search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாயம்"

    • தூத்துக்குடி ஜெப கூட்டம்
    • ஜெப கூட்டத்திற்கு சென்ற தாய்-மகன் மாயம்


    திருச்சி, 


    திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் ராஜ். இவரது மனைவி ஜெயராணி (வயது 57). இந்த தம்பதியரின் மகன் அந்தோணி விஜய் (27).


    தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு ஜெபக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெயராணி, தனது மகன் ஆண்டனி உடன் சென்றார்.பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஜெயராணியின் மூத்த மகன் ஆரோக்கிய பெலிக்ஸ் பாலக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் தாய் மகன் இருவரையும் தேடி வருகின்றனர்


    • திருச்சியில் மாயம்
    • 2 கல்லூரி மாணவிகள் உள்பட 4 பேர் மாயம்


    திருச்சி


    துறையூர் சிங்களாந்தபுரம் முத்துராஜா தெரு பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகன் சந்துரு (வயது19 ). இவர் கண்ணனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.


    2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்ற அந்த மாணவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் இல்லை. அதைத் தொடர்ந்து பெரியண்ணன் துறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.


    உப்பிலியபுரம் கொப்பம்பட்டி ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகள் நித்யா (19).இவர் துறையூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டுச் சென்ற அவர் மாலை வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    நர்சிங் மாணவி


    திருச்சி வையம்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை. இவர் வையம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 11-ந் தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது தாயார் தெக்கம்மாள் வையம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.


    போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.


    இதனை போல மணச்சநல்லூர் திருப்பட்டூர் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மகள் அபிப்பிரியா (19).


    இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் படித்து வந்தார். பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற அபிப்பிரியா மாயமானார். இது குறித்து அவரது சகோதரர் கண்ணன் சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைய நடத்தி வருகிறார்கள்.





    • கல்லூரி மாணவி உள்பட 6 பேர் மாயமானார்கள்
    • இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தம்பிபட்டி பசும்பொன்நகரை சேர்ந்தவர் முருகேசுவரி. இவரது மகள் காளீஸ்வரி (வயது25). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற காளீஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு தேவதானம் பி.எஸ்.ஆர். நகரை சேர்ந்தவர் கந்த கிருஷ்ணன். இவரது மகள் சுபலட்சுமி(23). இவர் ராஜபாளையத்தில் உள்ள கல்லூரியில் பி.எட். படித்து வந்தார். சம்பவத் தன்று கல்லூரிக்கு செல்வ தாக கூறிவிட்டு சென்ற சுபலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தூர் புறக்காவல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

    விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த வர் அழகர்சாமி. இவரது மகள் மீனா(27). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது 7 வயது மகள் ஜனஸ்ரீயுடன் தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று முத்தால் நகரில் உள்ள சகோதரி வீட்டுக்கு குழந்தையுடன் சென்ற மீனா திடீரென மாயமானார். பாண்டியன் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மீனா மற்றும் குழந்தையை தேடி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் வடக்கு தெருவை சேர்ந்த 17 வயதுடைய பெண் 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமானார். அருப்புகோட்டை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சாத்தூர் வெங்கடாசல புரத்தை சேர்ந்தவர் வெள் ளைச்சாமி. இவரது மகள் திவ்யா(20). பட்டதாரியான இவர் சம்பவத்தன்று கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    உறவினர் மற்றும் நண்பர்க ளின் வீடுகளில் அபர்ணா வை தேடினர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கீழ் கவரப் பட்டை சேர்ந்த வர் சுப்பிர மணி யன். இவரது மகள் அபர்ணா (வயது 22). இவர் கடந்த 14-ந் தேதி இரவு 7.30 மணி அளவில் வீட்டிலிருந்து தோட் டத்திற்கு சென்றவர் வெகு நேரமாகி யும் வீடு திரும்ப வில்லை.

