என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி உள்பட 6 பேர் மாயம்
- கல்லூரி மாணவி உள்பட 6 பேர் மாயமானார்கள்
- இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தம்பிபட்டி பசும்பொன்நகரை சேர்ந்தவர் முருகேசுவரி. இவரது மகள் காளீஸ்வரி (வயது25). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற காளீஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு தேவதானம் பி.எஸ்.ஆர். நகரை சேர்ந்தவர் கந்த கிருஷ்ணன். இவரது மகள் சுபலட்சுமி(23). இவர் ராஜபாளையத்தில் உள்ள கல்லூரியில் பி.எட். படித்து வந்தார். சம்பவத் தன்று கல்லூரிக்கு செல்வ தாக கூறிவிட்டு சென்ற சுபலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தூர் புறக்காவல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த வர் அழகர்சாமி. இவரது மகள் மீனா(27). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது 7 வயது மகள் ஜனஸ்ரீயுடன் தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று முத்தால் நகரில் உள்ள சகோதரி வீட்டுக்கு குழந்தையுடன் சென்ற மீனா திடீரென மாயமானார். பாண்டியன் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மீனா மற்றும் குழந்தையை தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் வடக்கு தெருவை சேர்ந்த 17 வயதுடைய பெண் 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்தார். சம்பவத்தன்று அவர் திடீரென மாயமானார். அருப்புகோட்டை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சாத்தூர் வெங்கடாசல புரத்தை சேர்ந்தவர் வெள் ளைச்சாமி. இவரது மகள் திவ்யா(20). பட்டதாரியான இவர் சம்பவத்தன்று கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






