என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாயம்"
- கல்லூரி மாணவி-இளம்பெண் உள்பட 3 பேர் மாயமாகினர்.
- இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி ஜெயராம் நகரை சேர்ந்தவர் முத்துசெல்வி. இவரது மகள் அபிதா(வயது19), தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலையில் வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். கல்லூரிக்கு செல்லவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டி ருந்தது. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்க ளில் தேடிப்பார்த்தும் பலனில்லை.
இதுகுறித்து அருப்புக் கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் முத்துசெல்வி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரது மகள் சுபலட்சுமி(24). அங்குள்ள ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். பெற்றோர்கள் இவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த நிலையில் சுபலட்சுமி செல்போனில் அதிகநேரம் மூழ்கியிருந்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் பலனில்லை.
இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சாத்தூர் அருகே உள்ள சின்னகொள்ளபட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்புத்தாய்(73). இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மகன் கணேசன் கொடுத்த புகாரின்பேரில் இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- காட்டாற்று வெள்ளம் மோட்டார் சைக்கிளுடன் அடித்து சென்றது
- மாயமான பெண்ணை தேடும் பணி தீவிரம்
கோவை,
கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையாம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 72). சித்தா டாக்டர். இவரது மனைவி தனலட்சுமி (62).
சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சிறுமுகை அருகே உள்ள தென் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக புறப்பட்டனர். கட்டாஞ்சி மலை அருகே சென்ற போது அங்கு கனமழை செய்தது. அங்குள்ள தரை பாலத்தில் சென்ற போது திடீரென காட்டு ஆற்று வெள்ளம் 2 பேரையும் மோட்டார் சைக்கிளுடன் அடித்து சென்றது.
அப்போது வெங்கடேசன் கரையோரம் இருந்த செடிகளை பிடித்து தப்பினார். ஆனால் அவரது மனைவியை வெள்ளம் அடித்து சென்றது.
இது குறித்து அவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியை தேடி வருகின்றனர்.
- வீட்டைவிட்டு வெளியே சென்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை.
- புகாரின்பேரில் போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள பங்காளபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு ராஜேஸ்வரி (வயது27) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறி பழனியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு மாயமானார்.
இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- அவர் மாயமான குறித்து மண்டைக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
- தனிஷா குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு அருகே உள்ள கோவிலான் விளை யை சேர்ந்தவர் ஜாண்சன். டெம்போ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் தனிஷா(வயது 19) பக்கத்து ஊரிலுள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று வழக்கம்போல் காலை கல்லூரிக்கு செல்ல வீட்டிலிருந்து தனிஷா புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. மாலை வெகு நேரமாகியும் வீட்டிற்கும் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடினர். ஆனால் தனிஷா குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.ஆகவே அவர் மாயமான குறித்து மண்டைக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி யை தேடி வருகின்றனர்.
- வீட்டில் வந்து பார்த்தபோது, மனைவி, குழந்தைகளை காணவில்லை.
- தோகைமலை அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர், வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை என தெரியவந்தது
கரூர்
தோகைமலை, நாடக்காப்பட்டி காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 32). இவர் கொத்தனாராக பணிபுரிகிறார். இவரது மனைவி மீனா(27). இவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் களுக்கு சிவக்குமார், சஞ்சித்குமார் என இரு குழந்தைகள் உள்ளனர். கணவர் மாரியப்பன் திருச்சிக்கு கொத்தனார் வேலைக்கு சென்று விட்டு, இரவு வீட்டில் வந்து பார்த்தபோது, மனைவி, குழந்தைகளை காணவில்லை. மதியம், தோகைமலை அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறு விட்டு சென்றவர், வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை என தெரியவந்தது. தோகைமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தேடி வருகின்றனர்.
- ஒரு நர்சிங் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார்
- வழக்குப்பதிவு செய்து காணாமல்போன இளம்பெண்ணை தேடி வருகிறார்.
ராஜாக்கமங்கலம் :
வெள்ளிச்சந்தை அருகே சடையால்புதூரை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு. கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயபாரதி (வயது 25). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ஜெயபாரதி மறவன் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு சென்ற அவர் மாலை வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. மணிகண்ட பிரபு அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இச்சம்பவம் குறித்து மணிகண்ட பிரபு வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன இளம்பெண்ணை தேடி வருகிறார்.
- எல்லகோயில்பட்டி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி திடீர் மாயமானார்
- குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்,
குளித்தலை அடுத்த, கள்ளை பஞ்., எல்லகோயில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 50), கூலி தொழிலாளி. இவரது மகன் பழனிவேலு, கடந்த, 10-ந் தேதி காலை, 10 மணியளவில் தோகைமலைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை.பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து கணேசன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்.,ராக்கம்பட்டியை சேர்ந்தவர் கருப்பன் (வயது 48), கூலி தொழிலாளி. இவரது மகள் அந்த பகுதி பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று இவரை காணவில்லை. இதுபற்றி கருப்பன் அளித்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 7-ந் தேதி லாக்கர் சாவி காணாமல் போயிருந்தது.