    அவரது பெற் றோர் உறவினர் மற்றும் நண்பர்க ளின் வீடுகளில் அபர்ணா வை தேடினர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.இது குறித்து அபர்ணா வின் பெற்றோர் பண்ருட்டி போலீசில் புகார் செய்த னர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன இளம் பெண்ணை தேடிவருகின்றனர்.

    • திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் காந்திபுரம் தெருவை சேர்ந்தவர் செல்வலட்சுமி. இவரது 32 வயது மகள் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். செல்வலட்சுமி அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்தார். வருகிற 27-ந் தேதி கோவையை சேர்ந்த வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் இளம்பெண் ஊருக்கு வந்தார். செல்வலட்சுமி அழைப்பிதழ்கள் கொடுப்பதற்காக வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்தார். அப்போது மகள் வீட்டில் இல்லை.

    எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த் தும் பலனில்லை. இதற்கி டையே சகோதரியின் கணவரிடம் செல்போனில் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என கூறிவிட்டு போனை அணைத்து வைத்து விட்ட தாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மகளை கண்டுபிடித்து தருமாறு விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் செல்வலட்சுமி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    மற்றொரு சம்பவம்

    நரிக்குடி அருகே உள்ள புரையறைவாசித்தான் பகுதியை சேர்ந்தவர் பிச்சை மணி. இவரது மனைவி லாவண்யா(25). குடும்ப பிரச்சினையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் லாவண்யா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை யடுத்து நரிக்குடி போலீஸ் நிலையத்தில் பிச்சை மணி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவை தேடி வருகின்றனர்.

    • கரூர் ஆண்டாங்கோவில் அம்பாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்,  

    கரூர் ஆண்டாங்கோவில் அம்பாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 67) அரிசி கடை உரிமையாளர். கடந்த 11-ந்தேதி வீட்டில் இருந்து அரிசி கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள், நண்பர்களது வீடுகளுக்கும் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த செல்வராஜின் மனைவி மணிமேகலை, போலீசில் புகார் செய்தார் அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் தொட்டியில் கிடந்தது எலும்புதானா ? அல்லது வேறு ஏதாவதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அதிகாரிகள் விரைந்து கண்டு பிடித்து தருவதாக உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வெள்ளமடை ஊராட்சிக்குட்பட்டது காளிபாளையம் கிராமம்.

    இந்த கிராமத்தின் மேற்கு பகுதியில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர் தேக்க தொட்டியில் இருந்து காளிபாளையம் கிராமம் முழுவதற்கும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மேல்நிலைதொட்டி பல நாட்களாகவே மூடி இல்லாமல் மூடப்படாமல் திறந்த நிலையிலேயே இருக்கிறது.

    நேற்று காலை வெள்ளமடை ஊராட்சி சார்பில் பணியாளர்கள் சிலர் மேல்நிலை தொட்டியை சுத்தம் செய்வதற்காக வந்தனர்.அவர்கள் தொட்டியின் மீது ஏறி உள்ளே சென்று சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.அப்போது தொட்டிக்குள் எலும்புதுண்டுகள் கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சியாகினர்.

    உடனடியாக சம்பவம் குறித்து, ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரமா, ஊராட்சித்தலைவர் பிரபாகரன் உட்பட வார்டு உறுப்பினர்கள் விரைந்து வந்தனர்.

    பின்னர் அவர்கள் தொட்டியை பார்த்தபோது அங்கிருந்த எலும்பு துண்டுகள் மாயமாகி விட்டன. அக்கம்பக்கம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    நாய்கள் அதனை எடுத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது. இருந்தபோதிலும் அதனை தேடும் பணி நடக்கிறது.

    இந்த தகவல் அறிந்ததும் ஊராட்சிகள் உதவி இயக்குநர் நேரில் வந்து விசாரணை செய்தார். தொடர்ந்து மேல்நிலை தொட்டிக்கு மூடி போட ஏற்பாடு செய்தார்.

