என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு சம்பவங்களில் திருச்சியில் 2 பெண்கள் உள்பட 3 பேர் மாயம் போலீசார் விசாரணை
- வெவ்வேறு சம்பவம்
- திருச்சியில் 2 பெண்கள் உள்பட 3 பேர் மாயம்
- போலீசார் விசாரணை
திருச்சி,
திருச்சி சுப்பிரமணியபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய அமல்தாஸ். இவரது மனைவி இந்திரா பிரியதர்ஷினி (வயது 34) இவர் கருரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி திருச்சி மத்திய பேருந்து சென்றவர் கரூர் போய் சேரவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து ஆரோக்கிய அமல்தாஸ் கண்டோன்மென்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்திரா பிரியதர்ஷினியை தேடி வருகின்றனர்.
இதே போன்று ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் சேர்ந்தவர் ரெங்கன் இவரது மகள் பூமாதேவி ( 14) இவர் ஸ்ரீரங்கம்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் . சம்பவத்தன்று அவரது தாய் மாரியாயி வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது மகள் பூமாதேவி காணவில்லை.
பல இடங்களில் தேடிப் பார்த்தோம் இன்னும் கிடைக்கவில்லை. இது குறித்து மாரியாயி ஸ்ரீரங்கம் அரசு போலீசில் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பூமாதேவியை கேடி வருகின்றனர்.
திருச்சி பொன்மலை சீதாபுரத்தை சேர்ந்தவர் ஜோசப் ( 69) சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற ஜோசப் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மகன் ஆரோக்கியசாமி, பொன்மலை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.






