரத்து 498 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 97.77 சதவீதம் ஆகும். இயற்பியலில் 17 ஆயிரத்து 534 பேர் தேர்வு எழுதியதில் 17 ஆயிரத்து 183 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98 சதவீதமாகும்.

    வேதியலில் 17 ஆயிரத்து 534 பேர் தேர்வு எழுதியதில் 17 ஆயிரத்து 181 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.99 சதவீதமாகும்.

    உயிரியலில் 7 ஆயிரத்து 837 பேர் தேர்வு எழுதியதில் 7 ஆயிரத்து 741 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.78 சதவீதம் ஆகும். தாவரவியலில் 4 ஆயிரத்து 382 பேர் தேர்வு எழுதியதில் 4 ஆயிரத்து 188 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.57 சதவீதமாகும்.

    விலங்கியலில் 4 ஆயிரத்து 362 பேர் தேர்வு எழுதியதில் 4 ஆயிரத்து 199 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.82 சதவீதம் ஆகும்.புள்ளியியலில் 145 பேர் தேர்வு எழுதியதில் 145 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 100 சதவீதம் ஆகும்.

    ×