என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருமணம் ஆன 5 மாதத்தில் புதுபெண் மாயம்
- தோகைமலை அருகே திருமணம் ஆன 5 மாதத்தில் தந்தை வீட்டிற்கு வந்த பெண் மாயமானார்
- தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்,
தோகைமலை அருகே தெற்கு வருந்திப்பட்டியில் திருமணம் ஆன 5 மாதத்தில் தந்தை வீட்டிற்கு வந்த பெண் மாயமானார்.
தோகைமலை அருகே தெற்கு வருந்திப்பட்டி வீரமலை என்பவரது மகள் சரண்யா (வயது 22). இவர், கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள கீழக்கல்மேடு பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரை திருமணம் செய்து உள்ளனர். குமரேசன், தற்போது காரைக்கால் பகுதியில் வெல்டி ங்வேலை செய்கி றார்.
இந்நிலையில் கடந்த 14-ந் தேதி, தோகைமலை அருகே வருந்திப்பட்டியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சரண்யா வந்ததாக தெரிகிறது. பின்னர் அன்று இரவு வீட்டில் தூங்கிய சரண்யா, திடீர் என்று மாயமாகி உள்ளார். அதி காலை 5 மணிக்கு சரண்யா வின் சகோதரர் சக்திவேல் எழுந்து பார்த்த போது தூங்கிக்கொண்டு இருந்த சரண்யா மாயமா னதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தங்களது உறவி னர்கள் வீடுகள் உள்பட பல்வேறு பகுதிகளில் தேடிபார்த்தும் சரண்யா கிடைக்கவில்லை.
இதனால் தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடைபெற்று 5 மாதத்தில் பெண் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்