என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காேவையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சித்தா டாக்டரின் மனைவி மாயம்
- காட்டாற்று வெள்ளம் மோட்டார் சைக்கிளுடன் அடித்து சென்றது
- மாயமான பெண்ணை தேடும் பணி தீவிரம்
கோவை,
கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையாம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 72). சித்தா டாக்டர். இவரது மனைவி தனலட்சுமி (62).
சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சிறுமுகை அருகே உள்ள தென் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக புறப்பட்டனர். கட்டாஞ்சி மலை அருகே சென்ற போது அங்கு கனமழை செய்தது. அங்குள்ள தரை பாலத்தில் சென்ற போது திடீரென காட்டு ஆற்று வெள்ளம் 2 பேரையும் மோட்டார் சைக்கிளுடன் அடித்து சென்றது.
அப்போது வெங்கடேசன் கரையோரம் இருந்த செடிகளை பிடித்து தப்பினார். ஆனால் அவரது மனைவியை வெள்ளம் அடித்து சென்றது.
இது குறித்து அவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்