search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில்  2 கல்லூரி மாணவிகள் உள்பட 4 பேர் மாயம்
    X

    திருச்சியில் 2 கல்லூரி மாணவிகள் உள்பட 4 பேர் மாயம்

    • திருச்சியில் மாயம்
    • 2 கல்லூரி மாணவிகள் உள்பட 4 பேர் மாயம்


    திருச்சி


    துறையூர் சிங்களாந்தபுரம் முத்துராஜா தெரு பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகன் சந்துரு (வயது19 ). இவர் கண்ணனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.


    2 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்ற அந்த மாணவன் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் இல்லை. அதைத் தொடர்ந்து பெரியண்ணன் துறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.


    உப்பிலியபுரம் கொப்பம்பட்டி ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகள் நித்யா (19).இவர் துறையூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டுச் சென்ற அவர் மாலை வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    நர்சிங் மாணவி


    திருச்சி வையம்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை. இவர் வையம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 11-ந் தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது தாயார் தெக்கம்மாள் வையம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.


    போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.


    இதனை போல மணச்சநல்லூர் திருப்பட்டூர் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மகள் அபிப்பிரியா (19).


    இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் படித்து வந்தார். பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற அபிப்பிரியா மாயமானார். இது குறித்து அவரது சகோதரர் கண்ணன் சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைய நடத்தி வருகிறார்கள்.





    Next Story
    ×