    இதனை தொடர்ந்து வட்டார சுகாதார ஆய்வாளர் தலைமையிலான சுகாதார குழுவினர் வந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்து பிளிசிங் பவுடர் அடித்தனர். மேலும் தொட்டியில் கிடந்தது எலும்புதானா ? அல்லது வேறு ஏதாவதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை காளிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் குடிநீர் தொட்டியின் முன்பு திரண்டனர். பின்னர் தொட்டியில் கிடந்த எலும்பை கண்டுபிடித்து தர வேண்டும் என கூறி சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி.அருண்கு மார், பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையிலான போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தொட்டியில் கிடந்த எலும்பு எப்படி மாயமானது என்பது தெரிய வேண்டும். அதனை உடனே கண்டு பிடித்து தர வேண்டும். அதுவரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என மக்கள் தெரிவித்தனர். அதிகாரிகள் விரைந்து கண்டு பிடித்து தருவதாக உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    • கரூரில் வியாபாரி உள்பட 2 பேர் மாயம்
    • பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம், தரகம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 38), கூலி தொழிலாளியான இவர், சம்பவத்தன்று தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது மனைவி மனைவி சித்ராதேவி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை தேடிவருகின்றனர். இதே போல் கரூர் சணப்பிரட்டி அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 43), துணி வியாபாரியான இவர், சம்பவத்தன்று வியாபாரத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி யசோதை கொடுத்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டைவிட்டு வெளியே சென்ற டிரைவர் உள்பட 2 பேர் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது43). நோய் கொடுமை யால் அவதிப்பட்டு வந்தார். சின்னமனூரில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.

    சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் யுவன் (44). லாரி டிரைவர். சம்பவத்தன்று கேரளாவுக்கு லோடு ஏற்றி சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. லாரி அலுவலகத்தில் விசரித்தபோது யுவன் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றது தெரிய வந்தது.

    பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இந்த 2 சம்பவங்கள் குறித்து சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    • குளச்சல் மகளிர் போலீசில் மாணவியின் தாயார் புகார் செய்துள்ளார்.
    • ஒரு வாலிபரை, மாணவி காதலித்து வந்ததாகவும் இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    குளச்சல் : 

    வில்லுக்குரியை சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி மாணவி மாயமாகி விட்டார். இவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காதால் குளச்சல் மகளிர் போலீசில் மாணவியின் தாயார் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் மாணவி மாயம் குறித்து குளச்சல் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அழகிய பாண்டிபுரம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை, மாணவி காதலித்து வந்ததாகவும் இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர் ஊராட்சிகுழந்தையுடன் பெண் மாயம்

    கரூர்,  

    குளித்தலை அடுத்த, கூடலூர் ஊராட்சி ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீரங்கம் (வயது 37), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (22).

    இவர்களுக்கு விகா என்ற 9 மாத கைக்குழந்தை உள்ளது. கடந்த, 5-ந் தேதி காலை, 11 மணியளவில் பாக்கியலட்சுமி தன் குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் வரவில்லை.

    பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

    கரூர் மாவட்டம், ராயனுார் வேலக வுண்டனுாரை சேர்ந்தவர் ஆனந்த் பொன்ராஜ் (வயது 41). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை நண்பர்கள்,உறவினர்கள் வீடுகளில் தேடிய போது அவர் அங்கும் செல்லவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கேன்டில் டிரஸ்ட் காப்பகத்தில் கடந்த, 2022 முதல் தங்கியிருந்தான்.
    • தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கரூர், 

    கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப் பாளையம் பகுதியை சேர்ந்த சிறுவன் கரூர் அருகே காந்தி கிராமத்தில் உள்ள கேன்டில் டிரஸ்ட் காப்பகத்தில் கடந்த, 2022 முதல் தங்கியிருந்தான். இந்நிலையில் கடந்த, 6-ந்தேதி காப்பகத்தில் இருந்து வெளியே சென்ற அவன், திரும்பி வரவில்லை. இதுகுறித்து, காப்பகத்தின் இயக்குனர் தர்மராஜ், கொடுத்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×