search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தையுடன் பெண் மாயம்
    X

    குழந்தையுடன் பெண் மாயம்

    கூடலூர் ஊராட்சிகுழந்தையுடன் பெண் மாயம்

    கரூர்,

    குளித்தலை அடுத்த, கூடலூர் ஊராட்சி ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீரங்கம் (வயது 37), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (22).

    இவர்களுக்கு விகா என்ற 9 மாத கைக்குழந்தை உள்ளது. கடந்த, 5-ந் தேதி காலை, 11 மணியளவில் பாக்கியலட்சுமி தன் குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வெகுநேரமாகியும் வரவில்லை.

    பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

    கரூர் மாவட்டம், ராயனுார் வேலக வுண்டனுாரை சேர்ந்தவர் ஆனந்த் பொன்ராஜ் (வயது 41). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை நண்பர்கள்,உறவினர்கள் வீடுகளில் தேடிய போது அவர் அங்கும் செல்லவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×