search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாபாரி உள்பட 2 பேர் மாயம்
    X

    வியாபாரி உள்பட 2 பேர் மாயம்

    • கரூரில் வியாபாரி உள்பட 2 பேர் மாயம்
    • பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    கரூர் மாவட்டம், தரகம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 38), கூலி தொழிலாளியான இவர், சம்பவத்தன்று தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது மனைவி மனைவி சித்ராதேவி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியை தேடிவருகின்றனர். இதே போல் கரூர் சணப்பிரட்டி அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 43), துணி வியாபாரியான இவர், சம்பவத்தன்று வியாபாரத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி யசோதை கொடுத்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×