search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் அருளாசி
    X

    பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் அருளாசி வழங்கினார்.

    பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் அருளாசி

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தர்ஷினி முதலிடமும், சவுமியா இரண்டாமிடமும், ஐஸ்வர்யா மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
    • 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாமிதா பானு முதலிடமும், சிவஸ்ரீயாழினி மற்றும் அமிர்தினி இருவரும் இரண்டாமிடமும், தாஜுல்நசிபா மற்றும் ஜாபிரா இருவரும் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

    சீர்காழி:

    தருமபுரம் ஆதீன திருமடத்தால் நடத்தப்படும் வைத்தீஸ்வரன்கோவில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 2021-2022ம் கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தர்ஷினி (474/500) முதலிடமும், சவுமியா (472/500) இரண்டாம் இடமும், ஐஸ்வர்யா (468/500) மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

    11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் உமாமகேஸ்வரி (583/600) முதலிடமும், கங்கா (553/600) இரண்டாம் இடமும், ரெஜீனா (544/600) மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பாமிதா பானு (575/600) முதலிடமும், சிவஸ்ரீயாழினி மற்றும் அமிர்தினி இருவரும் (460/600) இரண்டாம் இடமும், தாஜுல்நசிபா மற்றும் ஜாபிரா இருவரும் (459/600) மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

    சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளியி ன் ஆட்சி மன்ற குழுத்த லைவர்ராஜேஷ்,செயலர் பாஸ்கரன், பொருளாளர் பாஸ்கரன், ஆதீன பொது மேலாளர் கோதண்ட ராமன், பள்ளி முதல்வர் ஜெகதீ ஷ்குமார், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டினர். சிறப்பிடம் பெற்ற மாணவ}மாணவியரை தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேரில் பாராட்டி அருளாசி வழங்கினார்.

    Next Story
    ×