- செல்வபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை,
கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா அம்பிகை (22). இவர் செல்வபுரம் போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:-
கடந்த 5.10.23 அன்று வீட்டில் உள்ள என்னுடைய நகைகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் போட்டு பீரோவில் உள்ள லாக்கரில் வைத்து பூட்டி சாவியை பீரோவில் வேறு ஒரு இடத்தில் வைத்திருந்தேன்.
அடுத்த நாள் நான் ஆஸ்பத்திரிக்கு செல்லவேண்டும் என்பதால் பீரோவை பூட்டி விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டேன். 7-ந் தேதி பீரோவை திறந்து லாக்கர் சாவியை எடுக்க பார்த்தபோது லாக்கர் சாவி காணாமல் போயிருந்தது.
இது குறித்து கணவரிடம் சொன்னேன், கணவரும் லாக்கரை உடைத்து பார்த்தபோது, பீரோ லாக்கரில் வைத்திருந்த பிளாஸ்டிக் பெட்டியில் இருந்த மதிப்புள்ள 26¾ பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் வீடு முழுவதும் தேடினோம். எங்குமே கிடைக்காததால் செல்வபுரம் போலீசில் புகார் செய்தேன் என்று கூறினார். புகாரை பதிவு செய்த செல்வபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பட்டியில் அடைக்கப்பட்ட ஆடு ஒன்றை காணவில்லை
- போலீசில் புகார் கொடுத்தார்
- வழக்கு பதிவு செய்து விசாரணை
- தோகைமலை அருகே திருமணம் ஆன 5 மாதத்தில் தந்தை வீட்டிற்கு வந்த பெண் மாயமானார்
- தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்,
தோகைமலை அருகே தெற்கு வருந்திப்பட்டியில் திருமணம் ஆன 5 மாதத்தில் தந்தை வீட்டிற்கு வந்த பெண் மாயமானார்.
தோகைமலை அருகே தெற்கு வருந்திப்பட்டி வீரமலை என்பவரது மகள் சரண்யா (வயது 22). இவர், கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள கீழக்கல்மேடு பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரை திருமணம் செய்து உள்ளனர். குமரேசன், தற்போது காரைக்கால் பகுதியில் வெல்டி ங்வேலை செய்கி றார்.
இந்நிலையில் கடந்த 14-ந் தேதி, தோகைமலை அருகே வருந்திப்பட்டியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சரண்யா வந்ததாக தெரிகிறது. பின்னர் அன்று இரவு வீட்டில் தூங்கிய சரண்யா, திடீர் என்று மாயமாகி உள்ளார். அதி காலை 5 மணிக்கு சரண்யா வின் சகோதரர் சக்திவேல் எழுந்து பார்த்த போது தூங்கிக்கொண்டு இருந்த சரண்யா மாயமா னதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தங்களது உறவி னர்கள் வீடுகள் உள்பட பல்வேறு பகுதிகளில் தேடிபார்த்தும் சரண்யா கிடைக்கவில்லை.
இதனால் தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடைபெற்று 5 மாதத்தில் பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வெவ்வேறு சம்பவம்
- திருச்சியில் 2 பெண்கள் உள்பட 3 பேர் மாயம்
- போலீசார் விசாரணை
திருச்சி,
திருச்சி சுப்பிரமணியபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய அமல்தாஸ். இவரது மனைவி இந்திரா பிரியதர்ஷினி (வயது 34) இவர் கருரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி திருச்சி மத்திய பேருந்து சென்றவர் கரூர் போய் சேரவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து ஆரோக்கிய அமல்தாஸ் கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்திரா பிரியதர்ஷினியை தேடி வருகின்றனர்.
இதே போன்று ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் சேர்ந்தவர் ரெங்கன் இவரது மகள் பூமாதேவி ( 14) இவர் ஸ்ரீரங்கம்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் . சம்பவத்தன்று அவரது தாய் மாரியாயி வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது மகள் பூமாதேவி காணவில்லை.
பல இடங்களில் தேடிப் பார்த்தோம் இன்னும் கிடைக்கவில்லை. இது குறித்து மாரியாயி ஸ்ரீரங்கம் அரசு போலீசில் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பூமாதேவியை கேடி வருகின்றனர்.
திருச்சி பொன்மலை சீதாபுரத்தை சேர்ந்தவர் ஜோசப் ( 69) சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற ஜோசப் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மகன் ஆரோக்கியசாமி, பொன்மலை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
கரூர்,
கரூர் மாவட்டம், சணப்பிரட்டி வெள்ளாப்பட்டி பகுதியை சேர்ந்த, ஜெயகாந்தன் மனைவி மதுமதி (வயது 26) இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த, 13-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மதுமதி, திரும்பி வர வில்லை.
உறவினர்களின் வீடுகளுக்கும், மதுமதி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கணவன் ஜெயகாந்தன், போலீசில் புகார் செய்தார். பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுமதி எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்